2 Aug 2013

ரொம்ப நாளைக்கு (சரி வருசத்திற்கு) பிறகு ஒரு சோதனை பதிவு .

4 Oct 2010

எந்திரன் ப‌ட‌மா ப‌ண‌மா?

எல்லாரும் பேசும் ப‌ட‌ம் இது...நானும் போக‌லாம் என்றால் 20 டால‌ருக்கு டிக்க‌ட்டு . ஆன‌ப‌ட்ட‌ 3டி‍ அவ‌தாருக்கே $12 தான் கொடுத்து பார்த்தேன் $20 க‌ட்டுப‌டியாகாது அத‌னால் ட‌மில்டார‌ன்ட்.காமில் ட‌வுன்லோட் செய்து பார்த்தாகிவிட்ட‌து. பிரின்டு ந‌ல்லாதான் இருக்குது. (த‌ர‌ம் புளுரேக்கு கீழே டி.வி.டிக்கு மேலே)

டைர‌க்ட‌ர் ச‌ங்க‌ருக்கு ச‌ல்யூட்...ந‌ன்றாக‌ வேலை செய்து.....க‌டுமையான‌ வேல‌ வாங்கியிருக்கார்...எந்திர‌ன் ப‌ட‌ டீமுக்கு ஸ்பெச‌ல் ச‌ல்யூட்.

அமெரிக்க‌ டெக்கி ப‌ச‌ங்க‌ நாயை குளிப்பாட்டி ந‌டு வீட்டில் வைத்தாலும் அது அப்ப‌டிதான் ந‌ட‌க்கும் என்ப‌து மாதிரி சூப்ப‌ரா க‌லிஜ் செய்துவிட்டார்க‌ள்.(fact fact and fact) அதுவும் New jersy and New york ப‌ச‌ங்க‌ ரொம்ப‌ மோச‌ம். சான் உசே, சேன்டிகோ ம‌க்க‌ள் கொஞ்ஜ‌ம் டீச‌ன்டாக‌ ந‌ட‌ந்து கொண்டார்க‌ள்.வேறு ஏதோ ஆங்கில‌ ப‌ட‌த்திற்கு போன‌ அமெரிக்க‌ ந‌ன்ப‌ர் அங்கிருந்து போன் செய்து கேட்டார் what is the language, do you speak this language? why these people make noises and whistle on the theatre campus? don't they behave decent...இன்னும் கொஞ்ஜ‌ம் அதிக‌மாவே கேட்டார். நான் இது எங்க‌ பார‌ம்ப‌ரிய‌ம் (the way we celebrate)என்று பொய் சொல்ல‌ வேண்டிய‌தாயிற்று.

Marketing and product promtion ச‌ன் டீவிக்கு கை வ‌ந்த‌ க‌லை. பாட‌ல் வெளியீட்டு விழா, preview விழா, relese விழா and making of Enthiran movie அப்ப‌டினு எல்லாத்திலேயும் ப‌ண‌ம் கொட்டுது.

few bits

திரைப்ப‌ட‌ம் வெளியீட்டு விழா அப்ப‌டினு ஒர் ம‌ணி நேர‌ம் ஓட‌ கூடிய கிளிப்பிங் பார்க்க‌ நேரிட்ட‌‌து, நாம‌கிபேட்டை ம‌ற்றும் ப‌ண‌ப்பாக்க‌ம் ப‌ண்ணாடைக‌ள் (sorry for the language) அல‌கு குத்தி த‌ங்க‌ள‌து மூட‌ ந‌ம்பிக்கியை வெளுப்ப‌டுத்தி சிரிக்க‌வைத்தார்க‌ள் (இவ‌ங்க‌லாம் திருந்த‌வே மாட்ட‌ங்க‌ளா?, ப‌ண‌ம் போட்ட‌வ‌னுக்கு/ந‌டித்த‌வ‌னுக்கு இல்ல‌த‌ அக்க‌ற‌ இவ‌னுக்கு எதுக்கு?)

பாலாபிசேக‌ம், ச‌ந்த‌ன‌ அபிசேக‌ம் கேவ‌ல‌ம்..... ரோபாட்டிக்ஸ் கால‌த்துல‌ கூட‌ இவ‌னுங்க‌ளை திருத்த‌ முடியாது.

க‌ருணாஸ் ர‌ஜினியை விட‌ ஐஸ்வ‌ர்யா ராயை ப‌ற்றி அதிக‌ம் பேசினார்.

ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ள் டீச‌ண்டாக‌ ப‌ட‌த்தை பார்த்து க‌ருத்து சொன்னார்க‌ள்.

சிங்கை‌ த‌மிழ‌ர்க‌ள் (வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள்) அதிக‌ம் அல‌ட்டாம‌ல் அருமையான‌ க‌ருத்துக‌ளை சொல்லிவிட்டு போன‌ர்க‌ள், பொழ‌ப்பு தேடி போன‌ த‌மிழ‌ர்க‌ள் அமெரிக்க‌ டெக்கி த‌மிழ‌ர்க‌ளுக்கு இனையாக‌ ந‌ட‌ந்து கொண்டார்க‌ள்.

பிர‌காஷ் ராஜ் ம‌ற்றும் பார்த்திப‌ன் ப‌ட‌த்தை ப‌ற்றி எந்த‌ ஒரு மிக‌ப்ப‌டுத்த‌ல் இல்லாம‌ல் அழ‌காய் உய‌ர்வாய் பேசினார‌க‌ள்.

எதோ ஒரு ஊரில் ர‌சிக‌ சிங்க‌ங்க‌ளை த‌டியால் அடித்து விர‌ட்டினார்க‌ள் தியேட்ட‌ர்கார‌ர்க‌ள்...பார்க்க‌ ப‌ரிதாப‌மாக‌ இருந்த‌து. அடிக்கும் உரிமையை கொடுத்த‌து யார்?

நிறைய‌ பால் ம‌ற்றும் காய்க‌றிக‌ள் வீண‌க்க‌ப்ப‌ட்ட‌து ர‌சிக‌ர்களால்.

மொத்த‌த்தில் இது ஒரு விருந்து‍ - ர‌ஜினி ர‌சிக‌ர்க‌ளுக்கு
எந்திர‌ன் ப‌ண‌ம் காய்க்கும் ம‌ர‌ம் - ச‌ன் புர‌ட‌க்ஸ்ஸ‌னுக்கு
ச‌ங்க‌ருக்கு இன்னும் ஒரு மெகா ப‌ட்ஜ‌ட் திரைப்ப‌ட‌ம்

7 Jul 2010

குடி அரசு வெளியீட்டுக்கான தடையை நீக்கி நீதியரசர் சந்துரு அளித்த தீர்ப்பு

வ‌லைப்ப‌க்க‌த்தில் தேடிய‌தில் தீர்ப்பின் ஒரு ப‌குதியை ப‌டிக்க‌ முடிந்த‌து அத‌ர்கான‌ லின்க்

குடி அர‌சு இத‌ழ்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ த‌ற‌விர‌க்க‌ம் செய்ய‌ அனும‌தி அளித்து உள்ளார்க‌ள்

ஏற்க‌னெவே உங்க‌ளுக்கு த்ரிந்து இருக்க‌லாம் இருந்தாலும் ஒரு முறை உங்க‌ளுக்காக‌...

14 Apr 2010

2030-- ல் ஒரு சிறுக‌தை

என் பெய‌ர் லேஸ் (என்ன‌ பேரு இதுனு கேட்காடீர்க‌ள் அப்பா வைத்த‌து) நான் பிற‌ந்த‌து இந்தியாவில் அதுவும் த‌மிழ் நாட்டில் என்று ம‌ட்டும் தான் என‌க்கு தெரியும், வ‌ள‌ர்ந்த‌து, ப‌டித்த‌து, க‌ல்யான‌ம் செய்த‌து எல்லாம் எந்த‌ நாடு என்று தெரியாது ( அவ்ளோ நாடுக‌ளில் வ‌ள‌ர்ந்து இருக்கேன்).

நான் பிற‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ உல‌க‌ம் அழிய‌ போகுது என்றும் அதை ப‌டித்த‌ முட்டாள்க‌ள் தான் ச‌ரி செய்ய‌ முடியும் என்றும் பீ‍காம் முடித்து இருந்த‌ என‌து த‌ந்தை க‌ம்யூட்ட‌ர் என்ற‌ மெசினை க‌ற்று கொன்டு இந்தியாவில் இருந்து அமெரிகா வ‌ந்துவிட்டார், ப‌ல‌ர‌து உழைப்பு வீன் போக‌வில்லை, அனைவ‌ரும் சேர்ந்து ஒய் 2 கேவில் இருந்து இந்த‌ உல‌க‌த்தை காப்பாற்றினார்க‌ள். என‌து த‌ந்தையின் உழைப்பு ம‌திக்க‌ப‌ட்டு ப‌டிப்ப‌டியாக‌ ந‌ல்ல‌ நிலமையில் எங்க‌ளை வ‌ள‌ர்த்தார், வ‌ருட‌ங்க‌ள் அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ நாங்க‌ளும் ப‌ல‌ நாடுக‌ளில் ப‌டித்தோம் (அப்பாவின் வேலை அப்ப‌டி, இந்தியாவில் (Bank) பேங் குக‌ளில்/மிலிட்ட‌ரியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ள் மாநில‌ம் விட்டு மாநில‌ம் மாறுவ‌தை போல‌) கின்ட‌ர் கார்ட‌ன் முத‌ல் 4 ம் வ‌குப்பு வ‌ரை அமெரிகாவில், 5 முத‌ல் 7 வ‌ரை மெக்ஸிகோவில், 8 முத‌ல் 10 வ‌ரை தென் அமெரிகா சிலியில், பின் உகான்டா, மால‌தீவு, சிங்க‌பூர், குவைத் என்று என‌து க‌ல்லூரி வாழ்கை விரிந்த‌து.(அன்டார்டிகா ம‌ட்டும் தான் போக‌வில்லை) நானும் மாலிகுலிஸ் ப‌யால‌ஜி ப‌டித்தேன். இப்போது இருப்ப‌து Brazil. இத்த‌னை நாடுக‌ளில் சுற்றினாலும் த‌மிழை ம‌ட்டும் ம‌ற‌க்க‌வில்லை ஏனென்றால் தாத்தா பாட்டியுட‌ன் வ‌ள‌ர்ந்த‌தால்.பாட்டியும், அவ‌ர‌து ம‌க‌னும் போய் சேர்ந்துவிட்டார்க‌ள், பின் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து (ம‌னைவிக்கும் பின்னே இதைவிட‌ பெரிய‌ க‌தை உள்ள‌து அவ‌ர்க‌ள் மூதையார்க‌ள் த‌மிழ் வ‌ம்சாவ‌ளியை சேர்ந்த‌வ‌ர்க‌ளாம் ஆனால் அவ‌ள் த‌ற்போழுது ஆஸ்திரேலியா சிட்டிச‌ன்)நான் த‌மிழில் பேசினால் புரிந்து கொள்ள‌ யாரும் இல்லை. ஒருநாள் பேம‌லி TIME- குடும்ப‌த்தில் அனைவ‌ரும் பேசி கொண்டு இருந்த‌போது என‌து ம‌க‌ள் கேட்டாள் உங்க‌ள் அப்பா யார் என்று.

