31 Dec 2009

ந‌ண்ப‌னின் பிரிவு

ஒரு வ‌ருட‌ ந‌ட்பு தான் என்றாலும்
ஆழ‌மான‌ ந‌ட்பு...ச‌ந்தோச‌த்தையும் சுக‌த்த‌யும் ச‌ரி விகித‌த்தில் க‌ல‌ந்து கொடுத்த‌வ‌ன்

பிரிகிறேன் என்று சொன்ன‌ போது வேத‌னை என்னை ஆட் கொண்ட‌து
பிரியாதே என்றேன் முடியாது இது கால‌த்தின் க‌ட்டாய‌ம் என்றான்

ஆனால் என்னை விட‌ அரும‌யான‌ ந‌ண்ப‌ன் உன‌க்கு கிடைப்பான் என்றான்
வ‌ருத்த‌துட‌ன் விடை கொடுத்தேன்


அவ‌ன் கூறிய‌ மாதிரி புது ந‌ண்ப‌ன் கிடைத்து விட்டான்...போக‌ போக‌தான் தெரியும் இவ‌ன் அவ‌னை போல‌வா இல்லை என்றால் அவ‌னை விட‌ உய‌ர்ந்த‌வ‌னா என்று


பிரிந்த‌ நண்ப‌ன் 2009 கிடைத்த‌ ந‌ண்ப‌ன் 2010
வாருங்க‌ள் என்னுட‌ன் சேர்ந்து அவ‌னையும் உங்க‌ள் ந‌ன்ப‌ன் ஆக்கிகொள்ளுங்க‌ள்

17 Dec 2009

New Year & Christmas வாழ்த்துக‌ள்

எல்லாருக்கும் வ‌ண‌க்க‌ம்......

அனைவ‌ருக்கும் இனிய‌ கிருஸ்தும‌ஸ் ம‌ற்றும் ஆங்கில‌ புத்தான்டு வாழ்த்துக்க‌ள்.

இன்னும் நாள் இருக்கு இல்ல‌ இப்ப‌வே என்ன‌ அவ‌ச‌ர‌ம்னு கேட்கிர‌வ‌ங்க‌ளுக்கு...வெகேஸ‌ன் இருக்கு use it or lose it பாலிசி ந‌ம்ப‌ ஆபிஸ்ல‌ சோ...வுடு சூட்டு....வ‌ர்ர‌ திங்க‌கிழ‌மை-ல‌ இருந்து...

போற‌ எட‌த்துல‌ பொட்டி த‌ட்டுனா ந‌ல்லாவா இருக்கும்...ஏதோ ஆபிஸ் வ‌ந்தோமா ஒரு க‌ப் காபியை குடித்தோமா, ஈ‍ ‍‍மெயில் செக் செய்தோமா கொஜ்ஜ‌ நேர‌ம் வேலை என்கிற‌ பேரில் ஒரு மொக்கையை போட்டோமா அப்ப‌டினு இருக்கும் போது சாலிக்கு போர‌ எட‌த்துல‌ உட்காந்த்து ....விடுங்க‌...அதெல்லாம் ந‌ல்லா இருக்காது)

ச‌ரி சும்மா இருந்தா போர் அடிக்குமே யாராகிடாயாவ‌து பேச‌னுமே... உங்க‌ளுக்கு என்ன மாதிரியே‌ போர் அடித்தால் உங்க‌ போன் ந‌ப்ம‌ர் கொடுங்க‌ உல‌க‌த்துல‌ நீங்க‌ எங்க‌ இருந்தாலும் நான் அழைக்கிரேன் எல்லாம் வானேஜ் (VONAGE) த‌ய‌வுதான்

ஆன‌ந்த‌விக‌ட‌ன் ம‌ற்றும் எழுத்தாள‌ர் எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்

இது ஆன‌ந்த‌விக‌ட‌னில் வ‌ந்த‌ இந்த‌வார‌ க‌ட்டுரை....காப்பி பேஸ்டு செய்து உள்ளேன் (ந‌ன்றி ஆன‌ந்த‌ விக‌ட‌னுக்கு)

மதுரை ரயிலில் இரண்டு வெளிநாட்டுப் பயணிகளைச் சந்தித்தேன். தனது பெயர் ரஃபேல். மனைவி பெயர் ஆடா. பிரேசிலைச் சேர்ந்தவர்கள். தாங்கள் கொடைக்கானலுக்குப் போவதாக அறிமுகம் செய்துகொண்டார். ஆடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாது என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார்.

என் அருகில் அமர்ந்திருந்த கரை வேஷ்டி அணிந்த கவுன்சிலர் வியப்புடன், "வெள்ளைக்காரனுக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதுன்னா ஆச்சர்யமா இருக்கில்ல?" என்றார். உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்படுவது இல்லை. அந்தப் பெண் ஜெர்மானியர் என்று சொன்னேன். தான் கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் எம்.ஏ., படித்திருப்பதாகச் சொல்லி, அவரும் வெள்ளைகாரர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.



பிறகு கவுன்சிலர் என்னிடம், "இவங்களைப் பார்த்தா அமெரிக்கர்கள் மாதிரி தெரியுது" என்று சொன்னார். அந்தப் பெண் அமெரிக்காஎன்றசொல் லைக் கேட்டவுடன் பலமாகச் சிரித்துவிட்டார். பிறகு, "இந்தியாவில் எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் அமெரிக்காவா என்று ஏன் கேட்கிறார்கள்? அமெரிக்கா மட்டும்தான் இந்தியர்களுக்குத் தெரிந்த வெளிநாடா?" என்று கேட்டார்.

ஆமாம் எங்க‌ள் ஊர் ப‌த்திரிகைக‌ளுக்கு தெரிந்த‌து அமெரிக்க‌ ம‌ட்டும் தான், அவ‌ர்க‌ள் அதை ப‌ற்றி ம‌ட்டும் தான் செய்தி வெளியிடுவார்க‌ள் அதை ப‌டித்து என்க‌ளுக்கு அமெரிக்கா ம‌ட்டும் தான் தெரியும்

"அது பொதுப் புத்தி. 20 வருடங்களுக்கு முன்பு வரை எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் லண்டனில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். இப்போது அது மாறியிருக்கிறது" என்று சொன்னேன். கவுன்சிலரின் இரண்டு செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கத் துவங்கின.அவர் இரண்டு செல்போன்களையும் எடுத்து ரயில் பெட்டியே கேட்கும்படியான உச்சக் குரலில் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் கண்களாலேசிரித்துக் கொண்டார்கள்.

"முதன்முறையாக கொடைக்கானலுக்குப் போகிறீர்களா?" என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார்கள். "எப்படி இருக்கிறது உங்களது இந்தியப் பயணம்?" என்றதும், "இந்தியர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்று, எங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்அல்லது வியந்து வியந்து பார்க்கிறார்கள். படித்தவர்களுக்கே கூட வெளிநாட்டுப் பயணிகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன" என்றார்.

அதை ஆமோதிப்பதுபோல ஆடா, "வெளிநாட்டுப் பெண்கள் என்றால் வேசைகள் என்றுதான் இந்தியாவில் படித்தவர்கள்கூட நினைக்கிறார்கள். பொதுஇடங்களில் நாங்கள் பாலுறவுகொள்வோம் என்று நம்பி, பின்னாடியே துரத்துகிறார்கள். எவ்வளவு அபத்தமான கற்பனை இது."

அப்ப‌டிதானே நாங்க‌ள் தின‌ச‌ரிக‌ளில் ப‌டித்தோம்...உத‌டு முத்த‌ம், த‌ண்ணீரை விட‌ பீர் விலை குறைவு,எங்க‌ள் தின‌ச‌ரிக‌ள் அதை ம‌ட்டும் தானே செய்தியாக‌ வெளியிட்ட‌து

ரஃபேல் தொடர்ந்து பேசினார், "நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. முழுமையான வெஜிடேரியன். அதை ஒருவர்கூட நம்ப மறுக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் எப்படி வெஜிடேரியனாக இருக்க முடியும் என்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. வெள்ளைக்காரர் என்றால் கட்டாயம் கிரிக்கெட் பிடிக்கும், மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் கேட்பார்கள், போதை மருந்து சாப்பிடுவார்கள், எல்லோரும் பையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்று நம்பு கிறார்கள்.

ஆந்திராவில் ஒரு ஆட்டோ டிரைவர் எங்களிடம், தான் அனகோண்டா பார்த்திருப்பதாகச் சொல்லி, அது சூப்பராக இருப்பதாகப் பாராட்டினார். அனகோண்டா என்றால் என்னவென்றே புரியவில்லை. பிறகு, விசாரித்தபோது அது ஹாலிவுட் படம் என்று தெரிந்துகொண்டோம்" என்று சிரித்தார்.

கவுன்சிலர் தனது துணிப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் டம்ளர், குளிர்பானம் இரண்டையும் வெளியே எடுத்துவைத்தார். பிறகு, இடுப்பில் இருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கலந்தார். பிறகு, அவர்களிடம் தன்னிடம் இன்னொரு குவாட்டர் இருப்பதாகவும் அவர்கள் விரும்பினால் சேர்ந்து சாப்பிடலாம் என்றும் சொன்னார். அதற்கு ரஃபேல் தாங்கள் பயணத்தின்போது குடிப்பது இல்லை. அதிலும் பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் குடிப்பது பார்க்கவே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்றார்.

அதுச‌ரி உங்க‌ள் ஊரில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்யும் எங்க‌ள் ஊரில் அவ‌ர்க‌ளுக்கும் சேர்த்து தான் பாட்டில் வாங்க‌ வேண்டும் (ச‌ட்ட‌த்தை நிறைவேற்ற‌ வாண்டிய‌ கன‌வான்க‌ளுக்கு)

கவுன்சிலர், "அதெல்லாம் பழக்கமாகிருச்சி சார்" என்றபடியே உணவுப் பொட் டலங்களைப் பிரித்து சாப்பிடத் துவங்கியிருந்தார். சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா - மட்டன் சுக்கா வாசனை ரயில் பெட்டி எங்கும் நிரம்பியது.

ஏன் உங்க‌ ஊரு சாப்பாட்டுல‌ வாச‌ம்/நாத்த‌ம் வ‌ர்ர‌து இல்லையா? இல்ல‌னா நீங்க‌ யாரும் டிராவ‌‌ல்ல‌ சாப்ப‌டுர‌தே இல்ல‌ பாருங்க‌..

ரஃபேல் ரகசியமான குரலில், "ஏன் இந்தியாவில் சைனீஸ் ஹோட்டல்கள் மீது இவ்வளவு மோகம். நெடுஞ்சாலையில்கூட சைனீஸ் நூடுல்ஸ் கடைகள் இருக் கின்றனவே, அது எப்படி வந்தது?" என்று கேட்டார். "10 வருடங்களுக்குள் இந்திய உணவு முறை பெரிதும் மாறிவிட்டது. இப்போது எல்லா இடங்களிலும் ஃபாஸ்ட் ஃபுட்தான்" என்றேன். ரஃபேல் கண்சிமிட்டி, "அது உண்மை யில் ஃபாஸ்ட் ஃபுட் இல்லை, ஸ்லோ பாய்சன்" என்று சொன்னார்.

கவுன்சிலர் தன்னிடம் இருந்த பரோட்டாவில் ஒன்றை அவர் கள் சாப்பிட்டுப் பார்க்கும்படி வற்புறுத்தினார். தாங்கள் இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அதை கவுன்சிலர் நம்பத் தயாராக இல்லை.

ஆடா என்னிடம், "தமிழ்நாட்டில் வெள்ளை உடை அணிந்தவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகளா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "பிறகு, ஏன் இவர்கள் பேன்ட்-ஷர்ட்அணிவது இல்லை. பெண் அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஏதாவது டிரெஸ் கோட் இருக்கிறதா என்ன? சுடிதார் அல்லது ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் அரசியல்வாதியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏன் அப்படி? ஏதாவது கலாசாரத் தடையா?"

"ஒரு வரியில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. விளக்கிச் சொல்ல முடியாத நம்பிக்கைகள், மரபு மற்றும் கலாசார அடை யாளங்கள் இருக்கின்றன" என்றேன்.

எங்க‌ ஊர் அர‌சிய‌ல்வா(ந்)திக‌ள் அரை நிக்கார் போட்டு வ‌ந்தால் அதையும் ப‌ட‌ம் எடுத்து போட்டு பின்வ‌ருமாறு எழுதுவார்க‌ள் இந்த‌ ப‌த்திரிகைக‌ள்

(த‌லைப்பாக‌) பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி ட‌வுச‌ரில் ஆட்ட‌ம்

இர‌ண்டு எழுத்து பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் மூன்று எழுத்து ஊரில் உள்ள‌ க‌ட‌ற்க‌றை‌க்கு சென்று இருந்த‌போது ஊரில் உள்ள‌ பிர‌ச்ச‌ன‌க‌ளை ம‌ற‌ந்து ட‌வுச‌ரில் ஆட்ட‌ம் போட்டார் க‌ண்டிப்பாக‌ இவ‌ர் சுய‌நினைவோடு செய்து இருக்க‌ மாட்டார் என‌ த‌க‌வ‌ல் அறிந்த‌ நான்கு எழுத்து வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌

அவர் தலையசைத்தபடியே, "எங்களுக்கு இன்னொருசந்தே கமும் இருக்கிறது. பையன்களுக்குப் பூ வைத்து அலங்காரம் சூடி பெண்போல போட்டோ எடுத்துவைத்திருப்பதைப் பார்த்தோம். அது எதற்காக? சிறுமிகள் அதுபோல ஆண் வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்வார்களா என்ன?" என்றார். நான் சிரித்துவிட்டேன்.

