24 Jan 2009

குமுதம் வார இதழுக்கு ஒர் கடிதம்

எல்லாரும் இப்பொழுது எதாவது ஒரு வார இதழுக்கு கடிதம் எழுதுகிறார்கள், இது நான் எழுதும் முதல் கடிதம்...இல்லை வின்னப்பம்னு கூட என்று சொல்லலாம்.

அன்புள்ள குமுதம் இதழ் மார்கெட்டிங் மேனேசருக்கு வணக்கம்.
தங்கள் குமுதம் டாட் காம் சனவரி 31ம் தேதி முதல் பே சைட் ஆகிறது என்றும் சந்தா கட்டுங்கள் என்று அறிவித்து இருந்தீர்கள் சரி நானும் நினைவு தெரிந்த நாளில் இருந்து படிக்கும் இதழ் என்று ( ஒரு டீஸ்பூன் ஒரு கொலை, நான் படித்த முதல் கதை என்று நியாபகம்)சந்தா கட்ட சென்றேன்...வந்ததே மயக்கம் சாதா, டீலக்ஸ், ஸ்பெசல் டீலகஸ் என்று ஆம்னி பஸ் கனக்கா சந்தா கட்ட சொல்லியிருந்தது. (முறையே 50.00 USD, 99.00USD, 250.00USD (3 years)).

ஏனுங்கனா நாட்டுல விலைவாசிலாம் ஏறிப்போச்சு, உலகமே பொருளாதார மந்ததுள இருக்குது அப்பரம் எப்படிங்கனா நாங்க போயி அப்புட்டு பணம் கட்ட முடியும், சரி அதுக்கு நாங்க இலவசமா தரமுடியும்னு கேட்காடீங்க...(ஏன் குடுத்தாதான் என்ன அரசு கலர்டீவி தருது, நெலம் தருது, அரிசி ஒருரூபாய்கு தருது)

ஒரு நியாயமான் ரேட்டு வச்சு குடுபா நாங்கனா வேனாம்னா சொல்லபோரோம், ஏன் உன் கூட்டாளி விகடன் பாரு சூப்பரா ரேட்டு வெச்சுனு இன்னாம கலக்கரான். நீ மெய்யாலுமே ரோஜனை பன்னு ராசா, எத்தினி பேரு நீ குடுக்குர வீடியா லாம் எரக்கினு இருக்கபோரானுங்க, எங்கள் மாதிரி சனம் லாம் சும்மா வந்தமோ, படிச்சோமானு தான் போராங்க, வேனும்றவங்க பே பெர் டவுன்லோட் நு குடுக்கசொல்லுமா.கொஞ்ஜம் மன்சு வைராஜா.

சரி வாங்கர காசுக்கு ஒழுங்கா கஸ்டமர் சர்வீஸ் இருக்கா? (அப்டீனா என்னானு கேட்கராங்க உங்க ஆபிஸ்ல) பிரின்ட் சந்தால சில குளருபடி இருந்தது பேக்ஸ், ஈ-மெயில்னு அனுப்பிபார்த்து பதில் இல்லை, சரினு மெனக்கெட்டு ராத்திரி முழிச்சிட்டு இருந்து உங்களுக்கு போன் பன்னினா (வெளிநாட்டில் இருந்து) காது குடுத்து கேட்க கூட ஆள் இல்லை உங்க ஆபீஸ்ல. வார இதழுக்கு பணமும் கட்டி அதை பற்றி விசாரிப்பதற்கு பணமும் விரையம் செய்து பிளட் ப்ரசர் ஏற்றி கொன்டதுதான் மிச்சம்.
இப்ப கூட பாருங்க சனவரி 31ம் தேதி வரை இலவசம் என்று சொல்லிட்டு சனவரி 24 அன்றே என்னை உளே விட மாட்டேன்ங்குது. (சரி உங்க சைட்டு உங்க இலவசம், எப்பவேனும்னாலும் ஸ்டாப் செய்ங்க, ஆனா வார்த்தைனு ஒன்று இருக்கு இல்ல?)