நான் யார் என்கு இருந்து வ‌ந்தேன், என‌து மூதையார்க‌ள் எப்ப‌டி, என்று எல்ல‌ம் விவ‌ரித்தேன், அவ‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை
ச‌ரி அவ‌ள் வ‌ய‌துக்கு (12) இது எல்லாம் அதிக‌ம்தான். எங்க‌ அப்பா சொல்லுவார் க‌ம்யூட்டர் என்ற் ஒன்று இல்ல‌விட்டால் ஒரு த‌லை முறையே இன்னும் இந்தியாவில் அடிமை‌த்த‌ன‌மான‌ வேல‌க‌ளில் தான் இருந்திருக்கும், இந்த‌ க‌ம்யூட்ட‌ர் வ‌ர‌வால் நிறெய‌ பேர் வ‌ள‌மான‌ வாழ்கைக்குள் வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போது என‌து க‌வ‌லை எல்லாம் என‌க்கு பிற‌கு என‌து ப‌ர‌ம்ப‌ரை என‌ன‌ ஆகும் என்று தெரிய‌வில்லை. யாராவ‌து சொல்லுங்க‌ளேன்.

புரிந்து கொள்ள‌ யாரும் இல்லை, என‌து ம‌க‌ள் பிற‌ந்த‌தால் அது அவ‌ள் தாய் நாடு ஆகிவிடுமா? இந்தியா அவ‌ள‌து நாடு இல்ல‌எ என்றாகிவிடுமா? நான் என‌து க‌டைசி கால‌த்தில் இற‌ந்தால் என்ன‌ ச‌ட‌ங்குப‌டி என்னை புதைப்பார்க‌ளா? எறிப்பார்க‌ளா?
அய்யோ யார‌வ‌து வாங்க‌ளேன் என‌க்கு உத‌வி செய்ய‌?

2 Mar 2010

சுவாமி நித்யான‌ந்தா-வ‌ய‌சுகேத்த‌ விளையாட்டு

watch video at : http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI

சீக்கிர‌ம் போங்க‌ இல்ல‌னா வீடியோ ரிமுவுடு அப்ப‌டினு த‌க‌வ‌ல் வ‌ந்துடும்

அவ‌ரை ஏன்யா த‌ப்பா பேசுரீங்க‌? அவ‌ர் வ‌ய‌சுக்கேத்த‌ மாதிரி அவ‌ர் த‌ப்பு செய்திருக்கார். இந்த‌ பைய‌ன் அமெரிக்கா பே‍-‍‍‍ஏரியா வ‌ரும் போதுலாம் சும்மா ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌க்த‌ கோடிக‌ள் விள‌ம்ப‌ர‌ம் த‌ருவாங்க‌.

என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌து ச‌ன் டீவியின் பேக்ர‌வுன்டு மிசூசிக்தான்...அட‌ அட‌ என்ன‌மா க‌ல‌க்கிட்டாங்க‌ போங்க‌

24 Feb 2010

முடிய‌லை...எழுத‌ முடிய‌லை

எழுதுவ‌து என்ப‌து ஒரு க‌லை...எழுத‌ எழுத‌ எழுத்துந‌டை ச‌ர‌ள்மாக‌வும் அருமையாக‌வும் வ‌ரும் என்ப‌து ப‌ல‌ருக்கு வேண்டுமானால் உன்மையாக‌ இருக்கும். நானும் எழுதி எழுதி பார்த்தேன் ஒன்னும் வ‌ர‌லை. அதனால் எழுதுவ‌தை விட்டுட்டு வ‌ள்ளுவ‌ர் போல‌ சிறு சிறு துனுக்குக‌ளாக‌ சில‌ நாளைக்கு முய‌ற்சி செய்ய‌ போகிறேன்.

"'கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை, அழிக்கும் நடவடிக்கைகளில் கொ.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஈஸ்வரன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீக்கப்பட்டிருக்கிறார்' - ஜினிய‌ர் விக‌ட‌ன்‍ க‌ழுகார் ப‌குதியில்

இது என்னாப்பா புது நியுசா இருக்குது? க‌வுண்ட‌ர் ச‌முதாய‌த்தை சார்ந்த‌வ‌ர் இல்லை என்றால் அவ‌ருக்கு எப்ப‌டி ப‌த‌வி கொடுத்தார்க‌ள்


''அஜீத் வளருகின்ற நடிகர். எந்தப் பின்னணியும் இல்லாமல் சுய திறமையை மட்டுமே நம்பி, திரையுலகுக்கு வந்தவர்- ஜினிய‌ர் விக‌ட‌ன்‍-ல் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா.சனார்த்தனம்

இன்னிக்கு சூரிய‌னுக்கு ஜ‌ங் த‌ட்டுனா நாளைக்கு எலைக்கும் த‌ட்டுனுமே...ஒருவேளை புள்ளி விவ‌ர‌ ந‌டிக‌ர் வ‌ந்தால் அப்ப‌ற‌ம் ப‌ம்ப‌ர‌மும் விட‌னுமே....ச‌ரி ச‌ரி ந‌டிக‌னை ந‌டிக‌னா ம‌ட்டும் எப்போ பார்க்க‌ ஆர‌மிக்க‌ போறீங்க‌ளே அப்ப‌தான் திருந்த‌முடியும்... அது ச‌ரி உலகத் தமிழர் பேரவை அப்ப‌டினா என்னாபா?

"ரஜினி நடித்துவரும் 'எந்திரன்' படமும் சரி... அஜீத் நடிக்கவுள்ள படமும் சரி... முறையே சன் டி.வி. மற்றும் அழகிரி மகன் ஆகியோர் தயாரிப்பு என்பதால்... சுற்றி வளைத்து அது ஆளுங்கட்சி தரப்பைப் புண்படுத்துவதாகவே இருக்கும்" ஜினிய‌ர் விக‌ட‌ன்‍-ல்

அப்ப‌ பெரிய‌ இட‌ம் த‌விற்த்து யார் த‌ய‌ரித்தாலும் ச‌ங்குதானா

"இந்த நேரத்துல நம்மளோட பொருளாதார வீழ்ச்சிக்கு நாமளே காரணமா இருந்துடு வோம்ங்கற பயம் வருது" ஜினிய‌ர் விக‌ட‌ன்‍-ல் ஏற்றுமதியாளரான செந்தில்வேல்

இப்ப‌ பாதி நேர‌ம் இதைதானே செய்துட்டு இருக்கிங்க‌...ஓ முழு நேர‌மும் உங்க‌ள‌ அர‌சு செய்ய‌ சொல்லுதா?

"'கோல்டு' ஹீரோயின் ஆன்ட்டியை உடனே பார்த்தாகணும் என சின்னப்படை வீரர் பல சமயம் காணாமல் போகிறாராம். ஜினிய‌ர் விக‌ட‌ன்‍- கிஸ் கிஸ் ப‌குதியில்

ர‌ம்யா கிருஷ்ன‌ண், ப‌ர‌த் ( ந‌ம்ப‌ பிர‌ண்டு ஒருத்தர் சொல்லுவார்) ர‌ம்யா கிருஷ்ன‌ண்= ஓல்டு ஒயின் என்று

"படத்தில் நடித்து சம்பாதித்ததைக் காட்டிலும் அங்கேயும் இங்கேயுமாக பயணம் செய்தே அதிகமாக லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் மினரல் வாட்டர் கலாட்டா நாயகி. அவர் பாணியைப் பின்பற்ற கூடல் நாயகியும் சம்பந்தப்பட்ட புள்ளிகளிடம் நெருக்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டாராம்- ஜினிய‌ர் விக‌ட‌ன்‍- கிஸ் கிஸ் ப‌குதியில்

நிலா, ச‌ந்தியா ( இப்ப‌ 2 பேரும் ப‌ட‌த்துல‌ லாம் ந‌டிக்க‌றான்க்க‌ளா என்னா?)


"காம குருக்கள் வழக்கில் சறுக்கல்- கேட்ட ஜாமீன் கிடைத்தது... கோட்டை விட்டது போலீஸ்- " ஜினிய‌ர் விக‌ட‌ன்‍ த‌லைப்பு செய்தி

அப்ப‌டியே ம‌துரை வ‌க்கீல் அங்கிள், என்.டி. திவாரி, வாட‌கை ம‌னைவிக‌ள், அந்தும‌ணி,ம‌ற்றும் ப‌ல‌ரின் செய்திக‌ளை பாலோஅப் செய்தால் ந‌ன்றாக‌ இருக்கும்

நடிகை அஞ்சலிதேவிக்கு சதாபிஷேகம்... சாய் பாபா வருகிறார்- ஒரு செய்தி

அவ‌ருக்கும் இவ‌ருக்கும் என்னா ச‌ம்ப‌ந்த‌ம்? அது ச‌ரி ம‌ஞ்ஞ‌ள் த‌லைவ‌ருக்கு ச‌தாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌தா இல்லையா?

"பிரசன்னாவின் பக்குமான பேச்சு----பட விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளே வராமல் தவிர்க்கப்பார்க்கும் இன்றைய சூழலில், தனக்கு தெரிந்த பத்திரிகையாளர் கூப்பிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் பிரசன்னா. அது புதுமுகங்கள் நடித்த பாடகசாலை ஆடியோ வெளியீடு"-ஒரு செய்தி

ச‌ரி ச‌ரி ப‌த்திரிகையை ம‌தித்தால் அவ‌ர்க‌ளுக்கு பாராட்டு இல்லைனா வ‌ச‌வு தானா?ப‌த்திரிகையில் ந‌ட‌க்கும் அநியாய‌ங்க‌ளுக்கு நார் முடிவு க‌ட்ட‌போகிறார்க‌ள்

2 Feb 2010

எங்க‌ ஊரு வ‌லைப‌க்க‌த்திற்கு வாங்க‌ (ஈரோடு)

ந‌ன்ப‌ரும் ராஜ் டி.வி முத‌ன்மை செய்தியாள‌ருமான‌ (ஈரோடு ப‌குதி) திரு.குமார‌சாமி அவ‌ர்க‌ளின் முய‌ற்சியால் இந்த‌ வ‌லைப்ப‌க்க‌ம் ஆர‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

வியாபார‌ நோக்கில்லாம‌ல் ம‌க்க‌ளுக்கு சென்று சேர வேண்டும் என்ற‌ என்ன‌த்தில் துவ‌ங்க‌ப‌ட்டுள்ள‌து.

விரைவில் இந்த‌ வ‌லைப்ப‌க்க‌ம் விரிவ‌டைய‌ உங்க‌ள் ஆத‌ர‌வு த‌ர‌ வேண்டுகிறோம்

www.dailyerode.com


இந்த‌ வ‌லைப‌திவு மெருகேற‌ ஈரோடு வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் ஆலொச‌னைக‌ள் வ‌ர‌வேற்க‌ப‌டுகிற‌து

31 Dec 2009

ந‌ண்ப‌னின் பிரிவு

ஒரு வ‌ருட‌ ந‌ட்பு தான் என்றாலும்
ஆழ‌மான‌ ந‌ட்பு...ச‌ந்தோச‌த்தையும் சுக‌த்த‌யும் ச‌ரி விகித‌த்தில் க‌ல‌ந்து கொடுத்த‌வ‌ன்

பிரிகிறேன் என்று சொன்ன‌ போது வேத‌னை என்னை ஆட் கொண்ட‌து
பிரியாதே என்றேன் முடியாது இது கால‌த்தின் க‌ட்டாய‌ம் என்றான்

ஆனால் என்னை விட‌ அரும‌யான‌ ந‌ண்ப‌ன் உன‌க்கு கிடைப்பான் என்றான்
வ‌ருத்த‌துட‌ன் விடை கொடுத்தேன்


அவ‌ன் கூறிய‌ மாதிரி புது ந‌ண்ப‌ன் கிடைத்து விட்டான்...போக‌ போக‌தான் தெரியும் இவ‌ன் அவ‌னை போல‌வா இல்லை என்றால் அவ‌னை விட‌ உய‌ர்ந்த‌வ‌னா என்று


பிரிந்த‌ நண்ப‌ன் 2009 கிடைத்த‌ ந‌ண்ப‌ன் 2010
வாருங்க‌ள் என்னுட‌ன் சேர்ந்து அவ‌னையும் உங்க‌ள் ந‌ன்ப‌ன் ஆக்கிகொள்ளுங்க‌ள்

17 Dec 2009

New Year & Christmas வாழ்த்துக‌ள்

எல்லாருக்கும் வ‌ண‌க்க‌ம்......