"இந்தியக் குடும்பங்கள் கிரேக்கப் புராணங்களைவிட விசித்திரமானவை. அதன் நம்பிக்கையின் வேர்கள் எங்கே இருந்து துவங்குகின்றன என்று எந்த ஆராய்ச்சியாளனாலும் கண்டுபிடித்துவிட முடியாது. அதுபோலவே அவர்கள் மனஇயல்பை அறிந்துகொள்வது மிகப் பெரிய சவால்" என்றேன். அவர்கள் உறங்கத் தயராகிவிட்டார்கள். கவுன்சிலர் போதை பற்றாமல் இரவெல்லாம் அலைந்துகொண்டே இருந்தார்.

வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் கோவாவில் உள்ள தங்கும் விடுதியில் செக் நாட்டைச் சேர்ந்த ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மிக ஆர்வமாக காப்கா, மிலன் குந்தேரா, மிலாஸ் ஃபோர்மென் என்று பேசியபோது, அவர் அந்தப் பெயர்களைத் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் காப்காவைக் கூடவா தெரியாது என்று கேட்டேன். அவர் தனக்குப் படிக்கும் பழக்கமே கிடையாது. தான் ஒரு நீச்சல் வீரர் என்றார். இந்தியாவுக்கு வரும் பெரும்பான்மை வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா நிமித்தம் வருபவர்களே. அதுவும் குறைந்த செலவில் இயற்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். மற்றபடி அவர்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொள்வது நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் அறியாமை.

வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தை த‌ந்த‌து யார்...நாக்க‌ள் என்ன‌ போயி பார்த்டோமா என‌ன‌? ப‌த்திரிக‌க‌ள் தானே எங்க‌ளுக்கு அந்த‌ செய்திஅக்ள‌ த‌ருகிற‌து

இன்னொரு பக்கம், சேவை மனப்பாங்குடன் வரும் வெள்ளைக்காரர்களையும் கண்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை தேனாம்பேட்டை சந்திப்பு அருகில் உள்ள கூவம் ஆற்றை இரண்டு வெளிநாட்டுப்பயணி கள் உள்ளே இறங்கி சுத்தப்படுத்திக்கொண்டுஇருப் பதைக் கண்டேன். கழிவுகளின் துர்கந்தம் காரண மாக, அருகில் உள்ள வீதிகளில் வசிப்பவர்கள் எவரும் அந்த இடத்தில் நிற்பதுகூடக் கிடையாது. சாலையில் போகிற வருகிறவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள். கேலியாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்தப் பகுதிகளை வெள்ளைக்காரர்கள் இரண்டு நாளில் தூய்மைப்படுத்திவிட்டார்கள். அந்த தன்முனைப்பு அக்கறை நம்மிடம் இல்லாதது.

எனக்குப் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன் இயக்கிய 'Praying with Anger' படம் நினைவுக்கு வந்தது. அது சியாமளனின் முதல் படம். 1992-ல் வெளியானது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சியாமளன் அமெரிக்காவில் வளர்ந்தவர். இந்தப் படம் சென்னைக்குப் படிக்க வரும் ஓர் அமெரிக்க இளைஞனைப் பற்றியது.

பொதுவாக, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கப் போகிறவர்கள்தான் அதிகம். இந்தப் படத்தில் பல வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த தேவ் ராமன் என்ற இளைஞனை, 'ஒரு வருடமாவது சென்னையில் போய்ப் படித்துவிட்டு வா. அப்போதுதான் நமது பராம்பரியம் மற்றும் வேர்த் தொடர்ச்சி புரியும்' என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கிறார்கள். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். அவன் எதிர்கொள் ளும் கலாசாரச் சிக்கல்கள்தான் படம்.

அமெரிக்காவைப்பற்றி தமிழ் மக்களிடம் பொதுவான மனப் பிம்பங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கிற பெரும்பான்மை இளைஞர்கள். பெண் மோகம்கொண்டவர்கள். இரவெல்லாம் நடனம் ஆடுவார்கள். பேஸ்பால் விளையாடுவார்கள். அதிகம் குடிப்பார்கள். மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிடுவார்கள். லட்ச லட்சமாகச் சம்பாதிப்பார்கள் என்பது போன்ற தவறான கற்பிதங்களை சியாமளன் இந்தப் படத்தில் கேலி செய்திருக்கிறார்.

ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் அவனிடம், 'நீ அமெரிக்க ஆங்கிலத்தில் பேசினால் பெரிய ஆளாகிவிட முடியாது. நான் 30 வருடங்களாக ஷேக்ஸ்பியர் நடத்துகிறேன்' என்பார். அவர் இப்போதும் ஷேக்ஸ்பியர் காலத்திலேயே வாழ்ந்துகொண்டு இருப்பதாக தேவ் சொல்வான். அவனைச் சந்திக்கும் ஒரு பெண், அவன் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்திருக்கிறானா என்று படம் முழுவதும்கேட்டுக்கொண்டே இருப்பாள். அது போலவே ஆட்டோ டிரைவர் துவங்கி டீக்கடைக்காரன் வரை அவனிடம் அதிகமாகப் பணம் கேட்பார்கள். அவனைக் காதலிக்கும் பெண் டேட்டிங்பற்றி நிறையப் பேசுவாள்.

இந்திய இசையின் மகத்துவம்பற்றி அவனுக்குத் தினமும் வகுப்பு எடுப்பார்கள். தேவின் உண்மையான பிரச்னை அமெரிக்காபற்றிய தமிழ் மக்களின் தவறான கற்பிதங்களே. அதைப் படம் முழுவதும் அவன் விளக்கிச் சொல்கிறான். எவரும் கேட்பதே இல்லை. அமெரிக்காவில் ஆதிவாசிகள்கூட இருக்கிறார்கள் என்பதை அவன் சொல்லும்போது, அதை ஒருவரும் ஒப்புக்கொள்வதே இல்லை. நீங்கள் கற்பனையான அமெரிக்கா ஒன்றை வைத்திருக்கிறீர்கள். நிஜம் அப்படி இல்லை என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, முடிவில் அவன் அமெரிக்காபோய் விடுகிறான்.

எங்க‌ளுக்கு அந்த‌ க‌ற்ப‌ணையை த‌ந்தது யார்....நாங்க‌ள் பார்த்த‌ சில‌ ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ள், ப‌டித்த‌ ப‌த்திரிகைக‌ள், போய்வ‌ந்த‌ சில‌ வ‌ச‌தி ப‌டைத்த‌வ‌ர்க‌ள் (ந‌ம்ம‌ ஆளுங்க‌ சிங்க‌பூர்/தாய்லாந்து போனா நிறைய‌ பார்ப்பார்க‌ள் ஆனால் பேசுவ‌து என்ன‌மோ இர‌வு விடுதி ப‌ற்றி தான்) சொன்ன‌ செய்திக‌ள்தான் எங்க‌ளுக்கு க‌ற்ப‌ணையை த‌ந்த‌து

இது தனி நபர் சந்திக்கும் பிரச்னை மட்டும் இல்லை. மாறாக, 300 வருடங்களுக்கும் மேலாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் இருந்து உருவான பிம்பங்களே. இந்தியாவைப் பிரித்துத் துண்டாக்கிய மவுன்ட்பேட்டனை நாம் இன்றும் மவுன்ட்பேட்டன் பிரபு என்றுதான் சொல்கிறோம். இன்னொரு பக்கம், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருகிறவர்கள் உருவாக்கும்நம்மைப் பற்றிய தாழ்வான பிம்பம் நம்மை எப் போதுமே குற்றவுணர்ச்சி கொள்ளவைக் கிறது. நம் வரலாற்று நூல்களில் உள்ளவை அதிகார மாற்றத்தின் பிம்பங்களே. உண் மையான இந்திய மக்களின் எழுச்சியும் சமூக, கலாசார மாற்றங்களின் நிஜமான வரலாறும் இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை... அறிந்துகொள்ளப்படவும் இல்லை. அதுதான் இந்த அறியா மையை மாற்றுவதற்கான ஒரே வழி!

பார்வை வெளிச்சம்!

-நீங்க‌ள் உங்க‌ள் பார்வையை மாற்றுங்க‌ள் பிற‌ம‌க்க‌ளுக்கு... நீங்க‌ள் சொல்லுவ‌து எல்லாம் உண்மை என்று நின‌க்கும் ம‌க்க‌ளுக்காக...

-ந‌ல‌ல‌தை எழுதுங்க‌ள், கெட்ட‌தை சொல்லுங்க‌ள், அவ‌ர்க‌ளின் கலாசார‌ம் ப‌ற்றியும் எழுதுங்க‌ள்

-வெளிநாடுக‌ளில் இள‌சுக‌ளின் கூத்தை வெளியிடும் நீங்க‌ள் அவ‌ர்க‌ள் சாலைவிதிக‌ளை ம‌திப‌ப்தையும் ப‌ட‌த்துட‌ன் எழுதுங்க‌ள்

-வெளிநாட்ட‌வ‌ரின் காம‌த்தை வெளியிடும் நீங்க‌ள் அவ‌ர்க‌ளின் கால‌ம் த‌வராமையையும் வெளியிடுங்க‌ள்

எங்கூர்ல‌ நோம்பிங்க‌ணா அல்லாரும் வ‌ந்துடுங்க‌...

ப‌திவ‌ர்க‌ள், வாச‌க‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்கம், எங்கூர்ல‌ நோம்பிங்க‌ணா அல்லாரும் வ‌ந்துடுங்க‌...

வாலு, க‌திர், கார்த்திக் ம‌ற்றும் ப‌ல‌ர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த‌ நோம்பிக்கு வ‌ந்து நோக‌ம‌ நோம்பி கும்பிட்டு அல்லாருக்கும் (உங்க‌ளுக்கு தெரிஜ்தை) க‌த்து கொடுத்துட்டு ( உங்க‌ளுக்கு தெரியாத‌தை)க‌த்துகிட்டு போங்க‌னா

வாலுக்கு ஒரு கோரிக்கை....ந‌ம்ப‌ ல‌தான‌ந் சாருக்கு இந்த முறை எந்த‌ தாக்குத‌லும் ந‌டை பெறாம‌ல் த‌னி பாதுகாப்பு வ‌ளைய‌ம் அமைத்து விடுங்க‌ள் (இல்ல‌ன‌ அவ‌ர் அவ‌னுங்க‌ இருக்குற‌ ஊரா இதுனு நினைக்க‌கூடாது)

சை‌வ‌ம், அசைவ‌ம் ச‌ரி அப்ப‌ தீர்த்த‌வாரி இருக்க‌ இல்லையா? (வாலு இருப்ப‌த‌னால் இது ஒரு வால் கேள்வி)

சிண்ண‌ம்மிணி ஏதோ கொஞ்ஜ‌ நாள் ஈரோட்டில் ஆட்ட‌ம் போட்டாங்க‌ளாம் (இருதாங்க‌ளாம்) அந்த‌ ஹாஸ்ட‌லுக்கு அடுத்த‌ வீடு விட்டு அடுத்த‌ வீட்டில்தான் நாங்க‌ள் சில‌ கால‌ம் வாட‌கைக்கு குடி இருந்தோம் (அவ‌ர் சொல்லும் கால‌ க‌ட்ட‌த்தில்தான்)ஒருவேளை நான் அவ‌ங்க‌ளை பார்த்து இருப்போனோ என்ன‌மோ. என்ன‌மோ போங்க‌ ப‌ழைய‌ நினைப்புலாம் கிள‌ப்பிவிட்டுட்டாங்க‌

22 Nov 2009

க‌லாச்சார‌ம் மாறிவிட்ட‌தா

நேற்று ம‌துரை ச‌ம்ப‌வ‌ம் என்று ஒரு ப‌ட‌ம்.....ய்ப்பாடி ப‌ட‌த்தில் வ‌ரும் அனைத்து கேர‌க்ட‌ர்க‌ளும் ஒரு ப‌ன்ச் ட‌ய‌லாக் பேசுகிறார்க‌ள். மாஸ் ஹீரோக்க‌ளுக்கு கொடுக்கும் ஒரு கிராண்ட் ஒப்ப்ப‌னிங் அறிமுக‌ க‌தாநாய‌க‌னுக்கு கொடுத்து இருக்கிறாங்க‌ப்பா....


ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கார்த்திக் & ஜீவிதா ந‌டித்த‌ ப‌ட‌த்தில் (ப‌ட‌ம் பேர் நியாப‌க‌ம் இல்லை) ஜீவிதா ஒரு போலிஸ் உடை அணிந்து க‌ன‌வில் ஒரு பாட‌ல் ஆடுவார்/பாடுவார்( நான் தேடும் செவ்வ‌ந்தி பூ இது) அத‌ற்கே போலிஸ் கார‌ர்க‌ள் அல்ல‌து ப‌ல‌ர் க‌ன்ட‌ண‌ம் ஆட்சேப‌ம் எழுப்பினார்க‌ள்

இந்த‌ திரைப்ப‌ட‌த்தில் ர‌வுடி க‌தாநாய‌க‌ன் பெண் போலிஸ் அதிகாரியை lip to lip kiss,
அதுவும் போலிஸ் உடையில் இருக்கும் போது...இப்போது இதுலாம் ஒன்னும் இல்லை அல்ல‌து இது எல்ல‌ம் சாதார‌ன்ம் என்று எடுத்துகொண்டார்க‌ளா?

இதி ப‌ற்றி எந்த‌ ஒரு செய்திக‌ளும் ப‌டித‌தாக‌ நியாப‌க‌ம் இல்லை, அல்ல‌து யாராவ‌து கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கிறார்க‌ளா

1 Sept 2009

CA State Fair-2009

வ‌ருடா வ‌ருட‌ம் அர‌சு பொருட்காட்சி ( State faiர்) இங்கு ந‌டை பெறுவ‌து வ‌ழ‌க்க‌ம், இந்த‌ வ‌ருட‌ம்
உங்க‌ளுக்காக‌ சில‌ புகைப‌ட‌ங்க‌ள்.