அப்பறம் ஒன்னு நியாபகம் வைத்து கொள் ராசா வெளிநாட்டில் இருக்கும் எல்லாரும் (அதிக) பணம் கட்டி படிக்கும் அளவிற்கு வசதி இல்லை ராசா, எல்லாரும் உங்க டைரக்டர் சவகர் அளவிற்கு 3 மில்லியன் டாலர்லாம் சம்பதிப்பதில்லை. ஏதோ எங்களால் முடிந்த அளவிற்கு பணம் கட்டுரொம், கொஞம் மனசு வைங்க, நியாயமான ரேட்டு வைங்க,நிறய கஸ்டமர்களை வைத்து நிறெய பணம் சேருங்க.

(அது சரி இந்தியாவில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் அமெரிக்க டாலரிலா தெரிகிறது?)

13 Jan 2009

கன்டிப்பாக இன்டர்வியு டிப்ஸ் அல்ல

IT பீல்டுல இந்தியா அலுவலகத்தில் 8வதில் இருந்து காலேஜ் வரை ரேங் பார்க்கிராங்கள், அப்பறம் 1008 கேள்விகள் மற்றும் குருப் டிஸ்கஸன்ஸ்.கேள்வி பட்ட வரையில் இதுதான் நடந்துள்ளது.எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்பறம் கான்செப்ட்--ல ரொம்ப கேள்வி கேட்கிறாங்களாம் இதுவும் கேள்விபட்டதுதான்.

ஆனால் அமெரிக்காவில் வேறு மாதிரி நீங்க ரெஸ்யூம் ல என்ன போடுரீங்களோ அத நம்பி இன்டர்வியுக்கு கூப்பிடுவாங்க. இந்த ஐ.டி பீல்டுல 60% போன் இன்டர்வியுதான் இருக்கும். (My guess)இது நம்ப மக்களுக்கு வசதியா போய்டும், கம்ப்யூட்டர்ல கூகிள் ஆண்டவரை ஓப்பன் செய்து வைத்துகொண்டு, இன்னும் ஒரு விண்டோவில் கீக் இன்டர்வியு.காம் ஓப்பன் செய்து போனில் பதில் அளிப்பார்கள். ஒரு சிலர் தனக்கு பதில் வேறு ஒருவரை பதில் அளிக்க விட்டு ஸ்பீக்கர் போனில் அதை கவனித்து கொண்டு இருப்பார். (இந்த வசதி சில தெலுகு நன்பர்களுக்கு வசதியாக் போய்விட்டது)

அமெரிக்காவில் வேலை புடிப்பது எப்படினு சிம்பிளாக ஒரு பார்வை. (Consultant).
H1B ஹெ.ச் 1பி விஸா வைத்து இருப்பவர்கள் ஸ்பான்சர்டு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது கன்ஸல்டன்ஸி மூலமாக் கிளையன்ட் சைடில் வேலை செய்யலாம்.கிளையன்டிடம் வேலை என்பது 6 மாதம் முதல் 1 வருடம் அல்லது சில வருடங்கள் நீடிக்கும்.

The H1B Sponsored Company: Work for them.
The H1B Sponsored Company: work for their clients.
The H1B sponsored Company: Will sell u to other Clients/bodyshops. This Client/bodyshop may or maynot sell to others. (these people are called Middle man)

இந்த Will sell you to others என்ற பிரிவில் நிரைய கோல்மால் நடக்கும் மற்றதில் கொஜ்ஜம் குறைவு.

A simple example. Once ur project is over in Client X then one will post his/her resume either in Monster, Jobs DB, AJB. The middle man or body shops who won/have the project or wanted you they will call u/email u. இங்கு நீங்கள் டைரக்டாக அவர்களிடம் வேலை செய்ய முடியாது, உங்கள் H1B ஸ்பான்சர் மூலமகதான் போக வேண்டும்.
இதில் ரேட் பேரம் நிறைய நடக்கும், ஒத்து வந்தால் ஓ.கே. அல்லது புதுசா வந்த பசங்கள/பொன்னுங்களை எக்ஸ்பீரியன்ஸ் உள்ள மாதிரி கான்பித்து உள்ளே நுழைத்துவிடுவார்கள்.