அனைவ‌ருக்கும் இனிய‌ கிருஸ்தும‌ஸ் ம‌ற்றும் ஆங்கில‌ புத்தான்டு வாழ்த்துக்க‌ள்.

இன்னும் நாள் இருக்கு இல்ல‌ இப்ப‌வே என்ன‌ அவ‌ச‌ர‌ம்னு கேட்கிர‌வ‌ங்க‌ளுக்கு...வெகேஸ‌ன் இருக்கு use it or lose it பாலிசி ந‌ம்ப‌ ஆபிஸ்ல‌ சோ...வுடு சூட்டு....வ‌ர்ர‌ திங்க‌கிழ‌மை-ல‌ இருந்து...

போற‌ எட‌த்துல‌ பொட்டி த‌ட்டுனா ந‌ல்லாவா இருக்கும்...ஏதோ ஆபிஸ் வ‌ந்தோமா ஒரு க‌ப் காபியை குடித்தோமா, ஈ‍ ‍‍மெயில் செக் செய்தோமா கொஜ்ஜ‌ நேர‌ம் வேலை என்கிற‌ பேரில் ஒரு மொக்கையை போட்டோமா அப்ப‌டினு இருக்கும் போது சாலிக்கு போர‌ எட‌த்துல‌ உட்காந்த்து ....விடுங்க‌...அதெல்லாம் ந‌ல்லா இருக்காது)

ச‌ரி சும்மா இருந்தா போர் அடிக்குமே யாராகிடாயாவ‌து பேச‌னுமே... உங்க‌ளுக்கு என்ன மாதிரியே‌ போர் அடித்தால் உங்க‌ போன் ந‌ப்ம‌ர் கொடுங்க‌ உல‌க‌த்துல‌ நீங்க‌ எங்க‌ இருந்தாலும் நான் அழைக்கிரேன் எல்லாம் வானேஜ் (VONAGE) த‌ய‌வுதான்

ஆன‌ந்த‌விக‌ட‌ன் ம‌ற்றும் எழுத்தாள‌ர் எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்

இது ஆன‌ந்த‌விக‌ட‌னில் வ‌ந்த‌ இந்த‌வார‌ க‌ட்டுரை....காப்பி பேஸ்டு செய்து உள்ளேன் (ந‌ன்றி ஆன‌ந்த‌ விக‌ட‌னுக்கு)

மதுரை ரயிலில் இரண்டு வெளிநாட்டுப் பயணிகளைச் சந்தித்தேன். தனது பெயர் ரஃபேல். மனைவி பெயர் ஆடா. பிரேசிலைச் சேர்ந்தவர்கள். தாங்கள் கொடைக்கானலுக்குப் போவதாக அறிமுகம் செய்துகொண்டார். ஆடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாது என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார்.

என் அருகில் அமர்ந்திருந்த கரை வேஷ்டி அணிந்த கவுன்சிலர் வியப்புடன், "வெள்ளைக்காரனுக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதுன்னா ஆச்சர்யமா இருக்கில்ல?" என்றார். உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்படுவது இல்லை. அந்தப் பெண் ஜெர்மானியர் என்று சொன்னேன். தான் கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் எம்.ஏ., படித்திருப்பதாகச் சொல்லி, அவரும் வெள்ளைகாரர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.



பிறகு கவுன்சிலர் என்னிடம், "இவங்களைப் பார்த்தா அமெரிக்கர்கள் மாதிரி தெரியுது" என்று சொன்னார். அந்தப் பெண் அமெரிக்காஎன்றசொல் லைக் கேட்டவுடன் பலமாகச் சிரித்துவிட்டார். பிறகு, "இந்தியாவில் எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் அமெரிக்காவா என்று ஏன் கேட்கிறார்கள்? அமெரிக்கா மட்டும்தான் இந்தியர்களுக்குத் தெரிந்த வெளிநாடா?" என்று கேட்டார்.

ஆமாம் எங்க‌ள் ஊர் ப‌த்திரிகைக‌ளுக்கு தெரிந்த‌து அமெரிக்க‌ ம‌ட்டும் தான், அவ‌ர்க‌ள் அதை ப‌ற்றி ம‌ட்டும் தான் செய்தி வெளியிடுவார்க‌ள் அதை ப‌டித்து என்க‌ளுக்கு அமெரிக்கா ம‌ட்டும் தான் தெரியும்

"அது பொதுப் புத்தி. 20 வருடங்களுக்கு முன்பு வரை எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் லண்டனில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். இப்போது அது மாறியிருக்கிறது" என்று சொன்னேன். கவுன்சிலரின் இரண்டு செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கத் துவங்கின.அவர் இரண்டு செல்போன்களையும் எடுத்து ரயில் பெட்டியே கேட்கும்படியான உச்சக் குரலில் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் கண்களாலேசிரித்துக் கொண்டார்கள்.

"முதன்முறையாக கொடைக்கானலுக்குப் போகிறீர்களா?" என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார்கள். "எப்படி இருக்கிறது உங்களது இந்தியப் பயணம்?" என்றதும், "இந்தியர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்று, எங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்அல்லது வியந்து வியந்து பார்க்கிறார்கள். படித்தவர்களுக்கே கூட வெளிநாட்டுப் பயணிகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன" என்றார்.

அதை ஆமோதிப்பதுபோல ஆடா, "வெளிநாட்டுப் பெண்கள் என்றால் வேசைகள் என்றுதான் இந்தியாவில் படித்தவர்கள்கூட நினைக்கிறார்கள். பொதுஇடங்களில் நாங்கள் பாலுறவுகொள்வோம் என்று நம்பி, பின்னாடியே துரத்துகிறார்கள். எவ்வளவு அபத்தமான கற்பனை இது."

அப்ப‌டிதானே நாங்க‌ள் தின‌ச‌ரிக‌ளில் ப‌டித்தோம்...உத‌டு முத்த‌ம், த‌ண்ணீரை விட‌ பீர் விலை குறைவு,எங்க‌ள் தின‌ச‌ரிக‌ள் அதை ம‌ட்டும் தானே செய்தியாக‌ வெளியிட்ட‌து

ரஃபேல் தொடர்ந்து பேசினார், "நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. முழுமையான வெஜிடேரியன். அதை ஒருவர்கூட நம்ப மறுக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் எப்படி வெஜிடேரியனாக இருக்க முடியும் என்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. வெள்ளைக்காரர் என்றால் கட்டாயம் கிரிக்கெட் பிடிக்கும், மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் கேட்பார்கள், போதை மருந்து சாப்பிடுவார்கள், எல்லோரும் பையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்று நம்பு கிறார்கள்.

ஆந்திராவில் ஒரு ஆட்டோ டிரைவர் எங்களிடம், தான் அனகோண்டா பார்த்திருப்பதாகச் சொல்லி, அது சூப்பராக இருப்பதாகப் பாராட்டினார். அனகோண்டா என்றால் என்னவென்றே புரியவில்லை. பிறகு, விசாரித்தபோது அது ஹாலிவுட் படம் என்று தெரிந்துகொண்டோம்" என்று சிரித்தார்.

கவுன்சிலர் தனது துணிப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் டம்ளர், குளிர்பானம் இரண்டையும் வெளியே எடுத்துவைத்தார். பிறகு, இடுப்பில் இருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கலந்தார். பிறகு, அவர்களிடம் தன்னிடம் இன்னொரு குவாட்டர் இருப்பதாகவும் அவர்கள் விரும்பினால் சேர்ந்து சாப்பிடலாம் என்றும் சொன்னார். அதற்கு ரஃபேல் தாங்கள் பயணத்தின்போது குடிப்பது இல்லை. அதிலும் பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் குடிப்பது பார்க்கவே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்றார்.

அதுச‌ரி உங்க‌ள் ஊரில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்யும் எங்க‌ள் ஊரில் அவ‌ர்க‌ளுக்கும் சேர்த்து தான் பாட்டில் வாங்க‌ வேண்டும் (ச‌ட்ட‌த்தை நிறைவேற்ற‌ வாண்டிய‌ கன‌வான்க‌ளுக்கு)

கவுன்சிலர், "அதெல்லாம் பழக்கமாகிருச்சி சார்" என்றபடியே உணவுப் பொட் டலங்களைப் பிரித்து சாப்பிடத் துவங்கியிருந்தார். சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா - மட்டன் சுக்கா வாசனை ரயில் பெட்டி எங்கும் நிரம்பியது.

ஏன் உங்க‌ ஊரு சாப்பாட்டுல‌ வாச‌ம்/நாத்த‌ம் வ‌ர்ர‌து இல்லையா? இல்ல‌னா நீங்க‌ யாரும் டிராவ‌‌ல்ல‌ சாப்ப‌டுர‌தே இல்ல‌ பாருங்க‌..

ரஃபேல் ரகசியமான குரலில், "ஏன் இந்தியாவில் சைனீஸ் ஹோட்டல்கள் மீது இவ்வளவு மோகம். நெடுஞ்சாலையில்கூட சைனீஸ் நூடுல்ஸ் கடைகள் இருக் கின்றனவே, அது எப்படி வந்தது?" என்று கேட்டார். "10 வருடங்களுக்குள் இந்திய உணவு முறை பெரிதும் மாறிவிட்டது. இப்போது எல்லா இடங்களிலும் ஃபாஸ்ட் ஃபுட்தான்" என்றேன். ரஃபேல் கண்சிமிட்டி, "அது உண்மை யில் ஃபாஸ்ட் ஃபுட் இல்லை, ஸ்லோ பாய்சன்" என்று சொன்னார்.

கவுன்சிலர் தன்னிடம் இருந்த பரோட்டாவில் ஒன்றை அவர் கள் சாப்பிட்டுப் பார்க்கும்படி வற்புறுத்தினார். தாங்கள் இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அதை கவுன்சிலர் நம்பத் தயாராக இல்லை.

ஆடா என்னிடம், "தமிழ்நாட்டில் வெள்ளை உடை அணிந்தவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகளா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "பிறகு, ஏன் இவர்கள் பேன்ட்-ஷர்ட்அணிவது இல்லை. பெண் அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஏதாவது டிரெஸ் கோட் இருக்கிறதா என்ன? சுடிதார் அல்லது ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் அரசியல்வாதியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏன் அப்படி? ஏதாவது கலாசாரத் தடையா?"

"ஒரு வரியில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. விளக்கிச் சொல்ல முடியாத நம்பிக்கைகள், மரபு மற்றும் கலாசார அடை யாளங்கள் இருக்கின்றன" என்றேன்.