1) த‌ண்ணீர் பாட்ட‌ல் நிறைய‌ எடுத்து செல்லுங்க‌ள் (உள்ளே விலை அதிக‌ம் $2-3)
2) மாலை நேர‌ம் சால‌ சிற‌ந்த‌து (4 -4.30 க்கு சென்றால் வெய்யிலின் தாக்க‌ம் அதிக‌ம் இருக்காது)






மேலும் பார்க்க‌...

காரின் க‌த‌வு வேலை செய்ய‌வில்லை-How to change Honda actuator

திடிரென்று காரின் க‌த‌வு லாக் ஆக‌ மாட்டேன் ஆகிவிட்டால் திற‌க்க‌ மாட்டேன் என்றது, டீல‌ரிட‌ம் கேட்டால் $220 த‌னியார் க‌டையில் கேட்டால் $120 ஆகும் என்று சொல்லிவிட்டார்க‌ள். இப்போது இருக்கும் பொருளாதார‌ ம‌ந்த‌ நிலையில் அவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌முடியாது, கூகிள் ஆண்ட‌வ‌ரிட‌ம் கேட்ட‌போது அவ‌ரோ $40 ம‌ற்றும் 30 ம‌னித்துளிக‌ளில் செய்து விட‌லாம் என்றார். ச‌ரி என்று நானே ச‌ரி செய்து விட்டேன். யார் யாரோ அவ‌ர்க‌ள் ப‌ங்கிற்கு இனைய‌த்தில் நிறைய‌ த‌க‌வ‌ல்க‌ள் த‌ந்து இருக்கிறார்க‌ள், ச‌ரி என்று நானும் எனது ப‌ங்கிற்கு அளிக்கிறேன். I replaced Rear Left door, the same methode is used for Rear Right too...

ந‌ம் ம‌க்க‌ள் கொஞ்ஜ‌ம் பேரு இந்த‌ கார் 2004, Honda civic வெச்சிருக்காங்க‌ அவ‌ங்க‌ளுக்கு உப்யோக‌ப‌டும்னு நினைக்கிறேன்.

Parts needed:

1) Philips screw driver
2) Minus screw driver
3) Replacement part actuator



Steps:

1)Open the door
2)Pull the squere plastic plate (located at handle @ inside ) using the minus screw driver (do not scratch)
3)remove the 2 philips screws

4)Remove the plastic part ( where the window up/down button, do not break it, carfull)
5)Remove the 2 philips screws ( now all screws are removed)




6)Pull the door cover, it's locked by the push lock types( like push pin)



7)Replace the actuator



8)Put the door cover by pushing hard, you all set, you saved around $ 100

15 Aug 2009

2 ம் பாக‌ம்‍‍‍‍‍‍‍ ‍‍‍___ காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

ம‌திய‌ம் எப்ப‌ வ‌ரும் என்று ந‌ம‌து ஹீரோவும், மாப்பிள்ளையும் யுக‌க‌ன‌க்கில் பொறுத்து இருந்தார்க‌ள். அந்த‌ ம‌திய‌மும் வ‌ந்த‌து அழைப்பும் வ‌ந்த‌து...ந்‌ம‌து ஹீரோ மாப்பிள்ளையின் த‌ந்தையை அழைத்து கொண்டு பெண்ணின் மாமா வீட்டிற்கு போய் சேர்ந்தார். ந‌ம்ப‌ ஹீரோவிற்கு அவ‌ர்க‌ள் அடித்து விட்டால் திருப்பி அடிக்காம‌ல் இருக்க‌ மாப்பிள்ளை ச‌த்ய‌ம் வாங்கிகொண்டார்.

ஹீரோவும் மாப்பிள்ளையின் த‌ந்தையும் போன‌போது அங்கு ஒரு குடும்ப‌ ப‌ட்டாள‌மே இருந்த‌து அந்த‌ ப‌ட்டாள‌த்தில் ந‌ம‌து ம‌ன‌ப்பெண்ணும் இருந்தார், அவ‌ரை பார்த்த‌ பிற‌குதான் ந‌ம‌து ஹீரோவொற்கு ச‌ற்று தைரிய‌ம்/தெம்பு வ‌ந்த‌து.

ஹீரோவை பார்த்த‌வுட‌ன் பெண்ணின் த‌ந்தைக்கு நீ அவ‌ரின் ம‌க‌ன் தானே என்று ச‌ரியாக‌ சொல்லிவிட்டு உன்க்கு ஏன‌ப்பா இந்த‌ வேலை என்று ஆர‌மித்தார். ந‌ம‌து ஹீரோவும் ச‌ரி அடி ஏதும் விழாது என்ற‌ தைரிய‌த்தில் பேச ஆர‌மித்தார். அந்த‌ பேச்சு இர‌வு 9.30 வ‌ரை நீடித்த‌து...அவ‌ர்க‌ளாக‌வே காபியும் த‌ந்து பேச்சை தொட‌ர்ந்தார்க‌ள். ( மாப்பிள்ளையின் த‌ந்தை அவ்வ‌போது த‌லையை ஆட்டி, சிரித்து, வ‌ருத்த‌ம் தெரிவித்து ஒரு மாதிரி இருந்தார்) இந்த‌ பேச்சில் ம‌ன‌ப்பென்னிட‌ம் இருந்த‌ தைரிய‌த்தை பார்த்து ந‌ம‌து ஹீரோவே ஆடீதான் போனார்.( ப‌ல‌ வ‌ச‌வுக‌ளுக்கும் அவ‌ர் அமைதியாக‌ தான் இருந்தார், ஆனால் த‌ன்மான‌த்தை சீன்டி பார்க்கும் கேள்வி வ‌ந்த‌ போது அவ‌ரின் கோப‌ம் வெடித்துவிட்ட‌து). நேர‌ம் ஆகிவிட்ட‌தால் நாளை காலையில் பேச‌லாம் என்று கிள‌ம்பிவிட்டார்க‌ள்.அன்று இர‌வு மாப்பிள்ளைக்கு ஆயிர‌ம் இர‌வு ஆக‌தான் இருந்தது.

ம‌றுநாள் காலையில் 10 ம‌னிக்கு ப‌ஞ்ஜாய‌த்து ம‌றுப‌டியும் கூடிற்று..ஆனால் இந்த‌ முறை வேறு ஒரு மாமா வீட்டில். கார‌ சார‌ விவாத‌ங்க‌ளுக்கு பிற‌கு சில‌ ப‌ல‌ வாத‌ங்க‌ளுக்கு பிற‌கு. ஒரு சில‌ க‌ன்டீச‌னுக்கு பிற‌கு மாப்பிள்ளையை நேரில் பார்க்க‌ வேண்டும் என்று சொல்லிவிடார்க‌ள். அப்போதே ந‌ம‌து ஹீராவிற்கு இது 60 ச‌த‌விகித‌ம் முடைந்து விட்ட‌து என்று ம‌ன‌தில் நினைத்தார்.

அன்று மாலை 6.30 மாப்பிள்ளையை பார்க்க‌ அன‌வ‌ரும் ஒரு பொதுவான‌ இட‌த்தில் கூடினோம்.
மாப்பிள்ளைக்கோ ஒரே டென்ஸ‌ன்...ஒருவ‌ழியாக‌ அனைவ‌ரும் பார்த்து அடுத்த‌ விச‌ய‌த்திற்கு தாவினோம். அதாவ‌து முறைப்ப‌டி திருமண‌ம் ந‌ட‌த்தி வைத்து விடுகிறோம் அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கும் எங்க‌ளுக்கும் ச‌ம்ம‌த‌ம் இல்லை என்று இருவ‌ரிட‌மும் பான்டு ப‌த்திர‌த்தில் கையெழுத்து போட‌ வேண்டும் என்று சொல்லிவிட்டார்க‌ள்.மாப்பிள்ளைக்கு ஓகே தான் ஆனால் இங்கு பெண் கொஞ்ஜ‌ம் யோசித்து முடியாது என்று சொல்லிவிட்டார். கார‌ண‌ம் கேட்ட‌ போது அவ‌ர் சொன்னது ச‌ற்று ரீச‌ன‌புள்ளாக‌தான் இருந்த‌து.( நாக‌ரீக‌த்துட‌ன் அதை த‌விற்கிறேன்)

ஹீரொவிற்கு அடுத்த‌து என்ன‌ செய்ய‌லாம் என்று யோச‌னை வ‌ந்த‌து...அவ‌ரின் வ‌க்கீல் ந‌ன்ப‌ருக்கு ஒரு போன் செய்து கேட்ட‌ போது இந்த‌ மாதிரி எழுதி வாங்கினால் எல்லாம் ச‌ட்ட‌ப‌டி செல்லுப‌டி ஆகாது என்று சொன்னார்...அதை பெண்ணிட‌ம் சொல்லி அவ‌ரிட‌ம் கையெழுத்து வாங்கி திரும‌ண‌ வேல‌க‌ளை பார்க்க‌ ஆர‌மித்து விட்டார்க‌ள்.

ந‌ம‌து ஹீரோதான் திரும‌ண‌ வேலைக‌ளை முன்னிறுத்தி பார்த்து அவ‌ர்க‌ளை த‌னி குடித்த‌ன‌ம் விக்கும் வ‌ரை இருந்து முடித்து கொடுத்தார்.

திரும‌ண‌ வேலைக‌ளுக்காக அவ‌ர் ம‌ண‌‌ப்பெண்னின் மாமா வீட்டிற்கு சில முறை சென்று வ‌ந்தார்..அவ‌ரின் சுறு சுறுப்பு, அவ‌ரின் அழ‌கு, அவ‌ரின் பேச்சுதிற‌மைக்காக‌ அங்கு ஒரு காத‌ல் ம‌ல‌ர்ந்த‌து...அது மாமாவின் 2 வ‌து ம‌க‌ள்.

நீங்க‌ள் நினைப்ப‌து போல் அந்த‌ திரும‌ண‌ம் அவ்வ‌ள‌வு ஈஸியாக‌ ந‌ட‌க்க‌வில்லை..இந்த‌ முறை அவ‌ர் முன்னால் மாப்பிள்ளையிட‌ம் ஐடியா கேட்டார், அவ‌ர் கொடுத்த‌ ஐடியா தான் திரும்பி வ‌ந்த‌து. (ரிஜிஸ்ட‌ர் திரும‌ண‌ம்)டேய் என‌க்கு க‌ல்யாண‌ம் செய்து வைத்த‌ கையோடு உன‌க்கு வாழ்க்கையை தேடிக்கிட்டேயாடா என்று க‌லாய்த்த‌து த‌னிக்க‌தை.

ந‌ம‌து ஹீரோ நேராக‌ த‌ன‌து வ‌ருங்கால‌ மாம‌னாரின் வீட்டிற்கு சென்று நீங்க‌ள் நீங்க‌ள் திரும‌ண‌ம் செய்து வைக்க‌ வில்லை என்றால் நாங்க‌ளாக‌வே திரும‌ண‌ம் செய்து கொள்ளுவோம், ஒரு ம‌ரியாதைக்காதான் உங்க‌ளிட‌ம் நிற்கிறோம் என்று நேருக்கு நேராக‌ பேசிவிட்டார். ( அவ‌ருக்கு தான் தெரியுமே இவ‌ன் எல்லாத்தையும் செய்வான் என்று) அடுத்த‌ முகுர்த்த‌தில் அவ‌ராக‌வே திரும‌ண‌ம் செய்து வைத்து விட்டார்.


இப்போது ந‌ம‌து ஹீரோ சிட்னியில் வேலை பார்க்க‌, அவ‌ர் ந‌ண்ப‌ர் பூனாவில் (Maharastra) இருக்க‌ அவ‌ர்க‌ளது வாழ்க்கை த‌லா இரு குழ‌ந்தைக‌ளோடு சுப‌மாக‌ இருக்கிற‌து.

( பின் குறிப்பு: வ‌ழ‌க்க‌ம் போல் குழ‌ந்தை பிற‌ந்த‌வுட‌ன் குடும்ப‌ங்க‌ள் ஒன்று சேர்ந்து விட்ட‌து)

14 Aug 2009

காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

வாசகர்களே... வாங்க கலக்கலாம் இந்த தொடர் விகடனில் வருகிறது.

இந்த வாரம் நண்பனின் காதலுக்கு உதவச் சென்று 'நாடோடிகள்' ஆனவர்களின் கதைகள்...

ஆஹா ந‌ம்ப‌ கிட்ட‌யும் ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌ம் இருக்கிற‌து....ப‌ல‌நாள் நின‌த்து நின‌த்து ம‌ண‌ம் விட்டு சிரித்த‌ ச‌ம்ப‌வ‌ம்....

ஈரோட்டில் காத‌ல‌ன் இன்ஞினிய‌ரிங் காலேஜ்ஜில் ப‌டித்து கொண்ணிருந்தான்...காத‌லி பெருந்துறை ம‌ருத்துவ‌ க‌ல்லுரியில் ப‌டித்து கொண்டிருந்தார்க‌ள், 13‍ம் ந‌ம்ப‌ர் ப‌ஸ்ஸில் தான் இருவ‌ரும் ப‌ய‌ன‌ம்....அப்போது வ‌ந்த‌ ஜெமினி ப‌ட‌ம் பார்த்து எல்லோரும் 'ஓ' போட்டு ப‌ய‌ன‌ம் இனிதே ஆர‌மித்து காத‌லும் ஜோராக‌ வ‌ள‌ர்ந்த‌து.

க‌டைசி வ‌ருட‌ம் காத‌ல‌னுக்கு...என்ன‌ ப‌ன்னுவ‌துனு தெரிய‌வில்லை...ந‌ம்ப‌ ஹீரோவிட‌ம் வ‌ந்து வ‌ழிகேட்டார்க‌ள் ( சோடியாக‌ வ‌ந்து)அலை பாயுதே ப‌ட‌த்தில் வ‌ந்த‌ மாதிரி ரிஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ன்னிக‌லாம் அப்ப‌ற‌ம் பிர‌ச்ச‌னை வ‌ந்தா பார்த்துக‌லாம் என்று அவ‌ரும் ஐடியா கொடுத்துவிட்டார்.