அமெரிக்கா மேனேஜர் இன்டர்வியு பன்றார் என்றால் ஜஸ்ட் 3- 5 கான்செப்ட் கேள்விதான் இருக்கும், மீதி எல்லாம் அரட்டை தான். They just look in to the persons Communicating/ability to speak/how he/she behaves.

பிடித்திருந்தால் ஐ ஏம் ஓ.கே, I வில் கால் யு பேக் இன் எ டே, என்று சொல்லிவிடுவார். சொன்ன மாதிரி பிடித்திருந்தால் கால் செய்து கன்கிராட்ஸ் சொல்லி வேலைக்கு வரும் தேதியை சொல்லுவார். பிடிக்கவில்லை என்றால் ஒரு ஈ-மெயில் வந்து சேரும் சாரியுடன்.

இதே ஒரு இந்திய மேனேசர் என்றால் அவ்வளவுதான் ஒரு 60 கான்செப்ட் கேள்வி வரும், அவர் எதிர் பார்க்கும் பதில் வந்தால் தான் ஓ.கே. நீங்கள் சரியான் பதில் அளித்தும் அவர் எதிர் பார்த்த பதில் வரவில்லை என்றால் நீங்கள் ஏவெரேஜ் ரகம் தான். சோசியலாக எந்த கேள்வியும் இருக்காது. ஒன்லி ஜாப் சம்பந்த பட்ட கேள்விகள் மற்றும் முன்னால் வேலை பார்த்த அனுபவங்கள் சம்பந்தமாகதான் இருக்கும். அவரையும் குறை சொல்ல முடியாது ஏனென்றால் நாம் வளர்ந்த விதம் அப்படி.
இதில் உள்ள கொடுமை என்ன வென்றால் அவரும் கேள்விகளை கீகின்டர்வியு.காம் அல்லது வேறு எதாவது வெப் சைட்டுல இருந்துதான் உருவி இருப்பார்.

இன்டர்வியு முடிந்தவுடன் சரி ஐ வில் கெட் பேக் என்று சொல்லுவார், ஆனால் செலக்ட் ஆகவில்லை என்றால் ஒரு மெயிலும்/போனும் வ்ராது செலக்ட் ஆகிவிட்டால் அவரது ஆபிஸ்ல் இருந்து வேரொருவர் கூப்பிடுவார்.

அடுத்த ரகம் சின்கு என்று செல்லமாக அழைக்கப்படும் சீன வம்சாவளியின மேனேசர்கள். இவர்களும் இந்திய மேனேசர் க்கு குறைவில்லாமல் கேள்விகளை வீசுவார்கள், அனத்தும் வேலை மற்றும் அனுபவம் சம்பந்தபட்ததாகவும், படிப்பு சம்பந்தமாகவும் கேள்விகளை வீசுவார்கள்.நிறைய நேரம் ஆங்கிலம் கடித்து துப்புவார்கள்.பிடித்திருந்தால் ஓ.கே என்று கூறிவிடுவார்கள்.

நம்ப கன்ஸல்டன்சி யில் ஒருவர் இந்திய மேனேசர் என்றால் சாரிங்க வேர Company பாருங்க என்று சொல்லிவிடுவார்.

ஏன் இந்திய மேனேசர் இவ்வளுவு டெரெர் ஆக இருக்கிறாங்க்க தெரியுமா? பின்னே நம்ப ஆளுங்கள பத்தி நமக்கு தெரியாத என்ன? விட்டா மேனேசர் இடத்தை பிடித்து விடுவாங்களே

12 Jan 2009

க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-2

வணக்க்கம் நன்பர்களே, எப்படி இருக்கீங்க, அலைகடலென திரன்ட ஈ-மெயில்கள் எங்கே பாகம் இரண்டு எனகேட்டு இருந்தார்கள். இதோ இங்கே தொடர்கிறது. க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-1

முன்கதை...
ஆத்தா நான் 3 மாசம் மின்னாடியே புக்கு/நோட்டு லாம் செஞ்ஜாச்சு, இது கன்பார்ம்டு டிக்கட்டு அக்கா, உங்க கம்பியூட்டரில் நல்ல பார்ட்து சொல்லுங்க அக்கா. ..கிளி திருப்பி திருப்பி அதெயே சொல்லுச்சு.சரி இது வேலக்க்காவாதுனு ஏர்லைன்ஸ் மேனஜர் பார்த்து பேசலாம்னு அவர எப்படி பார்க்கரதுனு கேட்டா..3மாடி போயி பாருங்க்கனு ரூட் போட்டாங்க.