எங்க‌ ஊர் அர‌சிய‌ல்வா(ந்)திக‌ள் அரை நிக்கார் போட்டு வ‌ந்தால் அதையும் ப‌ட‌ம் எடுத்து போட்டு பின்வ‌ருமாறு எழுதுவார்க‌ள் இந்த‌ ப‌த்திரிகைக‌ள்

(த‌லைப்பாக‌) பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி ட‌வுச‌ரில் ஆட்ட‌ம்

இர‌ண்டு எழுத்து பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் மூன்று எழுத்து ஊரில் உள்ள‌ க‌ட‌ற்க‌றை‌க்கு சென்று இருந்த‌போது ஊரில் உள்ள‌ பிர‌ச்ச‌ன‌க‌ளை ம‌ற‌ந்து ட‌வுச‌ரில் ஆட்ட‌ம் போட்டார் க‌ண்டிப்பாக‌ இவ‌ர் சுய‌நினைவோடு செய்து இருக்க‌ மாட்டார் என‌ த‌க‌வ‌ல் அறிந்த‌ நான்கு எழுத்து வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌

அவர் தலையசைத்தபடியே, "எங்களுக்கு இன்னொருசந்தே கமும் இருக்கிறது. பையன்களுக்குப் பூ வைத்து அலங்காரம் சூடி பெண்போல போட்டோ எடுத்துவைத்திருப்பதைப் பார்த்தோம். அது எதற்காக? சிறுமிகள் அதுபோல ஆண் வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்வார்களா என்ன?" என்றார். நான் சிரித்துவிட்டேன்.

"இந்தியக் குடும்பங்கள் கிரேக்கப் புராணங்களைவிட விசித்திரமானவை. அதன் நம்பிக்கையின் வேர்கள் எங்கே இருந்து துவங்குகின்றன என்று எந்த ஆராய்ச்சியாளனாலும் கண்டுபிடித்துவிட முடியாது. அதுபோலவே அவர்கள் மனஇயல்பை அறிந்துகொள்வது மிகப் பெரிய சவால்" என்றேன். அவர்கள் உறங்கத் தயராகிவிட்டார்கள். கவுன்சிலர் போதை பற்றாமல் இரவெல்லாம் அலைந்துகொண்டே இருந்தார்.

வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் கோவாவில் உள்ள தங்கும் விடுதியில் செக் நாட்டைச் சேர்ந்த ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மிக ஆர்வமாக காப்கா, மிலன் குந்தேரா, மிலாஸ் ஃபோர்மென் என்று பேசியபோது, அவர் அந்தப் பெயர்களைத் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் காப்காவைக் கூடவா தெரியாது என்று கேட்டேன். அவர் தனக்குப் படிக்கும் பழக்கமே கிடையாது. தான் ஒரு நீச்சல் வீரர் என்றார். இந்தியாவுக்கு வரும் பெரும்பான்மை வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா நிமித்தம் வருபவர்களே. அதுவும் குறைந்த செலவில் இயற்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். மற்றபடி அவர்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொள்வது நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் அறியாமை.

வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தை த‌ந்த‌து யார்...நாக்க‌ள் என்ன‌ போயி பார்த்டோமா என‌ன‌? ப‌த்திரிக‌க‌ள் தானே எங்க‌ளுக்கு அந்த‌ செய்திஅக்ள‌ த‌ருகிற‌து

இன்னொரு பக்கம், சேவை மனப்பாங்குடன் வரும் வெள்ளைக்காரர்களையும் கண்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை தேனாம்பேட்டை சந்திப்பு அருகில் உள்ள கூவம் ஆற்றை இரண்டு வெளிநாட்டுப்பயணி கள் உள்ளே இறங்கி சுத்தப்படுத்திக்கொண்டுஇருப் பதைக் கண்டேன். கழிவுகளின் துர்கந்தம் காரண மாக, அருகில் உள்ள வீதிகளில் வசிப்பவர்கள் எவரும் அந்த இடத்தில் நிற்பதுகூடக் கிடையாது. சாலையில் போகிற வருகிறவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள். கேலியாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்தப் பகுதிகளை வெள்ளைக்காரர்கள் இரண்டு நாளில் தூய்மைப்படுத்திவிட்டார்கள். அந்த தன்முனைப்பு அக்கறை நம்மிடம் இல்லாதது.

எனக்குப் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன் இயக்கிய 'Praying with Anger' படம் நினைவுக்கு வந்தது. அது சியாமளனின் முதல் படம். 1992-ல் வெளியானது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சியாமளன் அமெரிக்காவில் வளர்ந்தவர். இந்தப் படம் சென்னைக்குப் படிக்க வரும் ஓர் அமெரிக்க இளைஞனைப் பற்றியது.

பொதுவாக, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கப் போகிறவர்கள்தான் அதிகம். இந்தப் படத்தில் பல வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த தேவ் ராமன் என்ற இளைஞனை, 'ஒரு வருடமாவது சென்னையில் போய்ப் படித்துவிட்டு வா. அப்போதுதான் நமது பராம்பரியம் மற்றும் வேர்த் தொடர்ச்சி புரியும்' என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கிறார்கள். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். அவன் எதிர்கொள் ளும் கலாசாரச் சிக்கல்கள்தான் படம்.

அமெரிக்காவைப்பற்றி தமிழ் மக்களிடம் பொதுவான மனப் பிம்பங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கிற பெரும்பான்மை இளைஞர்கள். பெண் மோகம்கொண்டவர்கள். இரவெல்லாம் நடனம் ஆடுவார்கள். பேஸ்பால் விளையாடுவார்கள். அதிகம் குடிப்பார்கள். மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிடுவார்கள். லட்ச லட்சமாகச் சம்பாதிப்பார்கள் என்பது போன்ற தவறான கற்பிதங்களை சியாமளன் இந்தப் படத்தில் கேலி செய்திருக்கிறார்.

ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் அவனிடம், 'நீ அமெரிக்க ஆங்கிலத்தில் பேசினால் பெரிய ஆளாகிவிட முடியாது. நான் 30 வருடங்களாக ஷேக்ஸ்பியர் நடத்துகிறேன்' என்பார். அவர் இப்போதும் ஷேக்ஸ்பியர் காலத்திலேயே வாழ்ந்துகொண்டு இருப்பதாக தேவ் சொல்வான். அவனைச் சந்திக்கும் ஒரு பெண், அவன் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்திருக்கிறானா என்று படம் முழுவதும்கேட்டுக்கொண்டே இருப்பாள். அது போலவே ஆட்டோ டிரைவர் துவங்கி டீக்கடைக்காரன் வரை அவனிடம் அதிகமாகப் பணம் கேட்பார்கள். அவனைக் காதலிக்கும் பெண் டேட்டிங்பற்றி நிறையப் பேசுவாள்.

இந்திய இசையின் மகத்துவம்பற்றி அவனுக்குத் தினமும் வகுப்பு எடுப்பார்கள். தேவின் உண்மையான பிரச்னை அமெரிக்காபற்றிய தமிழ் மக்களின் தவறான கற்பிதங்களே. அதைப் படம் முழுவதும் அவன் விளக்கிச் சொல்கிறான். எவரும் கேட்பதே இல்லை. அமெரிக்காவில் ஆதிவாசிகள்கூட இருக்கிறார்கள் என்பதை அவன் சொல்லும்போது, அதை ஒருவரும் ஒப்புக்கொள்வதே இல்லை. நீங்கள் கற்பனையான அமெரிக்கா ஒன்றை வைத்திருக்கிறீர்கள். நிஜம் அப்படி இல்லை என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, முடிவில் அவன் அமெரிக்காபோய் விடுகிறான்.

எங்க‌ளுக்கு அந்த‌ க‌ற்ப‌ணையை த‌ந்தது யார்....நாங்க‌ள் பார்த்த‌ சில‌ ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ள், ப‌டித்த‌ ப‌த்திரிகைக‌ள், போய்வ‌ந்த‌ சில‌ வ‌ச‌தி ப‌டைத்த‌வ‌ர்க‌ள் (ந‌ம்ம‌ ஆளுங்க‌ சிங்க‌பூர்/தாய்லாந்து போனா நிறைய‌ பார்ப்பார்க‌ள் ஆனால் பேசுவ‌து என்ன‌மோ இர‌வு விடுதி ப‌ற்றி தான்) சொன்ன‌ செய்திக‌ள்தான் எங்க‌ளுக்கு க‌ற்ப‌ணையை த‌ந்த‌து

இது தனி நபர் சந்திக்கும் பிரச்னை மட்டும் இல்லை. மாறாக, 300 வருடங்களுக்கும் மேலாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் இருந்து உருவான பிம்பங்களே. இந்தியாவைப் பிரித்துத் துண்டாக்கிய மவுன்ட்பேட்டனை நாம் இன்றும் மவுன்ட்பேட்டன் பிரபு என்றுதான் சொல்கிறோம். இன்னொரு பக்கம், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருகிறவர்கள் உருவாக்கும்நம்மைப் பற்றிய தாழ்வான பிம்பம் நம்மை எப் போதுமே குற்றவுணர்ச்சி கொள்ளவைக் கிறது. நம் வரலாற்று நூல்களில் உள்ளவை அதிகார மாற்றத்தின் பிம்பங்களே. உண் மையான இந்திய மக்களின் எழுச்சியும் சமூக, கலாசார மாற்றங்களின் நிஜமான வரலாறும் இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை... அறிந்துகொள்ளப்படவும் இல்லை. அதுதான் இந்த அறியா மையை மாற்றுவதற்கான ஒரே வழி!

பார்வை வெளிச்சம்!

-நீங்க‌ள் உங்க‌ள் பார்வையை மாற்றுங்க‌ள் பிற‌ம‌க்க‌ளுக்கு... நீங்க‌ள் சொல்லுவ‌து எல்லாம் உண்மை என்று நின‌க்கும் ம‌க்க‌ளுக்காக...

-ந‌ல‌ல‌தை எழுதுங்க‌ள், கெட்ட‌தை சொல்லுங்க‌ள், அவ‌ர்க‌ளின் கலாசார‌ம் ப‌ற்றியும் எழுதுங்க‌ள்

-வெளிநாடுக‌ளில் இள‌சுக‌ளின் கூத்தை வெளியிடும் நீங்க‌ள் அவ‌ர்க‌ள் சாலைவிதிக‌ளை ம‌திப‌ப்தையும் ப‌ட‌த்துட‌ன் எழுதுங்க‌ள்

-வெளிநாட்ட‌வ‌ரின் காம‌த்தை வெளியிடும் நீங்க‌ள் அவ‌ர்க‌ளின் கால‌ம் த‌வராமையையும் வெளியிடுங்க‌ள்

எங்கூர்ல‌ நோம்பிங்க‌ணா அல்லாரும் வ‌ந்துடுங்க‌...

ப‌திவ‌ர்க‌ள், வாச‌க‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்கம், எங்கூர்ல‌ நோம்பிங்க‌ணா அல்லாரும் வ‌ந்துடுங்க‌...