ச‌ரி என்று சிவ‌ன் ம‌லையில் திரும‌ன‌ம், காங்கேய‌த்தில் ரிஜிஸ்டிரேச‌ன் என்று த‌ட‌புட‌ல் க‌ல்யான‌சேவை ந‌ட‌ந்த‌து ( கோயிலுக்கும், ரிஜிஸ்டிரேச‌ன் ஆபிஸுக்கும் ப‌ண‌ம் ம‌ற்றும் சில‌ பேப்ப‌ர் ஒர்க்குக்கு க‌ஸ்ட‌ப‌ட்ட‌துக்கு த‌னியாக‌ உன்மை ச‌ம்ப‌வ‌ம் தொட‌ர்க‌தை எழுத‌லாம்)அவ‌ர் அவ‌ர் வீட்டுக்கு ம‌திய‌ம் 3.30க்கு போய் விட்டார்க‌ள்.

அன்று இர‌வு மாப்பிள்ளையும் திரும‌ன‌ம் ந‌ட‌த்தி வைத்த‌ ஆளும் அப்போதைய‌ டாஸ்மார்க் ( Private bar) போயி விட்டார்க‌ள் அங்கு ந‌ம்ப‌ ஈரோ.. பாருடா க‌ல்யான‌ம் ந‌ட‌ந்து முத‌லிர‌வில் இருக்க‌ வேண்டிய‌ ஆளு பாருக்கு வ‌ந்து இருக்கான் என்று க‌லாய்க்க‌..அருகில் ஒட்டு கேட்டு கொண்டு ( அரை குரையாக‌) இருந்த‌ புல் ம‌ப்பு பார்ட்டி இன்னா த‌லைவா பிர‌ச்ச‌னை க‌ல்யான‌ம் பிடிக்க‌லையா? இல்ல‌ பொன்னு பிடிக்கிலியா என்று கேட்டு ஒரே தொந்த‌ர‌வு...எவ்வ‌ளொவோ சொல்லியும் அந்த‌ ந‌ப‌ர் கேட்க‌வில்லை...அப்ப‌ற‌ம் மாப்பிள்ளை விட்டார் பார் ஒரு அறை...ம‌ப்பு பார்ட்டி சாரி பாஸ் என்று அடுத்த‌ ர‌வுண்டுக்கு போய்விட்டார்.

சில‌ மாத‌ங்க‌ள் ஓடின...ரிஜிஸ்டார் அலுவ‌ல‌க‌த்துக்கு மாற்ற‌ல் ஆகி வ‌ந்த‌ ஒருந‌ப‌ர் பொன்னுக்கு சொந்த‌க‌ரார் என்று தெரியாம‌ல் அவ‌ரிட‌ம் போய் சார் ஒரு certificate காபி வாங்க‌னும் எவ்வ‌ளுவு காசு என்று கேட்க‌ அவ‌ர் விவ‌ர‌த்தை கேட்க‌ அவ‌ன் விவ‌ர‌த்தை சொல்ல‌ certificat காபி கொடுத்துவிட்டு பெண்ணின் வீட்டில் போட்டு கொடுத்துவிட்டார்.

ஒரு சுப‌ யோக‌ வெள்ளிகிழ‌மை ம‌திய‌ம் மாப்பிள்ளையுட‌ம் இருந்து ஹீரோவிற்கு போன்..ஹீரோவும் அடித்து பிடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு போய் என்ன‌ ஏது என்று விசாரிக்க‌ விஷ‌ய‌ம் புரிந்து... மாப்பிள்ளையின் பெற்றோரிட‌ம் ச‌ம்ம‌த‌ம் வாங்கி அவ‌னை அழைத்து கொண்டு அடுத்த‌ பிளானை போட‌ ஆர‌மித்துவிட்டார்க‌ள்.

பெண்ணுக்கு ச‌ப்போர்ட் யாரு ப‌ன்னுவாங்க‌? இப்ப‌டி அடிச‌சா எப்ப‌டி அடிக்க‌லாம்? பொன்னு மாத்தி பேசுனா என்ன‌ ப‌ன்னுர‌து? ம‌ற்றும் ப‌ல‌... சில‌... அப்ப‌டினு பிளானை போட்டாகிவிட்ட‌து. அன்று இர‌வு ந‌ன்‌ப‌னுக்கு ஏதும் ஆக‌ கூட‌து என்று இருவ‌ரும் வீட்டில் த‌ங்காம‌ல் வேறு இட‌த்தில் த‌ங்கினார்க‌ள்.

ந‌ம்ப‌ ஹீரோ த‌ன‌து த‌ந்தையிட‌ம் இந்த‌ மாரி.. இந்த‌ மாரி..ப‌ஞ்ஜாய‌த்து ப‌ன்ன‌ நீங்க‌ வ‌ர‌முடியுமானு கேட்க‌ அவ‌ர் விவ‌ர‌த்தை கேட்க‌ அட‌பாவி அவ‌ன் ந‌ம்ப‌ சொந்த‌கார‌ன் (பொன்னு வீடு) என்று ஜ‌கா வாங்க‌..இவ‌ன் ச‌மாதான‌ப‌டுத்தி... வேண்டும் என்றால் நீங்க‌ள் க‌ன்டிப்பாக‌ வ‌ர‌ வேண்டும் என்று உறுதி வாங்கி கொண்டு அடுத்த‌ பிளானை ஆர‌மித்து விட்டான்.

அடுத்தா நாள் காலை (3.30am) பெண்னிட‌ம் இருந்து போன் வ‌ந்த‌து ஹீரோவின் வீட்டுக்கு ஹீரொவின் த‌ந்தையிட‌ம் ஒரு விஸ‌யத்தை சொல்லி ( அப்ப‌லாம் செல்லு கிடையாது)எங்க‌ சித்த‌ப்பா ஒருத்த‌ர் இருக்கார் அவ‌ரிட‌ம் போயி உத‌வி கேளுங்க‌ என்று..ந‌ம்ப‌ ஹீரோவும் அந்த‌ சித்த‌பா வீட்டிற்கு கோல‌ம் போடும் நேர‌த்திற்கு ச‌ற்று முன்பாக‌வே போய் அவ‌ரை தூக்க‌திலிருந்து எழுப்பி விவ‌ர‌த்தை சொல்லி அவ‌ர் வீட்டிலே இருந்து சூடாக‌ காபி சாப்பிட்டு மேலும் விவாதித்து அடுத்து ம‌திய‌ம் ச‌ந்திக‌லாம் என்று அனுப்பிவிட்டார்.......

க‌ன்டிப்பாக‌ இத‌ன் 2ம் பாக‌ம் எழுதுகிறேன்...அதுல‌தான் ச‌ரியான் டிவிஸ்டு இருக்கிற‌து- to be Continue...

16 May 2009

அர‌சிய‌ல் வாந்திக‌ள்....

பா.ம.க‌
இவ‌ர்க‌ளின் திட்ட‌ங்க‌ள் சில‌ நாட்டுக்கு ந‌ல்ல‌துதான் ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் ந‌ம்மை க‌ற்கால‌த்திற்கு அழைத்து சென்றுவிடும்.

கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்திருக்க வேண்டும், ஆனால் பா.ம.க அந்த விஷயத்தில் ரொம்பவும் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வில்லை, மாறாக உடனே அந்த கூட்டணியை விட்டு விலகி எதிரணியில் சேர்வதையே ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்களுடைய கொள்கையாக வைத்திருந்தன.(பணம் சம்பாதிப்ப‌த‌ற்கு)

எப்போது பார்த்தாலும் தாங்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சியின் ஆட்சியை பற்றியே குறை சொல்லிக்கொண்டிருப்பதும், அவர்கள் ஏதாவது புதிய திட்டங்கள கொண்டு வந்தால் அதைஎதிர்ப்பதும், அதைப்பற்றி கேலியும்,கிண்டலும் செய்வதும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் அதை தவிர வேறு எதையுமே உருப்படியாக செய்யவில்லை, ஈழப்பிரச்சனையை கூட இவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டர்களே தவிர அதில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை.
இந்த‌ க‌ட்சிக்கு வாக்க‌ளிக்காத‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!


பார‌திராசா, சீமான், க‌விஞ‌ர் தாம‌ரை ம‌ற்றும் ப‌ல‌ர்....
இவ‌ர்க‌ளுக்கு ஏன் இந்த‌ வேன்டாத‌ வேலை? தேவை இல்லாத‌ அசிங்க‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ( இத்தாலி ச‌ர்வாதிகாரி/ தாலி அறுப்ப‌வ‌ள்/ தொப்புள் கொடி உற‌வுக‌ள்/ என் அண்ண‌ன் பிராபாக‌ர‌ன்,அமாவாசைக்கு அடுத்த‌ நாள் ம‌ற்றும் ப‌ல‌ வீர‌ வ‌ச‌ன‌ங்க‌ள்) இந்த‌ சீமான் யார்? க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ தான் இவ‌ரை தெரியும்.ரொம்ப‌ ஓவ‌ராக‌ உன‌ர்சிவ‌ச‌ப்ப‌ட்டார்க‌ள்.
இந்திய‌ திரு நாட்டில் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கும் போது முக்கிய‌மாக‌ த‌மிழ் நாட்டில் அதிக‌மாக‌வே உள்ள‌து. ஈழ‌ த‌மிழ‌னை ப‌ற்றீ பேச‌ வ‌ந்துவிட்டார்க‌ள். ஈழ‌த்த‌மிழ‌னை கொள்வ‌தை த‌டுத்து நிறுத்த‌வேண்டும் அதில் மாற்று க‌ருத்துஏதும் இல்லை. இவ்வ‌ள‌வு பேசும் நீங்க‌ள் விடுத‌லைபுலிக‌ளை போர் நிருத்த‌ம் ம‌ற்றும் சுய‌ ஆட்சி கொள்கைக‌ள‌ ஏற்று கொள்ள‌ செய்தால் ஈழ‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப‌டுவ‌து நிறுத்த‌ப‌டுமே.


சிறில‌ங்கா ரானுவம் சில‌ புகைப‌ட‌ங்க‌ளை வெளியுட்டுள்ள‌து அந்த‌ புகைப‌ட‌த்தில் பிராப‌க‌ர‌ன் ம‌க‌ன் என் கூற‌ப்ப‌டும் ந‌ப‌ர் உன்மையாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவ‌ரை நான் ஒருமுறை முத‌ல் முறை விமான‌ப‌ய‌ன‌த்தில் ச‌ந்தித்து இருக்கிரேன்.அவ‌ர் இல‌ங்கை த‌மிழ‌ர் என்ப‌தில் ஒரு மாற்று க‌ருத்தும் இல்லை. அவ‌ருட‌ன் க‌தைத்து இருக்கிரேன்...அவ‌ரின் புகைப்ப‌டம் இருக்கிற‌து என்று நினைக்கிறேன். அடுத்த‌ முறை இந்திய‌ ப‌ய‌ன‌த்தில் அதை வெளியுடுகிறேன். அது பிலிம் ரோலில் எடுக்க‌ப‌ட்ட‌து..இல‌க்ட்ரானிக் புகைப்ப‌ட‌ம் கிடையாது.


இந்த‌ ம‌னித‌னைதான் வீர‌ர்/தீர‌ர்/ விமான‌ப‌டையை வ‌ழி ந‌ட‌த்தி செல்லும் ந‌ப‌ர் என்று சில‌ வார‌ங்க‌ளுக்கு முன் ஒரு ப‌த்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்த‌து..lol


யாம் அறிந்த‌ உன்மையான‌ போர‌ட்ட‌த்த‌லைவ‌ர்க‌ள்/ யாரும் நீச்ச‌ல் குள‌ம் க‌ட்டி, மூன்று வேள‌ உன‌வ‌ருந்தி, தின‌மும் ம‌சாஜ் செய்து கொள்வ‌தில்லை. இவ‌ரின் ராச‌யோக‌ வாழ்க்கை சிறில‌ங்கா ரானுவம் ச‌ரியான‌ நேர‌த்தில் வெளியிட்டுவிட்ட‌து. ( பார‌திராசாவின் வீட்டில் கூட‌ நீச்ச‌ல் குள‌ம் கிடையாது)

ம‌திமுக‌/ நெடுமாற‌ன்
இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள‌ ப‌ற்றி க‌வ‌லை படாத‌ இந்திய‌ த‌மிழ் பேசும் வீர‌ர்க‌ள். பிராபாக‌ர‌னிட‌ம் இருந்த‌ ப‌ழைய‌ போர‌ட்ட‌ குண‌ம்/ விடுத‌லை‌ வேட்கையில் இருந்து அவ‌ர் வ‌ழி த‌வ‌ரிவிட்டார் என்று அறிந்தும் அறியாம‌ல் போல் இருப்ப‌வ‌ர்க‌ள். வைகோ வெற்றிபெற்று இருந்தால் அவ‌ருக்கு வெளிநாடு வாழ் த‌மிழ‌ர்( இந்திய‌ர் )குறை தீர்க்கும் துறை அளித்து இருக்க‌லாம்.


காங்கிர‌ஸ், திமுக
வெற்றி க‌ளிப்பிள் அந்த‌ கூட்ட‌ணி இருக்கலாம் ஆனால் வெற்றி என்ப‌து மிக‌சில‌ வாக்கு வித்யாச‌த்தில் தான் என்ப‌தை அவர்க‌ள் உண்ர‌ வேண்டும். ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்யுங்க‌ள் ம‌க‌த்தான‌ வெற்றியை ம‌க்க‌ள் த‌ருவார்க‌ள்.

கார்த்திக் ச‌ர‌த்குமார் பாஜக‌
ப‌ல‌ காம‌டிக‌ளின் ச‌ங்க‌ம‌ம்....