இனி...
அங்க போனா அவர் How to deal Angry Customers என்ற புத்தகத்தை படித்து கொன்டிருந்தார்.நாங்கள் வந்த விசயத்தை சொல்லி அதே பிளேனில் இடம் கேட்டோம். அவரும் எங்களுடன் இறங்கி கீழே வந்தார். கிளிகளிடம் பேசிவிட்டு சாரி சார் இது கம்யூனிகேசன் கேப்பில் வந்த குளருபடி சற்று பொருங்கள் என்று கூறிவிட்டு வேறுஒரு பூத்திற்கு நடந்து போனார்...அங்கிருந்து சில போன்கள் மற்றும் வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசினார்.நேரங்கள் கடந்தது, மணீத்துளிகள் கரைந்தது விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. நான் பொறுமை இழந்து அவரிடம் விமானம் புறப்படும் நேரம் நெருங்கி விட்டது என்றும் என்ன சார் என்று கேட்க இல்லிங்க பைலட்டிடம் பேசிவிட்டேன், எதோ எடை பிரச்சனை எனாறும் சில லக்கேஜிகளை இறக்கிவிட்டு ஆட்களை ஏற்ற முயற்சி செய்வதாக கூறினார்.
(காமளையன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ஜளாக தெரியுமாம் அது மாதிரி அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மன நிலையில் தான் இருந்தோம்.பின்னாடிதான் தெரிந்தது அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பரந்து போச்சி என்று.)

நாங்கள் பொறுமை இழந்து அனைவரும் சண்டைக்கு இறங்க பிற்பாடு சாரிங்க ஏதோ தவறு நடந்துவிட்டது, உங்கள் அனைவருக்கும் 5 ஸ்டார் விடுதியில் அறை எடுத்து தங்க வைக்கிரோம் காலை முதல் விமானத்தில் ஏற்றி அனுப்புகிரோம் என்று அடுத்த வலையை வீசினார். அந்த வலையில் 2 குடும்பங்கள் சரி என்று தலை ஆட்டியது. எனக்கும் புரிந்துவிட்டது இது வேலைக்காவாது நாமும் தலை ஆட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து அவரிடம் சரி சொல்ல போனேன் அவரோ நீங்கள் பட்ஜெட் ஏர் இன்டியா-வில் (Air India Budget) போகிறீர்களா என்று கேட்டார், ஏதோ ஒன்று முதலில் சென்ணை போய் சேர்ந்தால் போதும் என்று சரி என்று தலை ஆட்டிவிட்டேன்.பிற்பாடு ரொம்பவே...வருத்தபட்டேன்.அவரும் அந்த ஆபீஸ் சென்று வந்து கொஞம் பொறுங்கள் அவர்களின் ரிசர்வேசனுக்கு முன்னுர்மை தந்து அவர்களின் ஆட்கள் எல்லாம் ஏறிய பிறகு இடமிருந்தால் நீங்களும் போகலாம் என்று கூறிஅனார். அதற்கும் தலை ஆட்டிவிட்டு பொறுமை காத்திருந்தோம்.10.25 விமானத்திற்கு 10.05 க்கு எங்களுக்கு போர்டிங் பஸ் கொடுத்தார்கள். சரி என்று வாங்கி கொண்டு விமானம் நோக்கி ஓடினால், செக்யூரிட்டி செக்கில் கைப்பட்டியின் எடை 6 கிலோவிற்கு மேல் இருக்க கூடதுஎன்று சொல்லிட்டார்கள். மெயின் பெட்டி ஏதும் எங்களிடம் இல்லை, நாங்கள் நடந்ததை கூறி அட்லான்டிக் கடல் தான்டி வந்து உள்ளோம் எங்களுக்கு 9 கிலோ வரை அனுமதி இருக்கிறது என்று சொல்லியும் விடவில்லை. சரி 3 கைப்பட்டியை எப்படி பிரித்தாலும் 6 கிலோவிற்கு மேல தான் இருந்தது. கைபெட்டியில் இருப்பது அனைத்தும் முக்கியமானவை எதையும் வீசி எறிய முடியாது.மறுபடியும் மேனேசரிடம் ஓடினோம், சரி 2 கைப்பிட்டியில் முக்கியமானது எடுத்து கொன்டு ஒரு பெட்டியை லக்கேஜ் ஆக மாற்றிவிடுங்கள் என்று கூறினார்.சரி என்று மாற்றிவிட்டோம். பின் செக்கிங் முடிந்து விமானம் நோக்கி ஓடினோம், அங்கிருந்து அந்த விமானம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று குறித்திருந்தார்கள். 12 mins (ஒரு நல்ல விசயம் இது )ஓடோடி போனால் விமானத்தின் கடைசி சீட் (வால் பகுதி) இடம் அளித்திருந்தார்கள்.அனைவரின் கண் பார்வைக்கு இலக்காகி போய் அமர்ந்தோம், வரிசையாக அனத்து குடும்பங்களும் வந்து சேர்ந்தனர்.ஒருவழியாக விமானம் புறப்பட்டது, அருகில் அமர்ந்து இருந்த சிங்கபூரியனிடம் அலை பேசி வாங்கி நன்பருக்கு விவரத்தை சொல்லி இந்தியாவில் எங்களை வறவேர்கக சென்னை விமான நிலையத்த்ல் காத்திருக்கும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டோம்.
(இங்குதான் அலைபேசியின் முக்கியத்துவம் தெரிகிறது)