வாலு, க‌திர், கார்த்திக் ம‌ற்றும் ப‌ல‌ர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த‌ நோம்பிக்கு வ‌ந்து நோக‌ம‌ நோம்பி கும்பிட்டு அல்லாருக்கும் (உங்க‌ளுக்கு தெரிஜ்தை) க‌த்து கொடுத்துட்டு ( உங்க‌ளுக்கு தெரியாத‌தை)க‌த்துகிட்டு போங்க‌னா

வாலுக்கு ஒரு கோரிக்கை....ந‌ம்ப‌ ல‌தான‌ந் சாருக்கு இந்த முறை எந்த‌ தாக்குத‌லும் ந‌டை பெறாம‌ல் த‌னி பாதுகாப்பு வ‌ளைய‌ம் அமைத்து விடுங்க‌ள் (இல்ல‌ன‌ அவ‌ர் அவ‌னுங்க‌ இருக்குற‌ ஊரா இதுனு நினைக்க‌கூடாது)

சை‌வ‌ம், அசைவ‌ம் ச‌ரி அப்ப‌ தீர்த்த‌வாரி இருக்க‌ இல்லையா? (வாலு இருப்ப‌த‌னால் இது ஒரு வால் கேள்வி)

சிண்ண‌ம்மிணி ஏதோ கொஞ்ஜ‌ நாள் ஈரோட்டில் ஆட்ட‌ம் போட்டாங்க‌ளாம் (இருதாங்க‌ளாம்) அந்த‌ ஹாஸ்ட‌லுக்கு அடுத்த‌ வீடு விட்டு அடுத்த‌ வீட்டில்தான் நாங்க‌ள் சில‌ கால‌ம் வாட‌கைக்கு குடி இருந்தோம் (அவ‌ர் சொல்லும் கால‌ க‌ட்ட‌த்தில்தான்)ஒருவேளை நான் அவ‌ங்க‌ளை பார்த்து இருப்போனோ என்ன‌மோ. என்ன‌மோ போங்க‌ ப‌ழைய‌ நினைப்புலாம் கிள‌ப்பிவிட்டுட்டாங்க‌

22 Nov 2009

க‌லாச்சார‌ம் மாறிவிட்ட‌தா

நேற்று ம‌துரை ச‌ம்ப‌வ‌ம் என்று ஒரு ப‌ட‌ம்.....ய்ப்பாடி ப‌ட‌த்தில் வ‌ரும் அனைத்து கேர‌க்ட‌ர்க‌ளும் ஒரு ப‌ன்ச் ட‌ய‌லாக் பேசுகிறார்க‌ள். மாஸ் ஹீரோக்க‌ளுக்கு கொடுக்கும் ஒரு கிராண்ட் ஒப்ப்ப‌னிங் அறிமுக‌ க‌தாநாய‌க‌னுக்கு கொடுத்து இருக்கிறாங்க‌ப்பா....


ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கார்த்திக் & ஜீவிதா ந‌டித்த‌ ப‌ட‌த்தில் (ப‌ட‌ம் பேர் நியாப‌க‌ம் இல்லை) ஜீவிதா ஒரு போலிஸ் உடை அணிந்து க‌ன‌வில் ஒரு பாட‌ல் ஆடுவார்/பாடுவார்( நான் தேடும் செவ்வ‌ந்தி பூ இது) அத‌ற்கே போலிஸ் கார‌ர்க‌ள் அல்ல‌து ப‌ல‌ர் க‌ன்ட‌ண‌ம் ஆட்சேப‌ம் எழுப்பினார்க‌ள்

இந்த‌ திரைப்ப‌ட‌த்தில் ர‌வுடி க‌தாநாய‌க‌ன் பெண் போலிஸ் அதிகாரியை lip to lip kiss,
அதுவும் போலிஸ் உடையில் இருக்கும் போது...இப்போது இதுலாம் ஒன்னும் இல்லை அல்ல‌து இது எல்ல‌ம் சாதார‌ன்ம் என்று எடுத்துகொண்டார்க‌ளா?

இதி ப‌ற்றி எந்த‌ ஒரு செய்திக‌ளும் ப‌டித‌தாக‌ நியாப‌க‌ம் இல்லை, அல்ல‌து யாராவ‌து கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கிறார்க‌ளா

1 Sept 2009

CA State Fair-2009

வ‌ருடா வ‌ருட‌ம் அர‌சு பொருட்காட்சி ( State faiர்) இங்கு ந‌டை பெறுவ‌து வ‌ழ‌க்க‌ம், இந்த‌ வ‌ருட‌ம்
உங்க‌ளுக்காக‌ சில‌ புகைப‌ட‌ங்க‌ள்.

1) த‌ண்ணீர் பாட்ட‌ல் நிறைய‌ எடுத்து செல்லுங்க‌ள் (உள்ளே விலை அதிக‌ம் $2-3)
2) மாலை நேர‌ம் சால‌ சிற‌ந்த‌து (4 -4.30 க்கு சென்றால் வெய்யிலின் தாக்க‌ம் அதிக‌ம் இருக்காது)






மேலும் பார்க்க‌...

காரின் க‌த‌வு வேலை செய்ய‌வில்லை-How to change Honda actuator

திடிரென்று காரின் க‌த‌வு லாக் ஆக‌ மாட்டேன் ஆகிவிட்டால் திற‌க்க‌ மாட்டேன் என்றது, டீல‌ரிட‌ம் கேட்டால் $220 த‌னியார் க‌டையில் கேட்டால் $120 ஆகும் என்று சொல்லிவிட்டார்க‌ள். இப்போது இருக்கும் பொருளாதார‌ ம‌ந்த‌ நிலையில் அவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌முடியாது, கூகிள் ஆண்ட‌வ‌ரிட‌ம் கேட்ட‌போது அவ‌ரோ $40 ம‌ற்றும் 30 ம‌னித்துளிக‌ளில் செய்து விட‌லாம் என்றார். ச‌ரி என்று நானே ச‌ரி செய்து விட்டேன். யார் யாரோ அவ‌ர்க‌ள் ப‌ங்கிற்கு இனைய‌த்தில் நிறைய‌ த‌க‌வ‌ல்க‌ள் த‌ந்து இருக்கிறார்க‌ள், ச‌ரி என்று நானும் எனது ப‌ங்கிற்கு அளிக்கிறேன். I replaced Rear Left door, the same methode is used for Rear Right too...

ந‌ம் ம‌க்க‌ள் கொஞ்ஜ‌ம் பேரு இந்த‌ கார் 2004, Honda civic வெச்சிருக்காங்க‌ அவ‌ங்க‌ளுக்கு உப்யோக‌ப‌டும்னு நினைக்கிறேன்.

Parts needed:

1) Philips screw driver
2) Minus screw driver
3) Replacement part actuator



Steps:

1)Open the door
2)Pull the squere plastic plate (located at handle @ inside ) using the minus screw driver (do not scratch)
3)remove the 2 philips screws

4)Remove the plastic part ( where the window up/down button, do not break it, carfull)
5)Remove the 2 philips screws ( now all screws are removed)




6)Pull the door cover, it's locked by the push lock types( like push pin)



7)Replace the actuator



8)Put the door cover by pushing hard, you all set, you saved around $ 100

15 Aug 2009

2 ம் பாக‌ம்‍‍‍‍‍‍‍ ‍‍‍___ காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

ம‌திய‌ம் எப்ப‌ வ‌ரும் என்று ந‌ம‌து ஹீரோவும், மாப்பிள்ளையும் யுக‌க‌ன‌க்கில் பொறுத்து இருந்தார்க‌ள். அந்த‌ ம‌திய‌மும் வ‌ந்த‌து அழைப்பும் வ‌ந்த‌து...ந்‌ம‌து ஹீரோ மாப்பிள்ளையின் த‌ந்தையை அழைத்து கொண்டு பெண்ணின் மாமா வீட்டிற்கு போய் சேர்ந்தார். ந‌ம்ப‌ ஹீரோவிற்கு அவ‌ர்க‌ள் அடித்து விட்டால் திருப்பி அடிக்காம‌ல் இருக்க‌ மாப்பிள்ளை ச‌த்ய‌ம் வாங்கிகொண்டார்.

ஹீரோவும் மாப்பிள்ளையின் த‌ந்தையும் போன‌போது அங்கு ஒரு குடும்ப‌ ப‌ட்டாள‌மே இருந்த‌து அந்த‌ ப‌ட்டாள‌த்தில் ந‌ம‌து ம‌ன‌ப்பெண்ணும் இருந்தார், அவ‌ரை பார்த்த‌ பிற‌குதான் ந‌ம‌து ஹீரோவொற்கு ச‌ற்று தைரிய‌ம்/தெம்பு வ‌ந்த‌து.

ஹீரோவை பார்த்த‌வுட‌ன் பெண்ணின் த‌ந்தைக்கு நீ அவ‌ரின் ம‌க‌ன் தானே என்று ச‌ரியாக‌ சொல்லிவிட்டு உன்க்கு ஏன‌ப்பா இந்த‌ வேலை என்று ஆர‌மித்தார். ந‌ம‌து ஹீரோவும் ச‌ரி அடி ஏதும் விழாது என்ற‌ தைரிய‌த்தில் பேச ஆர‌மித்தார். அந்த‌ பேச்சு இர‌வு 9.30 வ‌ரை நீடித்த‌து...அவ‌ர்க‌ளாக‌வே காபியும் த‌ந்து பேச்சை தொட‌ர்ந்தார்க‌ள். ( மாப்பிள்ளையின் த‌ந்தை அவ்வ‌போது த‌லையை ஆட்டி, சிரித்து, வ‌ருத்த‌ம் தெரிவித்து ஒரு மாதிரி இருந்தார்) இந்த‌ பேச்சில் ம‌ன‌ப்பென்னிட‌ம் இருந்த‌ தைரிய‌த்தை பார்த்து ந‌ம‌து ஹீரோவே ஆடீதான் போனார்.( ப‌ல‌ வ‌ச‌வுக‌ளுக்கும் அவ‌ர் அமைதியாக‌ தான் இருந்தார், ஆனால் த‌ன்மான‌த்தை சீன்டி பார்க்கும் கேள்வி வ‌ந்த‌ போது அவ‌ரின் கோப‌ம் வெடித்துவிட்ட‌து). நேர‌ம் ஆகிவிட்ட‌தால் நாளை காலையில் பேச‌லாம் என்று கிள‌ம்பிவிட்டார்க‌ள்.அன்று இர‌வு மாப்பிள்ளைக்கு ஆயிர‌ம் இர‌வு ஆக‌தான் இருந்தது.

ம‌றுநாள் காலையில் 10 ம‌னிக்கு ப‌ஞ்ஜாய‌த்து ம‌றுப‌டியும் கூடிற்று..ஆனால் இந்த‌ முறை வேறு ஒரு மாமா வீட்டில். கார‌ சார‌ விவாத‌ங்க‌ளுக்கு பிற‌கு சில‌ ப‌ல‌ வாத‌ங்க‌ளுக்கு பிற‌கு. ஒரு சில‌ க‌ன்டீச‌னுக்கு பிற‌கு மாப்பிள்ளையை நேரில் பார்க்க‌ வேண்டும் என்று சொல்லிவிடார்க‌ள். அப்போதே ந‌ம‌து ஹீராவிற்கு இது 60 ச‌த‌விகித‌ம் முடைந்து விட்ட‌து என்று ம‌ன‌தில் நினைத்தார்.