தென் சென்னை வேட்பாள‌ர் ச‌ர‌த்பாபு...
இட்லி வேக வில்லை


align="center">விஜ‌ய‌காந்த்
பிழ‌க்க‌ தெரியாத‌ ம‌னித‌ர்...இவ‌ருக்கு அர‌சிய‌ல் எதிர்கால‌ம் சிர‌(ற‌)ப்பாக‌ இருக்கிர‌து ( ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் மூச் விட‌லையே). கால‌த்திற்கு ஏற்ப‌ அனுச‌ரித்து போனால் தான் ( தொலை நோக்கு பார்வையோடு) அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ முடியும் என்ப‌தை இவ‌ர் இனிமேல் புரிந்து கொள்வார் இல்லை என்றால் சீக்கிர‌ம் க‌ட்சியில் இருந்து அனைவ‌ரும் வில‌கி த‌னியாவ‌ர்த‌ன‌ம் போட‌வேன்டிய‌துதான். தேர்த‌ல் வேலை செய்ய‌ இவ‌ர்க‌ள் க‌ட்சிக்கு தெரிய‌வில்லை.


மு.க‌. பெற்று எடுத்த‌ நான்கு எழுத்து அழ‌கிரி

ப‌ண‌ம், ப‌ன‌ம், ட‌ப்பு மூன்று எழுத்து...அய்யோ என்னை எழுத‌ விட‌லை ப‌ண‌த்தால் அடித்து விட்டார்க‌ள்..

தூத்துகுடி வ‌க்கீல்க‌ள்
த‌மாசு வ‌க்கீல்க‌ள்...ஒரு ப‌ட‌த்தில் வ‌டிவேலு ந‌டித்து இருப்பார் அவ‌ரை மின்ஜி விட்டார்க‌ள்


ஈரோடு வேட்பாள‌ர்
இருவ‌ருமே த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும்..ம‌க்க‌ள் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ளா இல்லை மிக‌வும் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ளா என்று கேட்டால் நான் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ள் என்று தான் சொல்லுவேன்....அவ‌ர் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர் ஆக‌ இருந்து எந்த‌ பிர‌யாச‌ன‌மும் கிடையாது....
வாக்க‌ளித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி ந‌ன்றி...

11 May 2009

ஓட்டு போட்டு ..go for voting


எல்லாரும் ஓட்டு போட்டு உங்க‌ள் ச‌ன‌நாய‌க‌ க‌ட‌மை ஆற்றுங்க‌ள்.
காலையில் நேர‌மே போய்விட்டு வ‌ந்துவிடுங்க‌ள்.
ந‌ல்ல‌வ‌ர்க‌ளை தேர்ந்து எடுத்து எந்த‌ பிர‌யோச‌ன‌மும் இல்லை. ( அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ஆக‌ இருந்த்து உங்க‌ள் தொகுதிக்கு தேவையான‌ திட்ட‌ங்க‌ள் வ‌ராது)
காலையில் க‌ட‌மை ஆற்றிவிட்டு அலுவ‌ல‌க‌ம் போக‌ மாட்டீர்க‌ள் அத‌னால் மொக்கை போட‌முடிய‌து உங்க‌ளால்... ஆனால் எப்ப‌டிய‌வ‌து வோட்டு நில‌வ‌ர‌த்த புகைப்ப‌ட‌த்துட‌ன் அப்லோடு செய்தால் நன்றாக‌ இருக்கும்.

ர‌வுடிக‌ளிட‌ம் மாட்டி கொள்ளாதிர்க‌ள்...அப்ப‌டியே அடிப‌ட்டாலும் ச‌ன் டீவியில் தோன்றி எதாவ‌து சொல்லுங்க‌ள் ( ச‌ன் ம‌ட்டும் தான் என‌க்கு வ‌ரும் அதான்)

முக்கிய‌மாக‌ த‌ண்ணிய‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு...: வோட்டு போட்டுவிட்டு அப்ப‌ற‌ம் த‌ண்ணிப‌க்க‌ம் போக‌லாம்

ந‌ல்ல‌வித‌மாக‌ சிந்தித்து பார்ட்து ஒரு முறைக்கு இருமுறை ப‌ட்ட‌னை அழுத்த‌வும்.

கையில் மை வைத்து கொண்டு போஸ் கொடுத்து பிளாகில் அப்லோடு செய்ய‌லாம்.

ஈரோடு வ‌லைப்ப‌திவர்க‌ள் க‌ருங்க‌ல்பாளைய‌ம்/செங்குந்த‌ர் ப‌ள்ளி/ வீ ச‌ட்திர‌ம் ப‌ள்ளி/ போன்ற‌ வோட்டு போடும் இட‌ங்க‌ளை புகைப‌ட‌ம் எடுத்து அப்லோடு செய்ய‌லாம்.

மேலும் ஈரோட்டில் ரெண்டு வோட்டு விலைக்கு உள்ள‌து, ந‌ல்ல‌ விலை வ‌ந்தால் கொடுத்டுவிட‌லாம் என்று இருக்கிறேன்...ஒரு ரேட்டு சொல்லுங்க‌ளேன் சார்...
(முன்ன‌ பின்னே இருந்தாலும் அட்ஜ‌ஸ் ப‌ன்னிக‌லாம் சார்)
பின் குறிப்பு: புகைப்ப‌ட‌த்தில் உள்ள‌ அம்மினியை தேடாதீர்க‌ள் அவ‌ர் வோட்டு போட்டு விட்டு போய் விட்டார் ச‌த்திய‌மா அவ‌ர் வோட்டு போடும் போதுதான் இந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுத்த‌து...எடுத்த‌து யாரா??? என்னாங்க‌ கேட்கிறீங்க...காது செரியா கேட்க‌லை....ச‌ரி சரி க‌ட‌மை ஆற்ற‌போங்க‌ள் சார்

12 Apr 2009

ஒரு பழைய மியுசியம்- Woodlands

இந்த வாரம் ரொம்ப போர் அடித்ததால் கூகிள் ஆன்டவரிடம் ஏதாவது இடத்தை காட்டு என்றபோது நிறைய அருளினார்...அவற்றில் அருகில் உள்ளதை தேர்ந்தெடுத்து போனது Woodland, CA -ல் உள்ள பழைய மியுசியம்.



நாம் இப்போது உபயோகபடுத்தும் விவசாயா Equipments- எல்லாம் அவர்கள் 50 வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த ஆரமித்துவிட்டார்கள்.





படத்தில் உள்ள 8ம் நம்பர் கூர் முனை என்ன வென்று தெரிகிரதா?
விடை அறிய மற்றும் முழுவதும் பார்க்க இங்கே கிளிக்கவும்


அதன் முகவரி: 1962 Hays Lane - Woodland, California 95776

(இந்த பதிவு திரு.செந்தில் அவர்களுக்கு ... அவருடைய மலரும் நினைவுகளுக்காக)

10 Apr 2009

அமெரிக்கா-மார்கெட்டிங் கால்ஸ்

இங்கு டு நாட் கால் லிஸ்டில் (Do Not Call) நம்முடைய நம்பரை ஆட் செய்துவிட்டால் கால்ஸ் வராது வந்தால் லீகல் ஆக்ஸன்ஸ் (Legal Action) எடுக்கலாம். நான் என்னுடைய நம்பரை ஏட் சிய்த பிறகு கால்ஸ் வருவது சுத்தமாக குறைந்து போனது.
கடந்த சில நாட்களாக மார்கெட்டிங் கால்ஸ் வர ஆரமித்தது.அதுவும் இந்தியாவில் இருந்து!!!!!அதாவது இந்தியாவிற்கு தொலைபேச காலிங் கார்டு விக்கும் கம்பெனி இனிவருவது எனக்கும் அவர்களுக்கும் நடந்தது

ஹலோ சார் குட் ஐ டாக் டு பீம்பாய்?
யெஸ் திஸ் ஈஸ் ஹி...

சார் வி ஆர் காலிங் பிரம் கிரகாம் டெலிகாம் வி ஏவ் அ நைஸ் ரேட்ஸ் டு கால் இன்டியா, சார் ஆர் யூ அ டமிலியன்?
யெஸ் ஐ ஏம்!!!!!

வணக்கம் சார் நீங்க எந்த காலிங் கார்டு யூஸ் செய்ரீங்க அதவிட சீப் ரேட்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது சார்.
வணக்கம் இது மார்கெட்டிங் காலா?

ஆமாம் சார்
நான் என் நம்பரைதான் Do not call list la Add செய்து இருக்கேனே அப்பறம் எப்படி கால் பண்ரீங்க?

எங்களுக்கு அதெல்லாம் ஏதும் தெரியாது சார் எங்க மேனேஜர் இந்த நம்பரை கொடுத்து கால் பண்ன சொன்னார் சார்.
சரி விஸயத்தை சொல்லுங்க

இந்தியா கால் செய்ய 3.5 சென்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது நீங்க சைன் பன்னுங்க சார்.
இல்லப்பா எனக்கு ஏதும் வேனாம், நான் இந்தியாவிற்கு அதிகம் பேசுவதில்லை.

சார் நீங்க தமிழ்நாடு தானே அப்ப கன்டிப்பாக வீட்டுக்கு பேசுவீங்கதேனே?
இல்லப்பா எனக்கு ஏதும் வேணாம், நாங்க எல்லாம் அதிகம் பேசுவடில்லை..

சார் பிளீஸ்..நீங்க சைன் பன்னால் தான் நான் இந்த வேலையில் கன்டினியு பன்ன முடியும் பிளீஸ் சார்
ஹலோ நீங்க எல்லாம் கால்ஸ் எப்படி ரவுட் செய்ரீங்க?

சார் நாங்க பி.எஸ்.என்.எல் (BSNL) ல வோல்சேல் ரேட்டுல மினிட்ஸ் வாங்கி டிஸ்டிரிபியூட் செய்ரோம் சார்.
இப்படிதான் சொல்லுரீங்க அப்பரம் பார்த்தா VOIP- ல கால்ஸ் ரவுட் செய்ரீங்க..அதனால வேணாம்

சார் பிளீஸ் சார்..
இல்லப்பா வேனாம் வேனாம்..விட்டுடு...

சார் பிளீஸ் சார்..
கால் கட் செய்துவிட்டேன்...பின் என்னங்க மார்கெட்டிங் கால்னா ஒரு கெத்தா பேச வேனாமா? கெஞ்ஜல் இருக்க கூடாது. அதுவும் 1008 சார் போட்டுகிட்டு.
இங்க வந்த பிறகு சார் போடும் பழக்கமே இல்லை சுத்தமா மறந்து போச்சு, யாரவது சார் போட்டால் நமக்கு என்னமோ போல் இருக்குது
(இந்தியாவிலே நான் யாருக்கும் சார் போட்டது கிடையாது)
சில தினங்கள் கழித்து மறுபடியும் கால்....ஹலோ நான் கொஞ்ஜம் பிஸி யா இருக்கேன் ஒரு 10 நிமிசம் கழித்து கூப்பிடுங்ளேன்...

OKey sir!!

கால் வரவே இல்லை
மறுபடியும் இதே டெக்னிக யூஸ் செய்து ஒரு 5 தடவை தட்டி கழித்து விட்டேன்.

இன்று வெள்ளிகிழமை வேலை கிடையாது..வீட்டில் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஒரு தெலுங்கு படம் பார்ட்து கொன்டிருந்தேன். (கோதாவரி thanks to sub title)
நல்ல படம் பிடித்திருந்தது...இந்த படத்தை ரெகமன்டு செய்து டிவிடி யும் நன்பர் கொடுத்து ஒரு வருடம் முழுதாக முடிந்திருந்தது.

ஒரு இனிய பொழுதில் அருமையான் கால் அழைத்தது அதே கம்பெனியில் இருந்து குரல் தேன் குரல் (அதே தான் பொன்னுமா பொன்னு)
வழக்கமான அறிமுகத்திற்கு பிறகு

சார் ஒரு காலிங் கார்டு செம ஆபர் சார் அப்படினு சொல்லுச்சு,
நான் சொன்னேன் எனக்கு சார் போட்ட பிடிக்காதுங்க என்று.

சரி உங்களுக்கு எப்படி பேசனும்னு சொல்லுங்க ...நான் அப்படி பேசுரேனு சொல்லுச்சு.
ஆஹா...இது எனன வித்யாசமா இருக்குது அப்படினு நிமிர்ந்து உட்கார்ந்து ஆத்தா நான் கொங்கு நாடு மனுசன் அதனால கொங்குல பேசுமானு சொன்னேன்...

தேனுங்க ஒரு காலிங்கார்டு இருக்குதுங்க...நம்பள மாரி அய்யனுங்களுக்கு சவ்ரியாமா இருக்கும்னு கூப்டனுங்க ...
ஆஹா காதுல தேனு வந்து பாயுது அப்படினு ஆத்தா கொஞ்ஜம் வெவரத்த சொல்லு ஆத்தா ஆனால் நான் வாங்க மேட்டேன் வேனும்னா கொஞம் வருத்துகொள்கிரேன் அப்படினு சொன்னேன்.

சரி சரி வருத்துகொள்ளுங்கள் என்று கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...
கடலை...கடலை...கடலை...கடலை...

நடுவில் கொஞ்ஜ்ம் கொஞ்ஜம் வாய்ஸ் பிரேக் ஆனது...அப்போது நான் எனாக்கா இதுவும் VOIP தானே அப்படினு கேட்டதுக்கு

இல்லபா இது நிறைய கடலைவருத்ததால் காது அப்பப்ப கேக்காது அப்படினு வெவரமா பதில் சொல்லிச்சு

சரிக்கா..அப்படினா இது மெய்யாலுமே VOIP இல்லியானு கேட்டேன்

அதான் மெய்யாலுமேனு சொல்லிகினுகீர நீ என்னா என்ன நம்பட்ட்கீர அப்படினு தாய் தமிழர் பாஸையில் கலக்கிடுச்சு.

அப்பறம் கேஸ் (GAS) தீர்ந்து..கடலை தீஜ்ஜி மூக்குல smell ஏறி தும்மல் வர ஆரமித்துவிட்டது.