பிற்பாடு விமான பணிப்பெண்கள் தள்ளு வண்டியில் ஒரு பிரெட் மற்றும் ஒரு ஜீஸ் கொடுத்தார்கள், மற்றொரு பணிப்பெண் சாரயக்கடை தள்ளி கொண்டு வந்தார். I just surprised they came with sample bottles coz usually they will open the big bottles and pour in to the small cups (cost cutting) சரி கலக்சனுக்கு ஆகும் என்று 3 பாட்டில் வாங்கி வைத்து கொன்டேன். அப்படியே கண் அயர்தேவிட்டேன். கொஞ்ஜ நேரம் கழித்து யாரோ தோளை தட்டி சார் சார் என்று அழைப்பு, பார்த்தால் பணிப்பெண் 18சிங்கை டாலர் கேட்டார், எதற்கு என்று வினவியபோது 3 பாட்டிலிக்கு என்று கூறினார். இது இன்டர்னேஸனல் பிளைட் தானே? அப்பறம் எதுக்கு காசு கேட்கிறீங்க என்று வினவிய போது இல்ல சர் இது பட்ஜெட் ஏர்லன்ஸ் சோ வி ஏவ் டு கலெக்ட் அப்படினு சொன்னாங்க, அப்படியே பாட்டிலை திருப்பி தந்துவிட்டு கடுப்புடன் அமர்ந்திருந்தேன்.பின் அவரை அழைத்டு குடிப்பதற்கு தண்ணி பாட்டல் கேட்ட போது ஒரு ஆளுக்கு ஒரு முறைதான் இலவசம் என்றும் மறுபடியும் வேன்டுமானால் பணம் கொடுத்து பெற்றுகொள்ளவும் என்று கூறிவிட்டார்.கடு கடு முகத்துடன் அமர்ந்திருந்தேன்.மனதுக்குள் ஆயிரம் என்னங்கள் கேஸ் போடலாமா? இல்லைனா எப்படி டீல் பன்னலாம்னு.கடைசியில் தானே அமர்ந்திருந்தேன், பனிப்பெண்கள் பேசுவது எல்லாம் கேட்டது அவர்கள் ஊர் கதி எல்லாம் பேசிவிமானம் இறங்குவதற்கு முன் வாழைப்பழ ஜோக் சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்கள். நான் குறுக்கால பூந்து அக்கா அது ரொம்ப பழைய சோக்குகா என்று கூறவும் அவர்கள் முகம் ஒருமாதிரி போனது.ஒருவழியாக விமானம் சென்னை வந்து சேர்ந்தது, இமிகிரேசன் முடித்து பொட்டி எடுப்பதற்கு வந்த போது பெரிய பொட்டி அனத்தும் முதல் விமானத்தில் வந்து விட்டது போலும் அனைத்தும் ஒரு தள்ளு வன்டியில் வைத்து இருந்தார்கள். சிங்கபூரில் செக் செய்த கைப்பெட்டி வரவில்லை. அதற்கு கம்பெளைன்டு குடுக்க வரிசையி நின்று அனத்து தகவலையும் சொல்லி ரசிது வாங்குவதற்குள் 2.30 மனினேரம் முடிந்திருந்தது.நாம் தான் 2 நாள் கழித்து வந்து வாங்கி கொள்ளவேன்டுமாம், அவர்கள் வீடிற்கு டெலிவரி செய்ய மாட்டார்களாம். மறுபடியும் ஒரு சென்னைப்பயனம் செய்யவேன்டியதாயிற்று.சென்னை டூ ஈரோடு கோவை எக்ஸ்பிரசில் அருமையான் பயனம், வண்டி முழுவதும் நடந்து நடந்து, தோசை, மசால் வடை, அனைத்தும் வாங்கி, கதவோரம் நின்று அருமையாக காற்று வாங்கி ஈரோடு வந்து சேர்ந்தோம். ( அது சரி ஏன் அமெரிக்க டூ இந்தியா ரயில் இல்லை)