அன்று மாலை 6.30 மாப்பிள்ளையை பார்க்க‌ அன‌வ‌ரும் ஒரு பொதுவான‌ இட‌த்தில் கூடினோம்.
மாப்பிள்ளைக்கோ ஒரே டென்ஸ‌ன்...ஒருவ‌ழியாக‌ அனைவ‌ரும் பார்த்து அடுத்த‌ விச‌ய‌த்திற்கு தாவினோம். அதாவ‌து முறைப்ப‌டி திருமண‌ம் ந‌ட‌த்தி வைத்து விடுகிறோம் அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கும் எங்க‌ளுக்கும் ச‌ம்ம‌த‌ம் இல்லை என்று இருவ‌ரிட‌மும் பான்டு ப‌த்திர‌த்தில் கையெழுத்து போட‌ வேண்டும் என்று சொல்லிவிட்டார்க‌ள்.மாப்பிள்ளைக்கு ஓகே தான் ஆனால் இங்கு பெண் கொஞ்ஜ‌ம் யோசித்து முடியாது என்று சொல்லிவிட்டார். கார‌ண‌ம் கேட்ட‌ போது அவ‌ர் சொன்னது ச‌ற்று ரீச‌ன‌புள்ளாக‌தான் இருந்த‌து.( நாக‌ரீக‌த்துட‌ன் அதை த‌விற்கிறேன்)

ஹீரொவிற்கு அடுத்த‌து என்ன‌ செய்ய‌லாம் என்று யோச‌னை வ‌ந்த‌து...அவ‌ரின் வ‌க்கீல் ந‌ன்ப‌ருக்கு ஒரு போன் செய்து கேட்ட‌ போது இந்த‌ மாதிரி எழுதி வாங்கினால் எல்லாம் ச‌ட்ட‌ப‌டி செல்லுப‌டி ஆகாது என்று சொன்னார்...அதை பெண்ணிட‌ம் சொல்லி அவ‌ரிட‌ம் கையெழுத்து வாங்கி திரும‌ண‌ வேல‌க‌ளை பார்க்க‌ ஆர‌மித்து விட்டார்க‌ள்.

ந‌ம‌து ஹீரோதான் திரும‌ண‌ வேலைக‌ளை முன்னிறுத்தி பார்த்து அவ‌ர்க‌ளை த‌னி குடித்த‌ன‌ம் விக்கும் வ‌ரை இருந்து முடித்து கொடுத்தார்.

திரும‌ண‌ வேலைக‌ளுக்காக அவ‌ர் ம‌ண‌‌ப்பெண்னின் மாமா வீட்டிற்கு சில முறை சென்று வ‌ந்தார்..அவ‌ரின் சுறு சுறுப்பு, அவ‌ரின் அழ‌கு, அவ‌ரின் பேச்சுதிற‌மைக்காக‌ அங்கு ஒரு காத‌ல் ம‌ல‌ர்ந்த‌து...அது மாமாவின் 2 வ‌து ம‌க‌ள்.

நீங்க‌ள் நினைப்ப‌து போல் அந்த‌ திரும‌ண‌ம் அவ்வ‌ள‌வு ஈஸியாக‌ ந‌ட‌க்க‌வில்லை..இந்த‌ முறை அவ‌ர் முன்னால் மாப்பிள்ளையிட‌ம் ஐடியா கேட்டார், அவ‌ர் கொடுத்த‌ ஐடியா தான் திரும்பி வ‌ந்த‌து. (ரிஜிஸ்ட‌ர் திரும‌ண‌ம்)டேய் என‌க்கு க‌ல்யாண‌ம் செய்து வைத்த‌ கையோடு உன‌க்கு வாழ்க்கையை தேடிக்கிட்டேயாடா என்று க‌லாய்த்த‌து த‌னிக்க‌தை.

ந‌ம‌து ஹீரோ நேராக‌ த‌ன‌து வ‌ருங்கால‌ மாம‌னாரின் வீட்டிற்கு சென்று நீங்க‌ள் நீங்க‌ள் திரும‌ண‌ம் செய்து வைக்க‌ வில்லை என்றால் நாங்க‌ளாக‌வே திரும‌ண‌ம் செய்து கொள்ளுவோம், ஒரு ம‌ரியாதைக்காதான் உங்க‌ளிட‌ம் நிற்கிறோம் என்று நேருக்கு நேராக‌ பேசிவிட்டார். ( அவ‌ருக்கு தான் தெரியுமே இவ‌ன் எல்லாத்தையும் செய்வான் என்று) அடுத்த‌ முகுர்த்த‌தில் அவ‌ராக‌வே திரும‌ண‌ம் செய்து வைத்து விட்டார்.


இப்போது ந‌ம‌து ஹீரோ சிட்னியில் வேலை பார்க்க‌, அவ‌ர் ந‌ண்ப‌ர் பூனாவில் (Maharastra) இருக்க‌ அவ‌ர்க‌ளது வாழ்க்கை த‌லா இரு குழ‌ந்தைக‌ளோடு சுப‌மாக‌ இருக்கிற‌து.

( பின் குறிப்பு: வ‌ழ‌க்க‌ம் போல் குழ‌ந்தை பிற‌ந்த‌வுட‌ன் குடும்ப‌ங்க‌ள் ஒன்று சேர்ந்து விட்ட‌து)

14 Aug 2009

காத‌லுக்கு ம‌ரியாதை செய்த‌ நாடோடி...உண்மை ச‌ம்ப‌வ‌ம்

வாசகர்களே... வாங்க கலக்கலாம் இந்த தொடர் விகடனில் வருகிறது.

இந்த வாரம் நண்பனின் காதலுக்கு உதவச் சென்று 'நாடோடிகள்' ஆனவர்களின் கதைகள்...

ஆஹா ந‌ம்ப‌ கிட்ட‌யும் ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌ம் இருக்கிற‌து....ப‌ல‌நாள் நின‌த்து நின‌த்து ம‌ண‌ம் விட்டு சிரித்த‌ ச‌ம்ப‌வ‌ம்....

ஈரோட்டில் காத‌ல‌ன் இன்ஞினிய‌ரிங் காலேஜ்ஜில் ப‌டித்து கொண்ணிருந்தான்...காத‌லி பெருந்துறை ம‌ருத்துவ‌ க‌ல்லுரியில் ப‌டித்து கொண்டிருந்தார்க‌ள், 13‍ம் ந‌ம்ப‌ர் ப‌ஸ்ஸில் தான் இருவ‌ரும் ப‌ய‌ன‌ம்....அப்போது வ‌ந்த‌ ஜெமினி ப‌ட‌ம் பார்த்து எல்லோரும் 'ஓ' போட்டு ப‌ய‌ன‌ம் இனிதே ஆர‌மித்து காத‌லும் ஜோராக‌ வ‌ள‌ர்ந்த‌து.

க‌டைசி வ‌ருட‌ம் காத‌ல‌னுக்கு...என்ன‌ ப‌ன்னுவ‌துனு தெரிய‌வில்லை...ந‌ம்ப‌ ஹீரோவிட‌ம் வ‌ந்து வ‌ழிகேட்டார்க‌ள் ( சோடியாக‌ வ‌ந்து)அலை பாயுதே ப‌ட‌த்தில் வ‌ந்த‌ மாதிரி ரிஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ன்னிக‌லாம் அப்ப‌ற‌ம் பிர‌ச்ச‌னை வ‌ந்தா பார்த்துக‌லாம் என்று அவ‌ரும் ஐடியா கொடுத்துவிட்டார்.

ச‌ரி என்று சிவ‌ன் ம‌லையில் திரும‌ன‌ம், காங்கேய‌த்தில் ரிஜிஸ்டிரேச‌ன் என்று த‌ட‌புட‌ல் க‌ல்யான‌சேவை ந‌ட‌ந்த‌து ( கோயிலுக்கும், ரிஜிஸ்டிரேச‌ன் ஆபிஸுக்கும் ப‌ண‌ம் ம‌ற்றும் சில‌ பேப்ப‌ர் ஒர்க்குக்கு க‌ஸ்ட‌ப‌ட்ட‌துக்கு த‌னியாக‌ உன்மை ச‌ம்ப‌வ‌ம் தொட‌ர்க‌தை எழுத‌லாம்)அவ‌ர் அவ‌ர் வீட்டுக்கு ம‌திய‌ம் 3.30க்கு போய் விட்டார்க‌ள்.

அன்று இர‌வு மாப்பிள்ளையும் திரும‌ன‌ம் ந‌ட‌த்தி வைத்த‌ ஆளும் அப்போதைய‌ டாஸ்மார்க் ( Private bar) போயி விட்டார்க‌ள் அங்கு ந‌ம்ப‌ ஈரோ.. பாருடா க‌ல்யான‌ம் ந‌ட‌ந்து முத‌லிர‌வில் இருக்க‌ வேண்டிய‌ ஆளு பாருக்கு வ‌ந்து இருக்கான் என்று க‌லாய்க்க‌..அருகில் ஒட்டு கேட்டு கொண்டு ( அரை குரையாக‌) இருந்த‌ புல் ம‌ப்பு பார்ட்டி இன்னா த‌லைவா பிர‌ச்ச‌னை க‌ல்யான‌ம் பிடிக்க‌லையா? இல்ல‌ பொன்னு பிடிக்கிலியா என்று கேட்டு ஒரே தொந்த‌ர‌வு...எவ்வ‌ளொவோ சொல்லியும் அந்த‌ ந‌ப‌ர் கேட்க‌வில்லை...அப்ப‌ற‌ம் மாப்பிள்ளை விட்டார் பார் ஒரு அறை...ம‌ப்பு பார்ட்டி சாரி பாஸ் என்று அடுத்த‌ ர‌வுண்டுக்கு போய்விட்டார்.

சில‌ மாத‌ங்க‌ள் ஓடின...ரிஜிஸ்டார் அலுவ‌ல‌க‌த்துக்கு மாற்ற‌ல் ஆகி வ‌ந்த‌ ஒருந‌ப‌ர் பொன்னுக்கு சொந்த‌க‌ரார் என்று தெரியாம‌ல் அவ‌ரிட‌ம் போய் சார் ஒரு certificate காபி வாங்க‌னும் எவ்வ‌ளுவு காசு என்று கேட்க‌ அவ‌ர் விவ‌ர‌த்தை கேட்க‌ அவ‌ன் விவ‌ர‌த்தை சொல்ல‌ certificat காபி கொடுத்துவிட்டு பெண்ணின் வீட்டில் போட்டு கொடுத்துவிட்டார்.

ஒரு சுப‌ யோக‌ வெள்ளிகிழ‌மை ம‌திய‌ம் மாப்பிள்ளையுட‌ம் இருந்து ஹீரோவிற்கு போன்..ஹீரோவும் அடித்து பிடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு போய் என்ன‌ ஏது என்று விசாரிக்க‌ விஷ‌ய‌ம் புரிந்து... மாப்பிள்ளையின் பெற்றோரிட‌ம் ச‌ம்ம‌த‌ம் வாங்கி அவ‌னை அழைத்து கொண்டு அடுத்த‌ பிளானை போட‌ ஆர‌மித்துவிட்டார்க‌ள்.

பெண்ணுக்கு ச‌ப்போர்ட் யாரு ப‌ன்னுவாங்க‌? இப்ப‌டி அடிச‌சா எப்ப‌டி அடிக்க‌லாம்? பொன்னு மாத்தி பேசுனா என்ன‌ ப‌ன்னுர‌து? ம‌ற்றும் ப‌ல‌... சில‌... அப்ப‌டினு பிளானை போட்டாகிவிட்ட‌து. அன்று இர‌வு ந‌ன்‌ப‌னுக்கு ஏதும் ஆக‌ கூட‌து என்று இருவ‌ரும் வீட்டில் த‌ங்காம‌ல் வேறு இட‌த்தில் த‌ங்கினார்க‌ள்.

ந‌ம்ப‌ ஹீரோ த‌ன‌து த‌ந்தையிட‌ம் இந்த‌ மாரி.. இந்த‌ மாரி..ப‌ஞ்ஜாய‌த்து ப‌ன்ன‌ நீங்க‌ வ‌ர‌முடியுமானு கேட்க‌ அவ‌ர் விவ‌ர‌த்தை கேட்க‌ அட‌பாவி அவ‌ன் ந‌ம்ப‌ சொந்த‌கார‌ன் (பொன்னு வீடு) என்று ஜ‌கா வாங்க‌..இவ‌ன் ச‌மாதான‌ப‌டுத்தி... வேண்டும் என்றால் நீங்க‌ள் க‌ன்டிப்பாக‌ வ‌ர‌ வேண்டும் என்று உறுதி வாங்கி கொண்டு அடுத்த‌ பிளானை ஆர‌மித்து விட்டான்.