சரிக்கா வச்சிடவனு கேட்டேன்..அப்ப அது கேட்டது பார் ஒரு கேள்வி...அது தான் விசேசம்.

இன்னா நேரம் வறுத்தாயா அதுக்காவது சைன் பன்னுடானு சொல்லுச்சு


16 Mar 2009

பிரிவோம் சந்திப்போம் பாகம்- 2

நேற்று தற்செயலாக சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் பாகம் 2 கிடைத்தது, முதல் பாகம் படிக்கவில்லை ஆனாலும் என்னதான் என்று படிக்க ஆரமித்தேன். விறு விறுபான எழுத்து நடை ஒரே மூச்சில் படிக்க தூன்டிற்று. இந்த நாவல் எழுதி 25 ஆண்டுகள் இருக்கும் என்பது கூகிள் ஆண்டவர் தகவல் அருளினார்.

நியுயார்க் விமான நிலையம் அதன் பிரமாண்டம், ஹைவே, ஃபிரி வே, ஸ்டேட்டன் ஐலென்டு, பிராட்வே, மோசமான் இரவு வாழ்க்கை, 100 K வாங்கிரவங்கலாம் மேல் தட்டு மக்கள், பிட்ஸ்பர்க் கோயில், வீக் என்டு பார்ட்டிகள்,பேஸ்மென்டு, ஆண்கள் குடி, பெண்கள் டீ.வீ, கட்டிபிடி முத்தங்கள்,லாஸ்வேகாஸ் சூதாட்டம்,டேன்ஜூர் (Tanjore) பாட்டிகள், மாமா, மாமிகள், பஞ்ஜகட்சம்,பொரபசர் அசைன்மெட்டுகள்,வகுப்புத்தோழியின் கர்பம்,ரெஸிசன், வேலை போய்டும் என்ற பயம், எதியும் பிரம்மாண்டமாக படைக்கும் அமெரிக்க தொழில் நுட்ப்பம்,அமெரிகா அப்படியே இருக்கிறது, மிகசில மாற்றங்களை தவிர.

இப்போது மாமா மாமிகளை தவிர கொங்கு அய்யன் ஆத்தாள் களும், டின்னல்வேலி ஏலெய் களும்,சென்ணை நைனாக்களும், இன்னாபாக்களும், சாப்ட்வேர் புண்ணியத்தால் நிறைய தமிழ் மக்கள் இருக்கிரார்கள்.அதே வீக் எண்டு பார்ட்டிகள்,இன்னும் 100-கே வாங்கரவங்களாம் மேல் தட்டு மக்கள் (அவங்களாம் பி.எம்.டபிள்யு சாதி)அவர் சொன்ன மாதிரி சாப்ட்வேர் ஒரு சுனாமி போல வந்து 25 ஆண்டுகள் நிலைத்து விட்டது,. இப்போது சிறிது ஆட்டம் கண்டுள்ளது.

யோசனை செய்து பார்த்தால் அமெரிக்கா எபோதும் தொழில் நுட்பத்தில் 50 ஆண்டுகள் முன்னேரி இருக்கிரது.(Advanced) 80களின் கால கட்டத்தில் ரெஸிஸன் பீரியட்களில் தகவல் தொழில் நுட்ப்பம் போன்ற புதிய டெக்னாலஜிகல் அறிமுகம் ஆகி பீறுநடைப்போட்டு வந்தது.
அதற்கு முந்தைய ரெஸிஸன் பீரியட்கள் மெக்கானிகல், மற்றும் மருத்துவர்களும், அதற்கும் முன் பசுமை புரட்சியும், பேஸிக் இன்பராஸ்டக்ச்சர் களும் ரெஸிஸன்களி தூக்கி நிறுத்தியது.இப்போது என்ன செய்ய போகிரார்கள் என்பது ஒரு டிரில்லியன் டாலர் கேள்வி.

Year 1982 கால கட்டத்தில் ஒரு டாலர் என்பது 10 ரூபாய். இப்பொழுது அப்படி இருந்தால் 95 சதவிகித நம் மக்கள் இந்தியா திரும்பி விடுவார்கள்.

ஒரு சில அபத்தங்களும் இருக்கிரது நாவலில். அமெரிகா வந்தவுடன் பாபனாசம் பெண் மது அருந்த கற்று இருக்கிறாளாம், ஆனால் கற்பு விஸயத்தில் தமிழச்சியாக இருக்கிறாளாம்,(அதற்காக மது அருந்துபவர்கள் எல்லாம் மோசமானவர்களாக இருக்க வேண்டும் என்ரு அர்த்தம் கொள்ளகூடாது) கணவனின் பெண் லீலைகள் பார்த்து தானும் பழைய காதலுடன் ஓடிப்போவது என்பதுலாம் இப்போது ஓ.கே தான் ஆனால் அந்த கால கட்டத்தில் எப்படினு தெரியலை, ஒருவேளை எழுத்து புரட்சியோ?

9 Feb 2009

கொஞ்ஜம் வலி, ஒரு போன்கால் = ஹார்ட் அட்டாக்

இது சமிபத்தில் ஏற்ப்பட்ட நிகழ்வு.

ஒரு தந்தைக்கு மார்பில் கொஞ்ஜம் வலி, மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார், பரிசோதனைகள் முடிந்து வேறு ஒன்றும் இல்லை பீ.பீ சற்று அதிகம் என்று ஐ.சி.யு வில் அட்மிட் செய்துள்ளார்கள். ஒரு 12 ஆயிரத்திற்கு மருந்துகள் எழுதி கொடுத்து... வாங்கியும் கொடுத்து விட்டார்கள்.

தந்தையின் உடல் நலன் அறிய தமையன் அமெரிக்காவில் இருந்து டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான். யார் என்று கூறிவிட்டு விவரம் கேட்கிறான். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் கேஸ் ரிக்கார்ட் பார்த்துவிட்டு விவரம் கூறுகிறேன் என்றார். ஒரு 15 நிமிடம் கழித்து மறுபடியும் டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான்.

அமாங்க கொஞ்ஜம் பிளாக் இருக்குது இன்னும் ஒருநாள் ஐ.சி.யு வில் மானிட்டர் செய்துவிட்டு பின்னர் ஆஞ்ஜியோ வா அல்லது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வதா என்று முடிவெடுக்கலம் என்று கூறினார். நம்ப ஆளு சில பல குறுக்கு கேள்விகளை கேட்கிறார் அதற்கும் அவர் பதில் அளித்துவிட்டு மறுபடியும் கூப்பிடுங்கள் என்று சொல்லி அழைப்பை துன்டித்து விடுகிறார்.

எதோ ஒரு உள்ளூனர்வு டாக்டரிடம் தவறு இருக்கிறது என்று சொல்லியது...உடனே தந்தையிடம் பேசுகிறான். (Technology works, thanks to cell phone ) அவரும் இப்போதுதான் டாக்டர் வந்து பரிசோதனை செய்துவிட்டு பிளாக் இருக்கும் போல் உள்ளது என்றும் குடும்பத்தை பற்றீ விசாரித்ததாகவும் சொன்னார்.

இவனின் உள்ளுனர்வு சரிதான் என்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுவிடுமாறு கூறினான், அவரும் சரி என்று மருத்துவ மனை சிப்பந்திகளிடம் கூறிவிட்டு பில்லுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.ஒரு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் டாக்டரின் அலைபேசிக்கு அழைக்கிறான், என்னங்க உங்க அப்பா டிஸ்சார்ஜ் ஆகனும்னு சொல்லுரார், பிளாக் இருக்குது இன்னும் ஒரு நாள் பார்த்துட்டு சொல்லுறேன் என்றால் சின்ன பிள்ளை போல் வீட்டுக்கு பொகனும்னு சொல்ரார், எதாவது என்றால் என்மேலதான் அப்பறம் சொல்லுவீங்க அப்படி இப்படி என்று சொல்லி அழைப்பை முடித்து கொன்டார்.

அவரும் டிஸ்சார்ஜ் அகி (Rs:22.500) ஒரு இரவு ஐ.சி.யூ வாடகை செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார், அன்று இரவே சென்னை நோக்கி பயனம், அங்கு பரிசோதனைகள் முடிந்து ஒன்றும் பிரச்சனை இல்லை பி.பி அதிகம் என்று மருந்துகள் அளித்துள்ளார்கள்.

ஒரு தொலைபேசி அழைப்பு பி.பி என்ற நோயை ஹார்ட் அட்டாக் அக மாற்ற முடிந்தது. பாவம் அவருக்கு என்ன கஸ்டமோ இன்று இந்த அப்பாவி தந்தை மாட்டினர். நாளை யாரோ?

ஐ.சி.யுக்கு இவ்வளவுதான் கட்டனம் என்று ஒரு வரை முறையிலாமல் பணம் பிடுங்கும், நோயின் தன்மையே மாற்றிய டாக்டரின் மேல் நடவடிக்கை எடுக்க என்ன வழி?

நடந்த இடம்: ஈரோடு.
நடந்த மாதம் : சனவரி- 2009
மருத்துவ மணை: கோவையில் உள்ள பெரிய மருத்துவ மனையின் ஈரோடு கிளை.
( இவர்களுக்கு ஈரோட்டில் 2 கிளைகள் உள்ளது)

மருத்துவரின் பெயர்: தூத்துகுடி (மூழ்கி எடுக்கும் )குமார்

2 Feb 2009

முட்டாள் முத்துகுமாரா

தற்கொலையை தூன்டுகிறவன் கையாலகதவன்
தற்கொலையை நினைப்பவன் பைத்தியகாரன்
தற்கொலையை நாடுபவன் முட்டாள்
முட்டாள் முத்துகுமாரா...
உன்னுடைய சாவுசெய்தி கேட்டு ரொம்ப கஸ்டமா இருந்தது. அதே நேரம் உன் செயல் நினைத்து ரொம்ப வேதனைப்பட்டேன்.வாழ வேண்டிய வயதில் தேவை இல்லாமல் எதுக்கு செத்துபோனாய்? நீ செத்து போனதால் எதாவது நடந்ததா? உன்னைப்பார்த்து இன்னொருத்தன் காப்பி அடிக்கிறான்.


மரணத்தினால் சாதிக்க நினைப்பதெலாம் அந்த காலம் அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம், அப்போதலாம் மனசாட்சி உள்ள தலைவர்கள் இருந்தார்கள், பின்னாளிள் அவர்கள் எல்லாம் கூட மாரிவிட்டார்கள்.


அச்சுதுறையிதானே பணி உனக்கு ..எத்தனை தற்கொலைகளை நீ பார்த்திருப்பாய்? ...எத்தனை கம்போஸ் செய்துருப்பாய் அப்போது உன் மணம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்? அதே வேதனை தானே இப்போது எங்கள் அனைவருக்கும்.


நீ செத்து போனதால் ராஜ பக்ஸே போரை நிருத்திவிட்டாரா?

நீ செத்து போனதால் இந்தியா ஏதும் நடவடிக்கை எடுத்ததா?

நீ செத்து போனதால் பிரபாகரன் தன் இன மக்களையே கேடயமாக உபயோகப்படுத்துவதை நிருத்திவிட்டாரா?

நீ செத்து போனதால் தமிழ் ஈழம் மலர்ந்துவிட்டதா?


நீ செத்துப்போனதால் சத்யம் ராஜு பின்னுக்கு போய்விட்டார்.

நீ செத்துப்போனதால் நாகேஸ் மரணம் குறைந்த விளம்பரம் கண்டது.

நீ செத்துப்போனதால் ம.தி.மு.க வில் ஒருவர் செத்து போனார்.

நீ செத்துப்பானதால் அரசியல் வாதிகளுக்கு விளம்பரம் தேடி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.


நீ யாருக்காக செத்து போனாய்? ஈழ தமிழனுக்கா அல்லது வீனாய் போன விடுதலைப்புலிகளுக்கா? யாரோ ஒருவருக்கு என்றாலும் நீ கன்டிப்பாக முட்டாள்தான். நீ செத்துபோனதால் உன் மரணத்தை வைத்து அரசியல் நடத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.


நீ வீனாய் போனவர்களுக்கு செத்து போய் இருந்தால்.
முட்டாளே நீ செத்து போனது நம்பகதன்மை இல்லாத/ வளையும் தன்மை இல்லாத/சமாதனத்துக்கு தயார் இல்லாத/எதையும் செய்ய துனிந்த/ சர்வாதிகார கூட்டத்திற்கு செத்து போய் இருக்கிறாய்.


ஈழ தமிழனுக்கு செத்து போயிருந்தால் நானெல்லாம் 1983- 1984 ல் செத்து போயிருக்கவேண்டும்.


நான் ஈழபோராட்டதையோ, விடுதலைப்புலிகளையோ ஆதரிப்பவன் இல்லை. ஒரு மனித இனம் தாக்குதலுக்கு உன்டாகிறது என்கிறபோது (அழிப்பதும் மணித இனம் தான்..வேதனையாக் உள்ளது) எழும் மனக்குமரல் உள்ள சாதாரன மணிதன் தான். யாருக்ககவும் யாரும் உயிரை விட தேவை இல்லை. பிறந்தோம், முடிந்தால் புகழுடன் வாழ்ந்தோம், இறந்தோம் என்பதுதான் வாழ்க்கை.


இடையில் முடித்து கொள்ள யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என தீர்மானமாக நம்பும் சராசரி மனிதன்.( தவிர்கமுடியாத காரணங்களால் கருனை கொலை தவிர்த்து)

24 Jan 2009

குமுதம் வார இதழுக்கு ஒர் கடிதம்

எல்லாரும் இப்பொழுது எதாவது ஒரு வார இதழுக்கு கடிதம் எழுதுகிறார்கள், இது நான் எழுதும் முதல் கடிதம்...இல்லை வின்னப்பம்னு கூட என்று சொல்லலாம்.