பிற்பாடு பெட்டியை எடுக்க ஒரு பிரளயமே நடத்த வேன்டியதாயிற்று அதற்கு செலவு செய்த தொகை பெட்டியில் உள்ள மதிப்பை விட அதிகம் ஆயிற்று. பின்னாளில் ஏற்ப்பட்ட விபத்து , மருத்துவமனை அனுபவங்கள், டிக்கட் ரீகன்பார்ம் செய்ய அலைந்தது என்று நிறைய எழுத ஆசைதான், ஆனால் அது ரொம்ப சுயபுரானம் ஆகிவிடும். ஆதாலால் எழுத்து பிழையுடன் படித்ததற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

6 Jan 2009

நான் குடித்த காபி மற்றும் பல..

டாக்டர்-லாம் ஒன்னும் சொல்லலை, நம்ப பையன் தான் சொன்னார் அப்பா உங்க டம்மி கொஞ்ஜம் பெரிசா இருக்கு அப்படினு.நாம யார் பேச்சை கேட்டிருக்கோம் அதனால மணம் திருந்தி பையன் பேச்சை கேட்கலாம்னு(இல்லன பையன் நம்ப பேச்சை கேட்க மாட்டான்?) முடிவெடுத்து கொஞ்ஜம் குறைக்கலாம்னு புதுவருட முடிவெடுத்தாச்சு.

ஆச்சு சனவரி- 1 வெற்றிகரமான் டயட். 2-ம் தேதி சூப்பரான் சைக்கிள் ஓட்டம், 3-ம் தேதி குறைச்சலான சிக்கன் சாப்பாடு 4-ம் தேதி சூப்பர் கட்டுபாடுடன் ஓடிவிட்டது. சனவரி 5 ம் தேதி காலை அடித்து பிடித்து எல்லாரயும் கிளப்பிட்டு நானும் அலுவலகம் கிளம்பும் போதுதான் நியாபகம் வந்தது நான் காலை சாப்பிடவே இல்லை என்று, சரி நம்ப டயட்டுக்கு இயற்கையே வழிவகுத்து விட்டது என்று கிளம்பி விட்டேன்.