அடுத்தா நாள் காலை (3.30am) பெண்னிட‌ம் இருந்து போன் வ‌ந்த‌து ஹீரோவின் வீட்டுக்கு ஹீரொவின் த‌ந்தையிட‌ம் ஒரு விஸ‌யத்தை சொல்லி ( அப்ப‌லாம் செல்லு கிடையாது)எங்க‌ சித்த‌ப்பா ஒருத்த‌ர் இருக்கார் அவ‌ரிட‌ம் போயி உத‌வி கேளுங்க‌ என்று..ந‌ம்ப‌ ஹீரோவும் அந்த‌ சித்த‌பா வீட்டிற்கு கோல‌ம் போடும் நேர‌த்திற்கு ச‌ற்று முன்பாக‌வே போய் அவ‌ரை தூக்க‌திலிருந்து எழுப்பி விவ‌ர‌த்தை சொல்லி அவ‌ர் வீட்டிலே இருந்து சூடாக‌ காபி சாப்பிட்டு மேலும் விவாதித்து அடுத்து ம‌திய‌ம் ச‌ந்திக‌லாம் என்று அனுப்பிவிட்டார்.......

க‌ன்டிப்பாக‌ இத‌ன் 2ம் பாக‌ம் எழுதுகிறேன்...அதுல‌தான் ச‌ரியான் டிவிஸ்டு இருக்கிற‌து- to be Continue...

16 May 2009

அர‌சிய‌ல் வாந்திக‌ள்....

பா.ம.க‌
இவ‌ர்க‌ளின் திட்ட‌ங்க‌ள் சில‌ நாட்டுக்கு ந‌ல்ல‌துதான் ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் ந‌ம்மை க‌ற்கால‌த்திற்கு அழைத்து சென்றுவிடும்.

கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்திருக்க வேண்டும், ஆனால் பா.ம.க அந்த விஷயத்தில் ரொம்பவும் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வில்லை, மாறாக உடனே அந்த கூட்டணியை விட்டு விலகி எதிரணியில் சேர்வதையே ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்களுடைய கொள்கையாக வைத்திருந்தன.(பணம் சம்பாதிப்ப‌த‌ற்கு)

எப்போது பார்த்தாலும் தாங்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சியின் ஆட்சியை பற்றியே குறை சொல்லிக்கொண்டிருப்பதும், அவர்கள் ஏதாவது புதிய திட்டங்கள கொண்டு வந்தால் அதைஎதிர்ப்பதும், அதைப்பற்றி கேலியும்,கிண்டலும் செய்வதும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் அதை தவிர வேறு எதையுமே உருப்படியாக செய்யவில்லை, ஈழப்பிரச்சனையை கூட இவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டர்களே தவிர அதில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை.
இந்த‌ க‌ட்சிக்கு வாக்க‌ளிக்காத‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!


பார‌திராசா, சீமான், க‌விஞ‌ர் தாம‌ரை ம‌ற்றும் ப‌ல‌ர்....
இவ‌ர்க‌ளுக்கு ஏன் இந்த‌ வேன்டாத‌ வேலை? தேவை இல்லாத‌ அசிங்க‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ( இத்தாலி ச‌ர்வாதிகாரி/ தாலி அறுப்ப‌வ‌ள்/ தொப்புள் கொடி உற‌வுக‌ள்/ என் அண்ண‌ன் பிராபாக‌ர‌ன்,அமாவாசைக்கு அடுத்த‌ நாள் ம‌ற்றும் ப‌ல‌ வீர‌ வ‌ச‌ன‌ங்க‌ள்) இந்த‌ சீமான் யார்? க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ தான் இவ‌ரை தெரியும்.ரொம்ப‌ ஓவ‌ராக‌ உன‌ர்சிவ‌ச‌ப்ப‌ட்டார்க‌ள்.
இந்திய‌ திரு நாட்டில் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கும் போது முக்கிய‌மாக‌ த‌மிழ் நாட்டில் அதிக‌மாக‌வே உள்ள‌து. ஈழ‌ த‌மிழ‌னை ப‌ற்றீ பேச‌ வ‌ந்துவிட்டார்க‌ள். ஈழ‌த்த‌மிழ‌னை கொள்வ‌தை த‌டுத்து நிறுத்த‌வேண்டும் அதில் மாற்று க‌ருத்துஏதும் இல்லை. இவ்வ‌ள‌வு பேசும் நீங்க‌ள் விடுத‌லைபுலிக‌ளை போர் நிருத்த‌ம் ம‌ற்றும் சுய‌ ஆட்சி கொள்கைக‌ள‌ ஏற்று கொள்ள‌ செய்தால் ஈழ‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப‌டுவ‌து நிறுத்த‌ப‌டுமே.


சிறில‌ங்கா ரானுவம் சில‌ புகைப‌ட‌ங்க‌ளை வெளியுட்டுள்ள‌து அந்த‌ புகைப‌ட‌த்தில் பிராப‌க‌ர‌ன் ம‌க‌ன் என் கூற‌ப்ப‌டும் ந‌ப‌ர் உன்மையாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவ‌ரை நான் ஒருமுறை முத‌ல் முறை விமான‌ப‌ய‌ன‌த்தில் ச‌ந்தித்து இருக்கிரேன்.அவ‌ர் இல‌ங்கை த‌மிழ‌ர் என்ப‌தில் ஒரு மாற்று க‌ருத்தும் இல்லை. அவ‌ருட‌ன் க‌தைத்து இருக்கிரேன்...அவ‌ரின் புகைப்ப‌டம் இருக்கிற‌து என்று நினைக்கிறேன். அடுத்த‌ முறை இந்திய‌ ப‌ய‌ன‌த்தில் அதை வெளியுடுகிறேன். அது பிலிம் ரோலில் எடுக்க‌ப‌ட்ட‌து..இல‌க்ட்ரானிக் புகைப்ப‌ட‌ம் கிடையாது.


இந்த‌ ம‌னித‌னைதான் வீர‌ர்/தீர‌ர்/ விமான‌ப‌டையை வ‌ழி ந‌ட‌த்தி செல்லும் ந‌ப‌ர் என்று சில‌ வார‌ங்க‌ளுக்கு முன் ஒரு ப‌த்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்த‌து..lol


யாம் அறிந்த‌ உன்மையான‌ போர‌ட்ட‌த்த‌லைவ‌ர்க‌ள்/ யாரும் நீச்ச‌ல் குள‌ம் க‌ட்டி, மூன்று வேள‌ உன‌வ‌ருந்தி, தின‌மும் ம‌சாஜ் செய்து கொள்வ‌தில்லை. இவ‌ரின் ராச‌யோக‌ வாழ்க்கை சிறில‌ங்கா ரானுவம் ச‌ரியான‌ நேர‌த்தில் வெளியிட்டுவிட்ட‌து. ( பார‌திராசாவின் வீட்டில் கூட‌ நீச்ச‌ல் குள‌ம் கிடையாது)

ம‌திமுக‌/ நெடுமாற‌ன்
இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள‌ ப‌ற்றி க‌வ‌லை படாத‌ இந்திய‌ த‌மிழ் பேசும் வீர‌ர்க‌ள். பிராபாக‌ர‌னிட‌ம் இருந்த‌ ப‌ழைய‌ போர‌ட்ட‌ குண‌ம்/ விடுத‌லை‌ வேட்கையில் இருந்து அவ‌ர் வ‌ழி த‌வ‌ரிவிட்டார் என்று அறிந்தும் அறியாம‌ல் போல் இருப்ப‌வ‌ர்க‌ள். வைகோ வெற்றிபெற்று இருந்தால் அவ‌ருக்கு வெளிநாடு வாழ் த‌மிழ‌ர்( இந்திய‌ர் )குறை தீர்க்கும் துறை அளித்து இருக்க‌லாம்.


காங்கிர‌ஸ், திமுக
வெற்றி க‌ளிப்பிள் அந்த‌ கூட்ட‌ணி இருக்கலாம் ஆனால் வெற்றி என்ப‌து மிக‌சில‌ வாக்கு வித்யாச‌த்தில் தான் என்ப‌தை அவர்க‌ள் உண்ர‌ வேண்டும். ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்யுங்க‌ள் ம‌க‌த்தான‌ வெற்றியை ம‌க்க‌ள் த‌ருவார்க‌ள்.

கார்த்திக் ச‌ர‌த்குமார் பாஜக‌
ப‌ல‌ காம‌டிக‌ளின் ச‌ங்க‌ம‌ம்....


தென் சென்னை வேட்பாள‌ர் ச‌ர‌த்பாபு...
இட்லி வேக வில்லை


align="center">விஜ‌ய‌காந்த்
பிழ‌க்க‌ தெரியாத‌ ம‌னித‌ர்...இவ‌ருக்கு அர‌சிய‌ல் எதிர்கால‌ம் சிர‌(ற‌)ப்பாக‌ இருக்கிர‌து ( ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் மூச் விட‌லையே). கால‌த்திற்கு ஏற்ப‌ அனுச‌ரித்து போனால் தான் ( தொலை நோக்கு பார்வையோடு) அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ முடியும் என்ப‌தை இவ‌ர் இனிமேல் புரிந்து கொள்வார் இல்லை என்றால் சீக்கிர‌ம் க‌ட்சியில் இருந்து அனைவ‌ரும் வில‌கி த‌னியாவ‌ர்த‌ன‌ம் போட‌வேன்டிய‌துதான். தேர்த‌ல் வேலை செய்ய‌ இவ‌ர்க‌ள் க‌ட்சிக்கு தெரிய‌வில்லை.


மு.க‌. பெற்று எடுத்த‌ நான்கு எழுத்து அழ‌கிரி

ப‌ண‌ம், ப‌ன‌ம், ட‌ப்பு மூன்று எழுத்து...அய்யோ என்னை எழுத‌ விட‌லை ப‌ண‌த்தால் அடித்து விட்டார்க‌ள்..

தூத்துகுடி வ‌க்கீல்க‌ள்
த‌மாசு வ‌க்கீல்க‌ள்...ஒரு ப‌ட‌த்தில் வ‌டிவேலு ந‌டித்து இருப்பார் அவ‌ரை மின்ஜி விட்டார்க‌ள்


ஈரோடு வேட்பாள‌ர்
இருவ‌ருமே த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும்..ம‌க்க‌ள் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ளா இல்லை மிக‌வும் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ளா என்று கேட்டால் நான் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ரை தேர்ந்து எடுத்தார்க‌ள் என்று தான் சொல்லுவேன்....அவ‌ர் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர் ஆக‌ இருந்து எந்த‌ பிர‌யாச‌ன‌மும் கிடையாது....
வாக்க‌ளித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி ந‌ன்றி...

11 May 2009

ஓட்டு போட்டு ..go for voting


எல்லாரும் ஓட்டு போட்டு உங்க‌ள் ச‌ன‌நாய‌க‌ க‌ட‌மை ஆற்றுங்க‌ள்.
காலையில் நேர‌மே போய்விட்டு வ‌ந்துவிடுங்க‌ள்.
ந‌ல்ல‌வ‌ர்க‌ளை தேர்ந்து எடுத்து எந்த‌ பிர‌யோச‌ன‌மும் இல்லை. ( அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ஆக‌ இருந்த்து உங்க‌ள் தொகுதிக்கு தேவையான‌ திட்ட‌ங்க‌ள் வ‌ராது)
காலையில் க‌ட‌மை ஆற்றிவிட்டு அலுவ‌ல‌க‌ம் போக‌ மாட்டீர்க‌ள் அத‌னால் மொக்கை போட‌முடிய‌து உங்க‌ளால்... ஆனால் எப்ப‌டிய‌வ‌து வோட்டு நில‌வ‌ர‌த்த புகைப்ப‌ட‌த்துட‌ன் அப்லோடு செய்தால் நன்றாக‌ இருக்கும்.