அன்புள்ள குமுதம் இதழ் மார்கெட்டிங் மேனேசருக்கு வணக்கம்.
தங்கள் குமுதம் டாட் காம் சனவரி 31ம் தேதி முதல் பே சைட் ஆகிறது என்றும் சந்தா கட்டுங்கள் என்று அறிவித்து இருந்தீர்கள் சரி நானும் நினைவு தெரிந்த நாளில் இருந்து படிக்கும் இதழ் என்று ( ஒரு டீஸ்பூன் ஒரு கொலை, நான் படித்த முதல் கதை என்று நியாபகம்)சந்தா கட்ட சென்றேன்...வந்ததே மயக்கம் சாதா, டீலக்ஸ், ஸ்பெசல் டீலகஸ் என்று ஆம்னி பஸ் கனக்கா சந்தா கட்ட சொல்லியிருந்தது. (முறையே 50.00 USD, 99.00USD, 250.00USD (3 years)).

ஏனுங்கனா நாட்டுல விலைவாசிலாம் ஏறிப்போச்சு, உலகமே பொருளாதார மந்ததுள இருக்குது அப்பரம் எப்படிங்கனா நாங்க போயி அப்புட்டு பணம் கட்ட முடியும், சரி அதுக்கு நாங்க இலவசமா தரமுடியும்னு கேட்காடீங்க...(ஏன் குடுத்தாதான் என்ன அரசு கலர்டீவி தருது, நெலம் தருது, அரிசி ஒருரூபாய்கு தருது)

ஒரு நியாயமான் ரேட்டு வச்சு குடுபா நாங்கனா வேனாம்னா சொல்லபோரோம், ஏன் உன் கூட்டாளி விகடன் பாரு சூப்பரா ரேட்டு வெச்சுனு இன்னாம கலக்கரான். நீ மெய்யாலுமே ரோஜனை பன்னு ராசா, எத்தினி பேரு நீ குடுக்குர வீடியா லாம் எரக்கினு இருக்கபோரானுங்க, எங்கள் மாதிரி சனம் லாம் சும்மா வந்தமோ, படிச்சோமானு தான் போராங்க, வேனும்றவங்க பே பெர் டவுன்லோட் நு குடுக்கசொல்லுமா.கொஞ்ஜம் மன்சு வைராஜா.

சரி வாங்கர காசுக்கு ஒழுங்கா கஸ்டமர் சர்வீஸ் இருக்கா? (அப்டீனா என்னானு கேட்கராங்க உங்க ஆபிஸ்ல) பிரின்ட் சந்தால சில குளருபடி இருந்தது பேக்ஸ், ஈ-மெயில்னு அனுப்பிபார்த்து பதில் இல்லை, சரினு மெனக்கெட்டு ராத்திரி முழிச்சிட்டு இருந்து உங்களுக்கு போன் பன்னினா (வெளிநாட்டில் இருந்து) காது குடுத்து கேட்க கூட ஆள் இல்லை உங்க ஆபீஸ்ல. வார இதழுக்கு பணமும் கட்டி அதை பற்றி விசாரிப்பதற்கு பணமும் விரையம் செய்து பிளட் ப்ரசர் ஏற்றி கொன்டதுதான் மிச்சம்.
இப்ப கூட பாருங்க சனவரி 31ம் தேதி வரை இலவசம் என்று சொல்லிட்டு சனவரி 24 அன்றே என்னை உளே விட மாட்டேன்ங்குது. (சரி உங்க சைட்டு உங்க இலவசம், எப்பவேனும்னாலும் ஸ்டாப் செய்ங்க, ஆனா வார்த்தைனு ஒன்று இருக்கு இல்ல?)

அப்பறம் ஒன்னு நியாபகம் வைத்து கொள் ராசா வெளிநாட்டில் இருக்கும் எல்லாரும் (அதிக) பணம் கட்டி படிக்கும் அளவிற்கு வசதி இல்லை ராசா, எல்லாரும் உங்க டைரக்டர் சவகர் அளவிற்கு 3 மில்லியன் டாலர்லாம் சம்பதிப்பதில்லை. ஏதோ எங்களால் முடிந்த அளவிற்கு பணம் கட்டுரொம், கொஞம் மனசு வைங்க, நியாயமான ரேட்டு வைங்க,நிறய கஸ்டமர்களை வைத்து நிறெய பணம் சேருங்க.

(அது சரி இந்தியாவில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் அமெரிக்க டாலரிலா தெரிகிறது?)

13 Jan 2009

கன்டிப்பாக இன்டர்வியு டிப்ஸ் அல்ல

IT பீல்டுல இந்தியா அலுவலகத்தில் 8வதில் இருந்து காலேஜ் வரை ரேங் பார்க்கிராங்கள், அப்பறம் 1008 கேள்விகள் மற்றும் குருப் டிஸ்கஸன்ஸ்.கேள்வி பட்ட வரையில் இதுதான் நடந்துள்ளது.எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்பறம் கான்செப்ட்--ல ரொம்ப கேள்வி கேட்கிறாங்களாம் இதுவும் கேள்விபட்டதுதான்.

ஆனால் அமெரிக்காவில் வேறு மாதிரி நீங்க ரெஸ்யூம் ல என்ன போடுரீங்களோ அத நம்பி இன்டர்வியுக்கு கூப்பிடுவாங்க. இந்த ஐ.டி பீல்டுல 60% போன் இன்டர்வியுதான் இருக்கும். (My guess)இது நம்ப மக்களுக்கு வசதியா போய்டும், கம்ப்யூட்டர்ல கூகிள் ஆண்டவரை ஓப்பன் செய்து வைத்துகொண்டு, இன்னும் ஒரு விண்டோவில் கீக் இன்டர்வியு.காம் ஓப்பன் செய்து போனில் பதில் அளிப்பார்கள். ஒரு சிலர் தனக்கு பதில் வேறு ஒருவரை பதில் அளிக்க விட்டு ஸ்பீக்கர் போனில் அதை கவனித்து கொண்டு இருப்பார். (இந்த வசதி சில தெலுகு நன்பர்களுக்கு வசதியாக் போய்விட்டது)

அமெரிக்காவில் வேலை புடிப்பது எப்படினு சிம்பிளாக ஒரு பார்வை. (Consultant).
H1B ஹெ.ச் 1பி விஸா வைத்து இருப்பவர்கள் ஸ்பான்சர்டு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது கன்ஸல்டன்ஸி மூலமாக் கிளையன்ட் சைடில் வேலை செய்யலாம்.கிளையன்டிடம் வேலை என்பது 6 மாதம் முதல் 1 வருடம் அல்லது சில வருடங்கள் நீடிக்கும்.

The H1B Sponsored Company: Work for them.
The H1B Sponsored Company: work for their clients.
The H1B sponsored Company: Will sell u to other Clients/bodyshops. This Client/bodyshop may or maynot sell to others. (these people are called Middle man)

இந்த Will sell you to others என்ற பிரிவில் நிரைய கோல்மால் நடக்கும் மற்றதில் கொஜ்ஜம் குறைவு.

A simple example. Once ur project is over in Client X then one will post his/her resume either in Monster, Jobs DB, AJB. The middle man or body shops who won/have the project or wanted you they will call u/email u. இங்கு நீங்கள் டைரக்டாக அவர்களிடம் வேலை செய்ய முடியாது, உங்கள் H1B ஸ்பான்சர் மூலமகதான் போக வேண்டும்.
இதில் ரேட் பேரம் நிறைய நடக்கும், ஒத்து வந்தால் ஓ.கே. அல்லது புதுசா வந்த பசங்கள/பொன்னுங்களை எக்ஸ்பீரியன்ஸ் உள்ள மாதிரி கான்பித்து உள்ளே நுழைத்துவிடுவார்கள்.

அமெரிக்கா மேனேஜர் இன்டர்வியு பன்றார் என்றால் ஜஸ்ட் 3- 5 கான்செப்ட் கேள்விதான் இருக்கும், மீதி எல்லாம் அரட்டை தான். They just look in to the persons Communicating/ability to speak/how he/she behaves.

பிடித்திருந்தால் ஐ ஏம் ஓ.கே, I வில் கால் யு பேக் இன் எ டே, என்று சொல்லிவிடுவார். சொன்ன மாதிரி பிடித்திருந்தால் கால் செய்து கன்கிராட்ஸ் சொல்லி வேலைக்கு வரும் தேதியை சொல்லுவார். பிடிக்கவில்லை என்றால் ஒரு ஈ-மெயில் வந்து சேரும் சாரியுடன்.

இதே ஒரு இந்திய மேனேசர் என்றால் அவ்வளவுதான் ஒரு 60 கான்செப்ட் கேள்வி வரும், அவர் எதிர் பார்க்கும் பதில் வந்தால் தான் ஓ.கே. நீங்கள் சரியான் பதில் அளித்தும் அவர் எதிர் பார்த்த பதில் வரவில்லை என்றால் நீங்கள் ஏவெரேஜ் ரகம் தான். சோசியலாக எந்த கேள்வியும் இருக்காது. ஒன்லி ஜாப் சம்பந்த பட்ட கேள்விகள் மற்றும் முன்னால் வேலை பார்த்த அனுபவங்கள் சம்பந்தமாகதான் இருக்கும். அவரையும் குறை சொல்ல முடியாது ஏனென்றால் நாம் வளர்ந்த விதம் அப்படி.
இதில் உள்ள கொடுமை என்ன வென்றால் அவரும் கேள்விகளை கீகின்டர்வியு.காம் அல்லது வேறு எதாவது வெப் சைட்டுல இருந்துதான் உருவி இருப்பார்.

இன்டர்வியு முடிந்தவுடன் சரி ஐ வில் கெட் பேக் என்று சொல்லுவார், ஆனால் செலக்ட் ஆகவில்லை என்றால் ஒரு மெயிலும்/போனும் வ்ராது செலக்ட் ஆகிவிட்டால் அவரது ஆபிஸ்ல் இருந்து வேரொருவர் கூப்பிடுவார்.

அடுத்த ரகம் சின்கு என்று செல்லமாக அழைக்கப்படும் சீன வம்சாவளியின மேனேசர்கள். இவர்களும் இந்திய மேனேசர் க்கு குறைவில்லாமல் கேள்விகளை வீசுவார்கள், அனத்தும் வேலை மற்றும் அனுபவம் சம்பந்தபட்ததாகவும், படிப்பு சம்பந்தமாகவும் கேள்விகளை வீசுவார்கள்.நிறைய நேரம் ஆங்கிலம் கடித்து துப்புவார்கள்.பிடித்திருந்தால் ஓ.கே என்று கூறிவிடுவார்கள்.

நம்ப கன்ஸல்டன்சி யில் ஒருவர் இந்திய மேனேசர் என்றால் சாரிங்க வேர Company பாருங்க என்று சொல்லிவிடுவார்.

ஏன் இந்திய மேனேசர் இவ்வளுவு டெரெர் ஆக இருக்கிறாங்க்க தெரியுமா? பின்னே நம்ப ஆளுங்கள பத்தி நமக்கு தெரியாத என்ன? விட்டா மேனேசர் இடத்தை பிடித்து விடுவாங்களே

12 Jan 2009

க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-2

வணக்க்கம் நன்பர்களே, எப்படி இருக்கீங்க, அலைகடலென திரன்ட ஈ-மெயில்கள் எங்கே பாகம் இரண்டு எனகேட்டு இருந்தார்கள். இதோ இங்கே தொடர்கிறது. க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-1

முன்கதை...
ஆத்தா நான் 3 மாசம் மின்னாடியே புக்கு/நோட்டு லாம் செஞ்ஜாச்சு, இது கன்பார்ம்டு டிக்கட்டு அக்கா, உங்க கம்பியூட்டரில் நல்ல பார்ட்து சொல்லுங்க அக்கா. ..கிளி திருப்பி திருப்பி அதெயே சொல்லுச்சு.சரி இது வேலக்க்காவாதுனு ஏர்லைன்ஸ் மேனஜர் பார்த்து பேசலாம்னு அவர எப்படி பார்க்கரதுனு கேட்டா..3மாடி போயி பாருங்க்கனு ரூட் போட்டாங்க.

இனி...
அங்க போனா அவர் How to deal Angry Customers என்ற புத்தகத்தை படித்து கொன்டிருந்தார்.நாங்கள் வந்த விசயத்தை சொல்லி அதே பிளேனில் இடம் கேட்டோம். அவரும் எங்களுடன் இறங்கி கீழே வந்தார். கிளிகளிடம் பேசிவிட்டு சாரி சார் இது கம்யூனிகேசன் கேப்பில் வந்த குளருபடி சற்று பொருங்கள் என்று கூறிவிட்டு வேறுஒரு பூத்திற்கு நடந்து போனார்...அங்கிருந்து சில போன்கள் மற்றும் வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசினார்.நேரங்கள் கடந்தது, மணீத்துளிகள் கரைந்தது விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. நான் பொறுமை இழந்து அவரிடம் விமானம் புறப்படும் நேரம் நெருங்கி விட்டது என்றும் என்ன சார் என்று கேட்க இல்லிங்க பைலட்டிடம் பேசிவிட்டேன், எதோ எடை பிரச்சனை எனாறும் சில லக்கேஜிகளை இறக்கிவிட்டு ஆட்களை ஏற்ற முயற்சி செய்வதாக கூறினார்.
(காமளையன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ஜளாக தெரியுமாம் அது மாதிரி அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மன நிலையில் தான் இருந்தோம்.பின்னாடிதான் தெரிந்தது அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பரந்து போச்சி என்று.)