காரில் ஒரு 20 மைல் பயனம், பாதி தூரம் போன பிறகு வயிறு கர்...புர் என்ற் சத்தம் போட்டு என்னை கவனி என்று சொன்னது. வழியுல் ஒரு லைடில் (Light/Signal) நிற்க வேன்டியதாயிற்று, பாட்டு கேட்டுகொண்டே சன்னல் வழியாக பார்த்தால் ஸ்டார் பக்ஸ் வா..வா என்று வறவேற்றது. மனதில் ஒரு சஞ்ஜலம் காபி குடிக்கலாம் என்று, ஆனால் மூளை சொன்னது வருட ஆரம்பத்தில் காபிக்கு எல்லாம் செலவு செய்யாதெ என்று...சரி என்று விட்டு விட்டேன். அடுத்த லைட்டில் இன்னொர் ஸ்டார் பக்ஸ் இந்த முறை கிறுஸ்து பிறந்த நாளைக்கு வந்த கிப்டு கார்டு உபயாகபடுதலாம் என்று முடிவெடுத்து காரை திருப்பிவிட்டேன். (ஆமாம் அவர் பிறந்த நாளைக்கு என்க்கு எதுக்கு எங்க டேமேஜர் கிப்டு கார்டு கொடுத்தார்?)

போயி ஒரு டால் லாடே( Tall Latte) Minimum size காபி சொன்னால் வந்தது ஒரு கால் லிட்டர். (ஈரோடா- யிருந்தால் நம்ப டேவிட் ஆறுமுகம் அளவா தந்து இருப்பார்.) குடித்து கொன்டே அலுவலகம் போய் சேர்ந்தாயிற்று.போனவுடன் அல்லா பேருக்கும் புதுவருட வாழ்த்து சொன்ன பிறகு பொட்டிய தட்டி உக்காந்த பிறகு வயிறு சத்தம் போட்டது. சரினு நம்ப டிராயர் திரந்து பார்த்தால் கடலை உருன்டை பாக்கட் நான் இருக்கிறேன் என்று சொன்னது அதற்காக அவரை ஒரு தடவை சாப்பிட வேன்டியதாயிற்று.

சில மெயில்களை ஓப்பன் செய்து பார்த்து விட்டு ஒருமுறை rest room போயிட்டு வந்தாச்சு. மறுபடியும் கர்...புர் சத்தம் இந்த முறை திறந்தால் எள்ளூ உருன்டை என்னப்பார் என்றது அவருக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ருசிக்காக ஒன்று மொத்தம் 3 ஆச்சு.

மணி 10.30 அச்சூ ஒரு மீட்டிங் இருந்தது அங்க போயி கர்..புர் சத்தம் கேட்டல் நன்றாக் இருக்காதே என்று கப்டீரியா போய் நம்ப காபி கப்ல ஒரு காபி புல் பன்னியாச்சு..குடித்துகொன்டே கிறுஸ்துமஸ் மற்றும் புது வருட கொன்டாட்டம் பற்றி பேசிகொன்டே கலைந்து போனோம். காபி கப் காலி...(இதுதான் மீட்டிங்கா என்றால் ????? நிறைய பொட்டி தட்டும் மக்களுக்கு தெரியும்)

மணி 11.15 கர் ...புர் சத்தம் இந்த முறை திறந்தால் ஒன்றும் இல்லை ( அதான் எல்லாம் முடிச்சாச்சே) கையை உள்ர விட்டு தோலாவி பார்த்தால் ஒரு மேங்கே ஜீஸு டப்பா இருந்தது சரினு அவரை வயிற்றுகுல் தள்ளியாகி விட்டது.

சிரிது நேரம் சத்தம் இல்லை....சரி மணி 12.30 ஆயிற்று மதிய சாப்பாடு நேரம் அல்லவா...பசியுடன் கொன்டு போன சப்பாத்தி துன்டுகளை முழுங்கினேன்.
ஒழுங்கா காலைல ஒரு கப் சீரியல் சாப்பிட்டு போயிருந்தா ஒருகப் காபி யுடன் காலை நேரம் ஓடியிருக்கும் இப்ப டயட் டயட் அப்படினு நிறைய சாப்பிடுர்னோ? நீங்க சொல்லுங்க என்னால வயிறை குறைக்க முடியுமா?

பின் குறிப்பு: இது என் தொப்பை இல்லை.

ஒரு புதிர்: வால்பையன் புதுவருட பிறப்பிற்கு சாப்பிட்ட சரக்கின் பெயர் என்ன? சரியாக் சொன்னால் அதே சரக்கு பரிசளிக்கப்படும்.