ர‌வுடிக‌ளிட‌ம் மாட்டி கொள்ளாதிர்க‌ள்...அப்ப‌டியே அடிப‌ட்டாலும் ச‌ன் டீவியில் தோன்றி எதாவ‌து சொல்லுங்க‌ள் ( ச‌ன் ம‌ட்டும் தான் என‌க்கு வ‌ரும் அதான்)

முக்கிய‌மாக‌ த‌ண்ணிய‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு...: வோட்டு போட்டுவிட்டு அப்ப‌ற‌ம் த‌ண்ணிப‌க்க‌ம் போக‌லாம்

ந‌ல்ல‌வித‌மாக‌ சிந்தித்து பார்ட்து ஒரு முறைக்கு இருமுறை ப‌ட்ட‌னை அழுத்த‌வும்.

கையில் மை வைத்து கொண்டு போஸ் கொடுத்து பிளாகில் அப்லோடு செய்ய‌லாம்.

ஈரோடு வ‌லைப்ப‌திவர்க‌ள் க‌ருங்க‌ல்பாளைய‌ம்/செங்குந்த‌ர் ப‌ள்ளி/ வீ ச‌ட்திர‌ம் ப‌ள்ளி/ போன்ற‌ வோட்டு போடும் இட‌ங்க‌ளை புகைப‌ட‌ம் எடுத்து அப்லோடு செய்ய‌லாம்.

மேலும் ஈரோட்டில் ரெண்டு வோட்டு விலைக்கு உள்ள‌து, ந‌ல்ல‌ விலை வ‌ந்தால் கொடுத்டுவிட‌லாம் என்று இருக்கிறேன்...ஒரு ரேட்டு சொல்லுங்க‌ளேன் சார்...
(முன்ன‌ பின்னே இருந்தாலும் அட்ஜ‌ஸ் ப‌ன்னிக‌லாம் சார்)
பின் குறிப்பு: புகைப்ப‌ட‌த்தில் உள்ள‌ அம்மினியை தேடாதீர்க‌ள் அவ‌ர் வோட்டு போட்டு விட்டு போய் விட்டார் ச‌த்திய‌மா அவ‌ர் வோட்டு போடும் போதுதான் இந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுத்த‌து...எடுத்த‌து யாரா??? என்னாங்க‌ கேட்கிறீங்க...காது செரியா கேட்க‌லை....ச‌ரி சரி க‌ட‌மை ஆற்ற‌போங்க‌ள் சார்

12 Apr 2009

ஒரு பழைய மியுசியம்- Woodlands

இந்த வாரம் ரொம்ப போர் அடித்ததால் கூகிள் ஆன்டவரிடம் ஏதாவது இடத்தை காட்டு என்றபோது நிறைய அருளினார்...அவற்றில் அருகில் உள்ளதை தேர்ந்தெடுத்து போனது Woodland, CA -ல் உள்ள பழைய மியுசியம்.



நாம் இப்போது உபயோகபடுத்தும் விவசாயா Equipments- எல்லாம் அவர்கள் 50 வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த ஆரமித்துவிட்டார்கள்.





படத்தில் உள்ள 8ம் நம்பர் கூர் முனை என்ன வென்று தெரிகிரதா?
விடை அறிய மற்றும் முழுவதும் பார்க்க இங்கே கிளிக்கவும்


அதன் முகவரி: 1962 Hays Lane - Woodland, California 95776

(இந்த பதிவு திரு.செந்தில் அவர்களுக்கு ... அவருடைய மலரும் நினைவுகளுக்காக)

10 Apr 2009

அமெரிக்கா-மார்கெட்டிங் கால்ஸ்

இங்கு டு நாட் கால் லிஸ்டில் (Do Not Call) நம்முடைய நம்பரை ஆட் செய்துவிட்டால் கால்ஸ் வராது வந்தால் லீகல் ஆக்ஸன்ஸ் (Legal Action) எடுக்கலாம். நான் என்னுடைய நம்பரை ஏட் சிய்த பிறகு கால்ஸ் வருவது சுத்தமாக குறைந்து போனது.
கடந்த சில நாட்களாக மார்கெட்டிங் கால்ஸ் வர ஆரமித்தது.அதுவும் இந்தியாவில் இருந்து!!!!!அதாவது இந்தியாவிற்கு தொலைபேச காலிங் கார்டு விக்கும் கம்பெனி இனிவருவது எனக்கும் அவர்களுக்கும் நடந்தது

ஹலோ சார் குட் ஐ டாக் டு பீம்பாய்?
யெஸ் திஸ் ஈஸ் ஹி...

சார் வி ஆர் காலிங் பிரம் கிரகாம் டெலிகாம் வி ஏவ் அ நைஸ் ரேட்ஸ் டு கால் இன்டியா, சார் ஆர் யூ அ டமிலியன்?
யெஸ் ஐ ஏம்!!!!!

வணக்கம் சார் நீங்க எந்த காலிங் கார்டு யூஸ் செய்ரீங்க அதவிட சீப் ரேட்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது சார்.
வணக்கம் இது மார்கெட்டிங் காலா?

ஆமாம் சார்
நான் என் நம்பரைதான் Do not call list la Add செய்து இருக்கேனே அப்பறம் எப்படி கால் பண்ரீங்க?

எங்களுக்கு அதெல்லாம் ஏதும் தெரியாது சார் எங்க மேனேஜர் இந்த நம்பரை கொடுத்து கால் பண்ன சொன்னார் சார்.
சரி விஸயத்தை சொல்லுங்க

இந்தியா கால் செய்ய 3.5 சென்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது நீங்க சைன் பன்னுங்க சார்.
இல்லப்பா எனக்கு ஏதும் வேனாம், நான் இந்தியாவிற்கு அதிகம் பேசுவதில்லை.

சார் நீங்க தமிழ்நாடு தானே அப்ப கன்டிப்பாக வீட்டுக்கு பேசுவீங்கதேனே?
இல்லப்பா எனக்கு ஏதும் வேணாம், நாங்க எல்லாம் அதிகம் பேசுவடில்லை..

சார் பிளீஸ்..நீங்க சைன் பன்னால் தான் நான் இந்த வேலையில் கன்டினியு பன்ன முடியும் பிளீஸ் சார்
ஹலோ நீங்க எல்லாம் கால்ஸ் எப்படி ரவுட் செய்ரீங்க?

சார் நாங்க பி.எஸ்.என்.எல் (BSNL) ல வோல்சேல் ரேட்டுல மினிட்ஸ் வாங்கி டிஸ்டிரிபியூட் செய்ரோம் சார்.
இப்படிதான் சொல்லுரீங்க அப்பரம் பார்த்தா VOIP- ல கால்ஸ் ரவுட் செய்ரீங்க..அதனால வேணாம்

சார் பிளீஸ் சார்..
இல்லப்பா வேனாம் வேனாம்..விட்டுடு...

சார் பிளீஸ் சார்..
கால் கட் செய்துவிட்டேன்...பின் என்னங்க மார்கெட்டிங் கால்னா ஒரு கெத்தா பேச வேனாமா? கெஞ்ஜல் இருக்க கூடாது. அதுவும் 1008 சார் போட்டுகிட்டு.
இங்க வந்த பிறகு சார் போடும் பழக்கமே இல்லை சுத்தமா மறந்து போச்சு, யாரவது சார் போட்டால் நமக்கு என்னமோ போல் இருக்குது
(இந்தியாவிலே நான் யாருக்கும் சார் போட்டது கிடையாது)
சில தினங்கள் கழித்து மறுபடியும் கால்....ஹலோ நான் கொஞ்ஜம் பிஸி யா இருக்கேன் ஒரு 10 நிமிசம் கழித்து கூப்பிடுங்ளேன்...

OKey sir!!

கால் வரவே இல்லை
மறுபடியும் இதே டெக்னிக யூஸ் செய்து ஒரு 5 தடவை தட்டி கழித்து விட்டேன்.

இன்று வெள்ளிகிழமை வேலை கிடையாது..வீட்டில் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஒரு தெலுங்கு படம் பார்ட்து கொன்டிருந்தேன். (கோதாவரி thanks to sub title)
நல்ல படம் பிடித்திருந்தது...இந்த படத்தை ரெகமன்டு செய்து டிவிடி யும் நன்பர் கொடுத்து ஒரு வருடம் முழுதாக முடிந்திருந்தது.

ஒரு இனிய பொழுதில் அருமையான் கால் அழைத்தது அதே கம்பெனியில் இருந்து குரல் தேன் குரல் (அதே தான் பொன்னுமா பொன்னு)
வழக்கமான அறிமுகத்திற்கு பிறகு

சார் ஒரு காலிங் கார்டு செம ஆபர் சார் அப்படினு சொல்லுச்சு,
நான் சொன்னேன் எனக்கு சார் போட்ட பிடிக்காதுங்க என்று.

சரி உங்களுக்கு எப்படி பேசனும்னு சொல்லுங்க ...நான் அப்படி பேசுரேனு சொல்லுச்சு.
ஆஹா...இது எனன வித்யாசமா இருக்குது அப்படினு நிமிர்ந்து உட்கார்ந்து ஆத்தா நான் கொங்கு நாடு மனுசன் அதனால கொங்குல பேசுமானு சொன்னேன்...

தேனுங்க ஒரு காலிங்கார்டு இருக்குதுங்க...நம்பள மாரி அய்யனுங்களுக்கு சவ்ரியாமா இருக்கும்னு கூப்டனுங்க ...
ஆஹா காதுல தேனு வந்து பாயுது அப்படினு ஆத்தா கொஞ்ஜம் வெவரத்த சொல்லு ஆத்தா ஆனால் நான் வாங்க மேட்டேன் வேனும்னா கொஞம் வருத்துகொள்கிரேன் அப்படினு சொன்னேன்.

சரி சரி வருத்துகொள்ளுங்கள் என்று கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...
கடலை...கடலை...கடலை...கடலை...

நடுவில் கொஞ்ஜ்ம் கொஞ்ஜம் வாய்ஸ் பிரேக் ஆனது...அப்போது நான் எனாக்கா இதுவும் VOIP தானே அப்படினு கேட்டதுக்கு

இல்லபா இது நிறைய கடலைவருத்ததால் காது அப்பப்ப கேக்காது அப்படினு வெவரமா பதில் சொல்லிச்சு

சரிக்கா..அப்படினா இது மெய்யாலுமே VOIP இல்லியானு கேட்டேன்

அதான் மெய்யாலுமேனு சொல்லிகினுகீர நீ என்னா என்ன நம்பட்ட்கீர அப்படினு தாய் தமிழர் பாஸையில் கலக்கிடுச்சு.

அப்பறம் கேஸ் (GAS) தீர்ந்து..கடலை தீஜ்ஜி மூக்குல smell ஏறி தும்மல் வர ஆரமித்துவிட்டது.

சரிக்கா வச்சிடவனு கேட்டேன்..அப்ப அது கேட்டது பார் ஒரு கேள்வி...அது தான் விசேசம்.

இன்னா நேரம் வறுத்தாயா அதுக்காவது சைன் பன்னுடானு சொல்லுச்சு