நாங்கள் பொறுமை இழந்து அனைவரும் சண்டைக்கு இறங்க பிற்பாடு சாரிங்க ஏதோ தவறு நடந்துவிட்டது, உங்கள் அனைவருக்கும் 5 ஸ்டார் விடுதியில் அறை எடுத்து தங்க வைக்கிரோம் காலை முதல் விமானத்தில் ஏற்றி அனுப்புகிரோம் என்று அடுத்த வலையை வீசினார். அந்த வலையில் 2 குடும்பங்கள் சரி என்று தலை ஆட்டியது. எனக்கும் புரிந்துவிட்டது இது வேலைக்காவாது நாமும் தலை ஆட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து அவரிடம் சரி சொல்ல போனேன் அவரோ நீங்கள் பட்ஜெட் ஏர் இன்டியா-வில் (Air India Budget) போகிறீர்களா என்று கேட்டார், ஏதோ ஒன்று முதலில் சென்ணை போய் சேர்ந்தால் போதும் என்று சரி என்று தலை ஆட்டிவிட்டேன்.பிற்பாடு ரொம்பவே...வருத்தபட்டேன்.அவரும் அந்த ஆபீஸ் சென்று வந்து கொஞம் பொறுங்கள் அவர்களின் ரிசர்வேசனுக்கு முன்னுர்மை தந்து அவர்களின் ஆட்கள் எல்லாம் ஏறிய பிறகு இடமிருந்தால் நீங்களும் போகலாம் என்று கூறிஅனார். அதற்கும் தலை ஆட்டிவிட்டு பொறுமை காத்திருந்தோம்.10.25 விமானத்திற்கு 10.05 க்கு எங்களுக்கு போர்டிங் பஸ் கொடுத்தார்கள். சரி என்று வாங்கி கொண்டு விமானம் நோக்கி ஓடினால், செக்யூரிட்டி செக்கில் கைப்பட்டியின் எடை 6 கிலோவிற்கு மேல் இருக்க கூடதுஎன்று சொல்லிட்டார்கள். மெயின் பெட்டி ஏதும் எங்களிடம் இல்லை, நாங்கள் நடந்ததை கூறி அட்லான்டிக் கடல் தான்டி வந்து உள்ளோம் எங்களுக்கு 9 கிலோ வரை அனுமதி இருக்கிறது என்று சொல்லியும் விடவில்லை. சரி 3 கைப்பட்டியை எப்படி பிரித்தாலும் 6 கிலோவிற்கு மேல தான் இருந்தது. கைபெட்டியில் இருப்பது அனைத்தும் முக்கியமானவை எதையும் வீசி எறிய முடியாது.மறுபடியும் மேனேசரிடம் ஓடினோம், சரி 2 கைப்பிட்டியில் முக்கியமானது எடுத்து கொன்டு ஒரு பெட்டியை லக்கேஜ் ஆக மாற்றிவிடுங்கள் என்று கூறினார்.சரி என்று மாற்றிவிட்டோம். பின் செக்கிங் முடிந்து விமானம் நோக்கி ஓடினோம், அங்கிருந்து அந்த விமானம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று குறித்திருந்தார்கள். 12 mins (ஒரு நல்ல விசயம் இது )ஓடோடி போனால் விமானத்தின் கடைசி சீட் (வால் பகுதி) இடம் அளித்திருந்தார்கள்.அனைவரின் கண் பார்வைக்கு இலக்காகி போய் அமர்ந்தோம், வரிசையாக அனத்து குடும்பங்களும் வந்து சேர்ந்தனர்.ஒருவழியாக விமானம் புறப்பட்டது, அருகில் அமர்ந்து இருந்த சிங்கபூரியனிடம் அலை பேசி வாங்கி நன்பருக்கு விவரத்தை சொல்லி இந்தியாவில் எங்களை வறவேர்கக சென்னை விமான நிலையத்த்ல் காத்திருக்கும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டோம்.
(இங்குதான் அலைபேசியின் முக்கியத்துவம் தெரிகிறது)

பிற்பாடு விமான பணிப்பெண்கள் தள்ளு வண்டியில் ஒரு பிரெட் மற்றும் ஒரு ஜீஸ் கொடுத்தார்கள், மற்றொரு பணிப்பெண் சாரயக்கடை தள்ளி கொண்டு வந்தார். I just surprised they came with sample bottles coz usually they will open the big bottles and pour in to the small cups (cost cutting) சரி கலக்சனுக்கு ஆகும் என்று 3 பாட்டில் வாங்கி வைத்து கொன்டேன். அப்படியே கண் அயர்தேவிட்டேன். கொஞ்ஜ நேரம் கழித்து யாரோ தோளை தட்டி சார் சார் என்று அழைப்பு, பார்த்தால் பணிப்பெண் 18சிங்கை டாலர் கேட்டார், எதற்கு என்று வினவியபோது 3 பாட்டிலிக்கு என்று கூறினார். இது இன்டர்னேஸனல் பிளைட் தானே? அப்பறம் எதுக்கு காசு கேட்கிறீங்க என்று வினவிய போது இல்ல சர் இது பட்ஜெட் ஏர்லன்ஸ் சோ வி ஏவ் டு கலெக்ட் அப்படினு சொன்னாங்க, அப்படியே பாட்டிலை திருப்பி தந்துவிட்டு கடுப்புடன் அமர்ந்திருந்தேன்.பின் அவரை அழைத்டு குடிப்பதற்கு தண்ணி பாட்டல் கேட்ட போது ஒரு ஆளுக்கு ஒரு முறைதான் இலவசம் என்றும் மறுபடியும் வேன்டுமானால் பணம் கொடுத்து பெற்றுகொள்ளவும் என்று கூறிவிட்டார்.கடு கடு முகத்துடன் அமர்ந்திருந்தேன்.மனதுக்குள் ஆயிரம் என்னங்கள் கேஸ் போடலாமா? இல்லைனா எப்படி டீல் பன்னலாம்னு.கடைசியில் தானே அமர்ந்திருந்தேன், பனிப்பெண்கள் பேசுவது எல்லாம் கேட்டது அவர்கள் ஊர் கதி எல்லாம் பேசிவிமானம் இறங்குவதற்கு முன் வாழைப்பழ ஜோக் சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்கள். நான் குறுக்கால பூந்து அக்கா அது ரொம்ப பழைய சோக்குகா என்று கூறவும் அவர்கள் முகம் ஒருமாதிரி போனது.ஒருவழியாக விமானம் சென்னை வந்து சேர்ந்தது, இமிகிரேசன் முடித்து பொட்டி எடுப்பதற்கு வந்த போது பெரிய பொட்டி அனத்தும் முதல் விமானத்தில் வந்து விட்டது போலும் அனைத்தும் ஒரு தள்ளு வன்டியில் வைத்து இருந்தார்கள். சிங்கபூரில் செக் செய்த கைப்பெட்டி வரவில்லை. அதற்கு கம்பெளைன்டு குடுக்க வரிசையி நின்று அனத்து தகவலையும் சொல்லி ரசிது வாங்குவதற்குள் 2.30 மனினேரம் முடிந்திருந்தது.நாம் தான் 2 நாள் கழித்து வந்து வாங்கி கொள்ளவேன்டுமாம், அவர்கள் வீடிற்கு டெலிவரி செய்ய மாட்டார்களாம். மறுபடியும் ஒரு சென்னைப்பயனம் செய்யவேன்டியதாயிற்று.சென்னை டூ ஈரோடு கோவை எக்ஸ்பிரசில் அருமையான் பயனம், வண்டி முழுவதும் நடந்து நடந்து, தோசை, மசால் வடை, அனைத்தும் வாங்கி, கதவோரம் நின்று அருமையாக காற்று வாங்கி ஈரோடு வந்து சேர்ந்தோம். ( அது சரி ஏன் அமெரிக்க டூ இந்தியா ரயில் இல்லை)

பிற்பாடு பெட்டியை எடுக்க ஒரு பிரளயமே நடத்த வேன்டியதாயிற்று அதற்கு செலவு செய்த தொகை பெட்டியில் உள்ள மதிப்பை விட அதிகம் ஆயிற்று. பின்னாளில் ஏற்ப்பட்ட விபத்து , மருத்துவமனை அனுபவங்கள், டிக்கட் ரீகன்பார்ம் செய்ய அலைந்தது என்று நிறைய எழுத ஆசைதான், ஆனால் அது ரொம்ப சுயபுரானம் ஆகிவிடும். ஆதாலால் எழுத்து பிழையுடன் படித்ததற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

6 Jan 2009

நான் குடித்த காபி மற்றும் பல..

டாக்டர்-லாம் ஒன்னும் சொல்லலை, நம்ப பையன் தான் சொன்னார் அப்பா உங்க டம்மி கொஞ்ஜம் பெரிசா இருக்கு அப்படினு.நாம யார் பேச்சை கேட்டிருக்கோம் அதனால மணம் திருந்தி பையன் பேச்சை கேட்கலாம்னு(இல்லன பையன் நம்ப பேச்சை கேட்க மாட்டான்?) முடிவெடுத்து கொஞ்ஜம் குறைக்கலாம்னு புதுவருட முடிவெடுத்தாச்சு.

ஆச்சு சனவரி- 1 வெற்றிகரமான் டயட். 2-ம் தேதி சூப்பரான் சைக்கிள் ஓட்டம், 3-ம் தேதி குறைச்சலான சிக்கன் சாப்பாடு 4-ம் தேதி சூப்பர் கட்டுபாடுடன் ஓடிவிட்டது. சனவரி 5 ம் தேதி காலை அடித்து பிடித்து எல்லாரயும் கிளப்பிட்டு நானும் அலுவலகம் கிளம்பும் போதுதான் நியாபகம் வந்தது நான் காலை சாப்பிடவே இல்லை என்று, சரி நம்ப டயட்டுக்கு இயற்கையே வழிவகுத்து விட்டது என்று கிளம்பி விட்டேன்.

காரில் ஒரு 20 மைல் பயனம், பாதி தூரம் போன பிறகு வயிறு கர்...புர் என்ற் சத்தம் போட்டு என்னை கவனி என்று சொன்னது. வழியுல் ஒரு லைடில் (Light/Signal) நிற்க வேன்டியதாயிற்று, பாட்டு கேட்டுகொண்டே சன்னல் வழியாக பார்த்தால் ஸ்டார் பக்ஸ் வா..வா என்று வறவேற்றது. மனதில் ஒரு சஞ்ஜலம் காபி குடிக்கலாம் என்று, ஆனால் மூளை சொன்னது வருட ஆரம்பத்தில் காபிக்கு எல்லாம் செலவு செய்யாதெ என்று...சரி என்று விட்டு விட்டேன். அடுத்த லைட்டில் இன்னொர் ஸ்டார் பக்ஸ் இந்த முறை கிறுஸ்து பிறந்த நாளைக்கு வந்த கிப்டு கார்டு உபயாகபடுதலாம் என்று முடிவெடுத்து காரை திருப்பிவிட்டேன். (ஆமாம் அவர் பிறந்த நாளைக்கு என்க்கு எதுக்கு எங்க டேமேஜர் கிப்டு கார்டு கொடுத்தார்?)

போயி ஒரு டால் லாடே( Tall Latte) Minimum size காபி சொன்னால் வந்தது ஒரு கால் லிட்டர். (ஈரோடா- யிருந்தால் நம்ப டேவிட் ஆறுமுகம் அளவா தந்து இருப்பார்.) குடித்து கொன்டே அலுவலகம் போய் சேர்ந்தாயிற்று.போனவுடன் அல்லா பேருக்கும் புதுவருட வாழ்த்து சொன்ன பிறகு பொட்டிய தட்டி உக்காந்த பிறகு வயிறு சத்தம் போட்டது. சரினு நம்ப டிராயர் திரந்து பார்த்தால் கடலை உருன்டை பாக்கட் நான் இருக்கிறேன் என்று சொன்னது அதற்காக அவரை ஒரு தடவை சாப்பிட வேன்டியதாயிற்று.

சில மெயில்களை ஓப்பன் செய்து பார்த்து விட்டு ஒருமுறை rest room போயிட்டு வந்தாச்சு. மறுபடியும் கர்...புர் சத்தம் இந்த முறை திறந்தால் எள்ளூ உருன்டை என்னப்பார் என்றது அவருக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ருசிக்காக ஒன்று மொத்தம் 3 ஆச்சு.

மணி 10.30 அச்சூ ஒரு மீட்டிங் இருந்தது அங்க போயி கர்..புர் சத்தம் கேட்டல் நன்றாக் இருக்காதே என்று கப்டீரியா போய் நம்ப காபி கப்ல ஒரு காபி புல் பன்னியாச்சு..குடித்துகொன்டே கிறுஸ்துமஸ் மற்றும் புது வருட கொன்டாட்டம் பற்றி பேசிகொன்டே கலைந்து போனோம். காபி கப் காலி...(இதுதான் மீட்டிங்கா என்றால் ????? நிறைய பொட்டி தட்டும் மக்களுக்கு தெரியும்)

மணி 11.15 கர் ...புர் சத்தம் இந்த முறை திறந்தால் ஒன்றும் இல்லை ( அதான் எல்லாம் முடிச்சாச்சே) கையை உள்ர விட்டு தோலாவி பார்த்தால் ஒரு மேங்கே ஜீஸு டப்பா இருந்தது சரினு அவரை வயிற்றுகுல் தள்ளியாகி விட்டது.

சிரிது நேரம் சத்தம் இல்லை....சரி மணி 12.30 ஆயிற்று மதிய சாப்பாடு நேரம் அல்லவா...பசியுடன் கொன்டு போன சப்பாத்தி துன்டுகளை முழுங்கினேன்.
ஒழுங்கா காலைல ஒரு கப் சீரியல் சாப்பிட்டு போயிருந்தா ஒருகப் காபி யுடன் காலை நேரம் ஓடியிருக்கும் இப்ப டயட் டயட் அப்படினு நிறைய சாப்பிடுர்னோ? நீங்க சொல்லுங்க என்னால வயிறை குறைக்க முடியுமா?

பின் குறிப்பு: இது என் தொப்பை இல்லை.

ஒரு புதிர்: வால்பையன் புதுவருட பிறப்பிற்கு சாப்பிட்ட சரக்கின் பெயர் என்ன? சரியாக் சொன்னால் அதே சரக்கு பரிசளிக்கப்படும்.